>> Tuesday, December 21, 2010
ராசாவுக்கு சி.பி.ஐ. சம்மன்
தொலைதொடர்புத்துறை முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா
2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பான விசாரணையில் எதிர்வரும் புதன்கிழமையன்று (22 டிசம்பர்) விசாரணைக்கு வர வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர் ஆ ராசாவுக்கு மத்திய புலனாய்வுத்துறையான சி.பி.ஐ. சம்மன் அனுப்பியிருக்கிறது.
தொலைபேசி நிறுவனங்களுக்கு அலைக்கற்றை ஒதுக்கப்பட்டதில் ஊழல் நடைபெற்றதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்ததைத் தொடர்ந்து தொலைத்தொடர்பு அமைச்சர் பதவியிலிருந்து திமுகவைச் சேர்ந்த ஆ. ராசா ராஜினாமா செய்தார்.
தொடர்ந்து சிபிஐ ராசாவின் உறவினர்கள், மற்றும் அவருக்கு நெருக்கமானவர்கள் என்று கூறப்படும் பலரது வீடுகளிலும் அலுவலகங்களிலும் சோதனை நடத்தி, வழக்கு தொடர்பான ஆவணங்களைக் கைப்பற்றியதாக்க் கூறியது.
இந்நிலையில் ராசா விசாரணைக்கு வரவேண்டுமென சி.பி.ஐ.யிடமிருந்து உத்தரவு அனுப்பப்பட்டது.
சம்மனைப் பெற்றுக்கொண்ட சில மணிநேரங்களில் அவர் தனியார் மருத்துவமனைக்குச் சென்றார். அது வழக்கமான பரிசோதனைதான் என்று பின்னர் தெரிவிக்கப்பட்ட்து.
இதனிடையே ராசா முன்ஜாமீன் மனு கொடுக்க முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால் அவர் அச்செய்தியை மறுத்துள்ளார்.
நான் சிபிஐயைக் கண்டு பயப்படவில்லை. நான் ஒரு வக்கீல். ஒரு வக்கீல் என்ற முறையில், சட்டத்தை நான் மதிப்பேன். சட்டத்திலிருந்து தப்ப முயல மாட்டேன்.
ஆ.ராசா
தான் இதுவரை குற்றவாளியாக அறிவிக்கப்படவில்லை. எனவே முன்ஜாமீன் கோருவது என்ற பேச்சுக்கே இடமில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.
கருணாநிதி பதில்
சி.பி.ஐ. சம்மன் குறித்து முதல்வர் கருணாநிதியிடம் கேட்டபோது, "அவ்வாறு சம்மன் அனுப்ப்ப்படுவதில் ஆச்சரியப்பட ஏதுமில்லை, சோதனைகள் நடைபெற்ற பிறகு கேள்விகள் கேட்பது வழக்கம். அந்த முறையில் கேள்விகளை அவர்கள் கேட்கக் கூடும். அதற்கு ராசா பதில் சொல்லுவார்" என்றார்.
சி.பி.ஐ. சோதனையிலும் கவலைப்பட ஏதுமில்லை என்றார் முதலவர்.
அவமரியாதைகளை எல்லாம் தாங்கி வளர்ந்த இயக்கம் தான் சுயமரியாதை இயக்கம். எனவே சி.பி.ஐ. சோதனைகளை தி.மு.க.வுக்கு ஏற்பட்ட அவமரியாதையாக கருதவில்லை.
முதல்வர் கருணாநிதி
மேலும் ராசாவின் மீதான் குற்றம் நிரூபிக்கப்பட்டால் நடவடிக்கை உண்டு என்று முதல்வர் மீண்டும் வலியுறுத்தினார் .
தி.மு. கழகத்திற்கும் காங்கிரசுக்கும் இடையிலான உறவு எப்படி உள்ளது என்று கேட்டபோது, "அதை உங்களால் வெட்ட முடியாது" என்று அவர் பதிலளித்தார்.
0 comments:
Post a Comment