>> Friday, December 10, 2010


தடையை எதிர்த்து வைகோ வழக்கு


மதிமுக பொதுச்செயலர் வைகோ
இந்தியாவில் விடுதலைப் புலிகள் அமைப்பு மீதான தடை நீடிக்கப்பட்டிருப்பது செல்லும் என்று இந்த தடைகுறித்து விசாரித்த தீர்ப்பாயம் அளித்த தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி 1991 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகள் அமைப்பை சேர்ந்தவரால் கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, விடுதலைப்புலிகள் அமைப்பை பயங்கரவாத அமைப்பு என்று அறிவித்த இந்திய அரசு அதற்கு இந்தியாவில் தடைவிதித்தது.

இந்த தடை இரண்டு ஆண்டு காலத்திற்கு ஒருமுறை தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில்,
விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மீதான தடையை மேலும் 2 ஆண்டுகள் நீட்டிப்பு செய்து மத்திய அரசு கடந்த மே மாதம் ஆணை பிறப்பித்தது.

இந்த தடை நீட்டிப்பு சரியா என்று விசாரித்த இதற்கான தீர்ப்பாயம் விடுதலைப்புலிகள் மீதான தடை நீட்டிப்பை உறுதி செய்து சமீபத்தில் உத்தரவிட்டது.

வைகோ வழக்கு

விடுதலைப்புலிகள் அமைப்பு மீதான இந்திய அரசின் தடை நீட்டிப்பும், அதை உறுதி செய்து தீர்ப்பாயம் அளித்த தீர்ப்பும் தவறு என்று வைகோ சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருக்கிறார்.

இந்த வழக்கு குறித்து பிபிசி தமிழோசைக்கு செவ்வியளித்த வைகோ அவர்கள், இந்திய நடுவணரசு வெளியிட்ட அரசாணையில் விடுதலைப்புலிகள் இயக்கம் இந்தியாவின் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ்நாட்டையும் சேர்த்து தனி நாடாக்க வேண்டி போராடுவது இந்திய இறையாண்மைக்கு எதிரானது என்று கூறி உள்ளதாகவும், விடுதலைப்புலிகள் அப்படி ஒருபோதும் முயலவில்லை என்றும், எனவே, இப்படியான தவறான தகவல்களின் அடிப்படையில் விடுதலைப்புலிகள் அமைப்பு மீதான தடை நீட்டிக்கப்படுவது தவறு என்றும் தனது மனுவில் கூறியிருப்பதாக தெரிவித்தார்.

0 comments:

இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter