>> Thursday, November 11, 2010


வட இலங்கையில் மருத்துவர்கள் பற்றாக்குறை


வட இலங்கையில் மருத்துவர்கள் பற்றாக்குறை என செய்திகள்
இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் மாவட்ட மருத்துவமனைகளில் வைத்தியர்களுக்கு பெரும் பற்றாக்குறை நிலவுவதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றார்கள்.
இந்தப் பற்றாக்குறையைப் போக்கும் வகையில் நாட்டின் தென்பகுதி மாவட்டங்களில் பணியாற்றுகின்ற வைத்தியர்களை வந்து பணியாற்றுமாறு பகிரங்கமாக அழைப்பு விடுக்கப்பட்டிருக்கின்றது.

போர்ச்சூழல் காரணமாகவும், போர் நடைபெற்ற காலங்களில் யாழ் குடாநாடு நாட்டின் ஏனைய பிரதேசங்களில் இருந்து தரைவழித் தொடர்பின்றி துண்டிக்கப்பட்டிருந்ததனாலும், அரசாங்கத்தினால் நியமனம் வழங்கப்பட்ட போதிலும், அநேகமான வைத்தியர்கள் யாழ்ப்பாணத்திற்கு வரவில்லை. அல்லது அத்தகைய நியமனங்களை ரத்து செய்துவிட்டு அவர்கள் வெளிமாவட்டங்களில் பணியாற்றி வருவதாக அதிகாரிகள் கூறுகின்றார்கள்.

இதனால் வைத்தியர்களுக்கான பற்றாக்குறை யாழ் மாவட்டத்தில் பல வருடங்களாகத் தொடர்ந்து நிலவி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்தப் பற்றாக்குறையைப் போக்குவதற்கு நாட்டின் தென்பகுதி மாவட்டங்களில் பணியாற்றுகின்ற யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வைத்தியர்கள் எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் அவ்வாறான விண்ணப்பங்களுக்கு இடம் மாற்ற உத்தரவு சுகாதார அமைச்சினால் வழங்கப்படும் என சுகாதார அமைச்சரினால் உறுதியளிக்கப்பட்டு அதற்கான சுற்றறிக்கையும் வெளியிடப்பட்டிருக்கின்றது.

அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள இந்த சுற்றறிக்கையையும். யாழ் மாவட்டத்தின் இன்றைய நிலைமைகளையும் கருத்திற்கொண்டு, தற்போது வெளிமாவட்டங்களில் உள்ள யாழ்ப்பாணத்தைச் சொந்த இடமாகக் கொண்ட வைத்தியர்களை யாழ் மாவட்டத்திற்குத் திரும்பி வருமாறு யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஆறுமுகம் கேதீஸ்வரன் அழைப்பு விடுத்திருக்கின்றார்.

0 comments:

இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter