>> Monday, February 22, 2010









நாடாளுமன்ற தேர்தலில் த.தே.கூ எம்.பிக்களில் மீண்டும் எத்தனை பேருக்கு வாய்ப்பு - சுரேஸ் பிரேமசந்திரன் செவ்வி
இலங்கையில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள பொது தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் முன்னர் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்தவர்களில் வெளிநாடுகளுக்கு சென்று வசிப்பவர்கள், ஒய்வு பெற்றவர்கள் மற்றும் கடந்த ஜனாதிபதி தேர்தலில் தனியாக போட்டியிட்டு அதனை ஆதரித்து கட்சியில் இருந்து விலகியவர்களை தவிர மற்றவர்கள் போட்டியிடுவார்கள் என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.
முன்னர் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்த அனைவரும் அடுத்த தேர்தலில் போட்டியிட வேண்டும் என்ற நியதி இல்லை என்பதால் அது தொடர்பில் வெளியாகும் ஊகங்கள் அர்த்தமற்றவை எனவும் அவர் தெரிவித்தார்.
இலங்கை ஊடகவியலாளர் குறித்து எவ்வித தகவலும் இல்லை என மனைவி புகார்
ஊடகவியலாளரின் குடும்பம்
இலங்கையில் கடந்த ஜனாதிபதி தேர்தலுக்கு இரண்டு தினங்களுக்கு முன்னர் காணாமல போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட தொடர்பில் இதுவரை எவ்வித தகவல்களும் இல்லையென அவரது மனைவி கூறியுள்ளார்.
ஜனாதிபதி தேர்தலின் போது எதிரணிகளின் பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கு ஆதரவாக செய்தி இணையதளமொன்றில் கருத்துக்களை எழுதி வந்த நிலையில் பிரகீத் காணாமல் போயிருந்தார்.
இந்த நிலையில் அவர் காணாமல்போய் ஒருமாதம் கடந்துள்ள போதிலும் பொலிசாரின் விசாரணையில் எவ்வித முன்னேற்றமும் இல்லையெனவும் அதிகாரிகளிடம் அவரை கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்வதாகவும் ஊடகவியாளர் பிரகீத்தின் மனைவி சந்த்யா எக்னலிகொட குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில், அவரைக்கண்டுபிடிக்கும் பணியில் நீதிமன்றம் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் சில தினங்களுக்கு முன்னர் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.
ஊடகவியாளரை கண்டுபிடிக்கும் விசாரணைகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டுவருவதாக இலங்கைப் பொலிஸ் பேச்சாளர் பிபிசியிடம் கூறினார்.
தெலுங்கானா விவகாரத்தில் மேலும் ஒரு மாணவர் தீக்குளித்து பலி
தெலுங்கானா போராட்டம்
ஆந்திர மாநிலத்தில் இருந்து தெலுங்கானாவை தனியாக பிரிப்பதில் உள்ள தாமதத்தை எதிர்த்து நடைபெற்ற போராட்டத்தின் போது தீக்குளித்த மாணவர் இறந்துவிட்டதாக ஐதரபாத் நகர போலீசார் கூறுகின்றனர்.
தெலுங்கானாவை தனி மாநிலமாக உருவாக்க வேண்டும் என்று கோரி நூற்றுக்கணக்கான மாணவர்கள் டிசம்பரில் இருந்து தொடர்ந்து போராட்டம் நடத்திவருகின்றனர்.
வன்முறைகள் தொடர்ந்ததன் காரணமாக புதிய மாநிலத்ததை அமைக்கும் பணிகளை மத்திய அரசு நிறுத்தியது. தகவல் தொழில்நுட்பம், மற்றும் மருந்து நிறுவனங்கள் பல அமைந்துள்ள ஐதராபாத் தெலுங்கானாவின் பகுதியாக இருக்க வேண்டும் என்று ஆர்பாட்டக்காரர்கள் விரும்புகின்றனர்

0 comments:

இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter