>> Saturday, November 27, 2010


இந்தியா கபடியில் இம்முறையும் தங்கம்


1990 ஆம் ஆண்டிலிருந்து இந்தியா தொடர்ந்து தங்கம் வென்று வருகிறது
1990 ஆம் ஆண்டிலிருந்து இந்தியா தொடர்ந்து தங்கம் வென்று வருகிறது
சீனாவின் குவாங் ஸு நகரில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், இந்திய ஆடவர் மற்றும் மகளிர் கபடி அணியினர் தங்கப் பதக்கம் வென்றார்கள்.

ஆடவர் கபடி அணியினர், 38 க்கு 20 என்ற புள்ளிகள் கணக்கில், ஈரான் அணியைத் தோற்கடித்தனர். இதன் மூலம், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் கபடிப் போட்டி அறிமுகப்படுத்தப்பட்ட 1990-ம் ஆண்டு முதல் இந்தியா தொடர்ந்து தங்கப்பதக்கம் வென்று வருகிறது.

இந்திய மகளிர் அணியினர், 28-க்கு 14 என்ற கணக்கில் தாய்லாந்து அணியை வீழ்த்தி தங்கம் வென்றார்கள்.

400 மீட்டர் தொடர் ஓட்டப் போட்டியிலும் இந்திய மகளிர் பிரிவினர் தங்கப்பதக்கம் வென்றார்கள். கடந்த 2006-ஆம் ஆண்டு தோஹாவில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலும் இதே அணி தங்கம் வென்றது. கடந்த மாதம் டெல்லியில் நடந்த காமன்வெல்த் போட்டிகளிலும் அந்த அணி தங்கம் வென்றது.

குத்துச்சண்டையில் 75 கிலோ எடைப் பிரிவில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியாவின் விஜேந்தர் சிங், உஸ்பெகிஸ்தான் வீரர் அடோவை வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்றார்.

இந்த வெற்றிகளின் மூலம் இந்திய அணி 14 தங்கப்பதக்கங்களுடன் மொத்தம் 64 பதக்கங்களை வென்று பதக்கப்பட்டியலில் 6 வது இடத்தில் உள்ளது.

சீனா முதலிடத்திலும், தென்கொரியா, ஜப்பான் அணிகள் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்திலும் உள்ளன.

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் முதல் முறையாக அறிமுகம் செய்யப்பட்ட டி-20 கிரிக்கெட் போட்டிகளில், வங்கதேச அணி, ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்றது.

0 comments:

இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter