>> Monday, November 29, 2010


கிருஷ்ணா தமிழ் பிரதிநிதிகளை சந்திக்க வில்லை


எஸ்.எம்.கிருஷ்ணா மற்றும் மகிந்த


இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா தனது மூன்று நாள் இலங்கை விஜயத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பியுள்ளார்.
எஸ்.எம்.கிருஷ்ணா சிறுபான்மை சமூக அரசியல் கட்சிகளின் தலைவர்களை சந்திப்பார் என எதி்ர்பார்க்கப்பட்ட போதிலும், ஸ்ரீலங்கா முஸ்லிம் கட்சி தலைவர்களுக்கு மட்டுமே அந்த வாய்ப்பு கிட்டியுள்ளது.

வடக்கு கிழக்கு மீள்குடியேற்ற விடயங்கள், அரசியல் தீர்வுத்திட்டம் உள்ளிட்ட முக்கிய விடயங்கள் குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் தம்முடன் கலந்துரையாடியதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் துணைப் பொதுச்செயலாளர் நிசாம் காரியப்பர் தமிழோசையிடம் தெரிவித்தார்.

தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வுத்திட்டம் குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டியுள்ள முக்கிய அரசியல் சூழ்நிலையில், இந்திய உயர்மட்ட அமைச்சர் ஒருவர் தமிழ்க்கட்சிகளின் பிரதிநிதிகளை சந்திக்காது விஜயத்தை முடித்துக்கொண்டுள்ளமை தமிழ் மக்களுக்கு ஏமாற்றமளிக்கும் விடயம் என இலங்கை அரசியல் ஆய்வாளர் கலாநிதி கீதபொன்கலன் தமிழோசையிடம் சுட்டிக்காட்டினார்.

இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் வலுக்கின்றமையை உணர்ந்த இந்தியா, தனது கட்டுப்பாட்டை மீள உறுதிப்படுத்த முனையும் நடவடிக்கையாகவும் இந்திய அமைச்சரின் இந்த விஜயத்தை பார்க்க முடியுமெனவும் கீதபொன்கலன் கருத்து தெரிவித்தார்.

0 comments:

இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter