>> Saturday, December 4, 2010

பத்தாயிரம் பேருக்கு பணி நிரந்தரம்

தமிழ்நாட்டில் உள்ள என்எல்சி எனப்படும் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் கடந்த 30 ஆண்டுகளாக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிவரும் 10 ஆயிரம் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யுமாறு என்எல்சி நிர்வாகத்துக்கு இந்திய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வழக்கறிஞர் ஆனந்த செல்வம் செவ்வி

ஏற்கெனவே, சென்னை உயர்நீதிமன்றத்தில் அந்தத் தொழிலாளர்கள் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில், அவர்களைப் பணி நிரந்தரம் செய்ய உத்தரவிடப்பட்டது. அதை எதிர்த்து நிர்வாகத் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை உயர்நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் தள்ளுபடி செய்தது.

அதையடுத்து, உச்சநீதிமன்றத்தில் நிர்வாகத் தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. அதுதொடர்பாக வெள்ளிக்கிழமை டி.கே. ஜெயின் தலைமையிலான உச்சநீதிமன்ற பெஞ்ச் அளித்த தீர்ப்பில், தொழிலாளர்கள் பணியில் சேர்ந்த தேதியில் இருந்து நிரந்தரம் செய்யப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.

ஏற்கெனவே, கடந்த ஆகஸ்ட் மாதம் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில், 1990-ம் ஆண்டை அடிப்படையாகக் கொண்டு ஒரு கூட்டுறவு சங்கத்தை ஆரம்பித்து, அதில் தொழிலாளர்களை உறுப்பினராக்கி, அதன் அடிப்படையில் தொழிலாளர்களின் பணிமூப்பு குறித்து முடிவெடுப்பதாக நிர்வாகத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், நீதிமன்றம் அந்தக் கருத்தை நிராகரித்துவிட்டதாக பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார் இந்த வழக்கில் தொழிலாளர்கள் தரப்பில் ஆஜரான உச்சநீதிமன்ற வழக்கறிஞர் ஆனந்த செல்வம்.

0 comments:

இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter