>> Monday, December 13, 2010


ஐதேக யாப்பில் மாற்றம்


ஐதேக சின்னம்
இலங்கையின் முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் யாப்பில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் உயர்நிலை மாநாடு ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் நடைபெற்றது. ஒரு வழக்கின் மூலம் தடுக்கப்பட்டிருந்த அந்த மாநாடு, அந்த வழக்கின் தீர்ப்பு கடந்த வெள்ளியன்று வெளியானதை அடுத்து ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

அதில் கட்சியின் யாப்பில் முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டதாக அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான ஆர். யோகராஜன் தமிழோசையிடம் தெரிவித்தார்.

இதுவரை காலமும் இருந்த நிலைமைக்கு மாறாக கட்சியின் தலைவர் மற்றும் ஏனைய முக்கிய பதவிகளுக்கானவர்கள் வருடா வருடம் நடக்கும் தேர்தலின் மூலம் தேர்வு செய்யப்பட வேண்டும் என்று யாப்பில் திருத்தம் செய்யப்பட்டதாக யோகராஜன் தெரிவித்தார்.

இந்தத் தேர்தலில் கட்சியின் நிறைவேற்று சபையின் அங்கத்தவர்களும், நாடாளுமன்றக் குழு அங்கத்தவர்களும் கலந்து கொள்வார்கள்.

அடுத்த மூன்று மாதங்களுக்குள் கட்சியின் முக்கிய பதவிகளுக்கான தேர்தல்கள் நடத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

0 comments:

இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter