>> Wednesday, April 28, 2010


நிர்வாக சேவையில் சிறுபான்மையினர்


இலங்கை நிர்வாக சேவை
இலங்கை நிர்வாக சேவையில் சிறுபான்மை பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தும் வகையிலான உரிய சட்டங்கள் தேவை என்று முன்னாள் நிர்வாக சேவை அதிகாரியான பிரதாபன் இராமானுஜம் தெரிவித்துள்ளார்.

இராமானுஜம் செவ்வி

இலங்கை நிர்வாக சேவையில், அதிலும் குறிப்பாக அமைச்சுக்களின் செயலாளர் போன்ற உயரிய பதவிகளில் சிறுபான்மையினரின் பிரதிநிதித்துவம் போதாது என்று பல தரப்பாலும் குறை கூறப்பட்டு வருகின்றது.

இலங்கையின் புதிய அமைச்சரவையின் பல்வேறு அமைச்சுகளுக்கு தலைமை தாங்கும் செயலாளர்கள் பட்டியல் ஜனாதிபதியால் வெளியிடப்பட்டது.

இந்தப் பட்டியலில் ஓரிரு அதிகாரிகளே, தமிழ், முஸ்லீம் போன்ற இனச்சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள்.

இலங்கை போரின் காரணமாக பல தமிழர்கள் புலம்பெயர்ந்து சென்று விட்டதன் காரணமாகவே அவ்வாறு நிர்வாக சேவையில் போதிய அளவு தமிழர்கள் மற்றும் முஸ்லிம்கள் தற்போது இல்லை என்று இராமானுஜம் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் அத்தகைய சேவைகளுக்கு ஆட்களைச் சேர்க்கின்ற போது சிறுபான்மையினருக்கு இட ஒதுக்கீடு செய்வதற்கான சட்டங்களும் தற்போது இலங்கையில் கிடையாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

முன்னர் ஆர். பிரேமதாஸ அவர்கள் ஜனாதிபதியாக இருந்த காலத்தில் அப்படியான இட ஒதுக்கீட்டுக்கான சட்டங்கள் கொண்டுவரப்பட்ட போதிலும், பின்னர் நீதிமன்ற தீர்ப்பு ஒன்றினால், அந்த ஏற்பாடு ரத்துச் செய்யப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஆகவே அரசியலமைப்புக்கு அமையும் வகையில் அவ்வாறான சட்டம் ஒன்று மீண்டும் கொண்டுவரப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

அதேவேளை அமைச்சு செயலாளர்கள் போன்ற உயர் பதவிகளுக்கான நியமனங்களின் போது ஜனாதிபதி தனது அதிகாரங்களைப் பயன்படுத்தி நிர்வாக சேவைக்கு வெளியே இருந்தும் ஆட்களை நியமிக்க முடியும் என்றும் இராமானுஜம் சுட்டிக்காட்டுகிறார். ஆகவே அப்படியான வசதிகளைப் பயன்படுத்தி சிறுபான்மையினருக்கு சில சாதகமான நியமனங்களை செய்ய முடியும் என்றும் அவர் கூறுகிறார்.

0 comments:

இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter