>> Thursday, October 21, 2010


புலிகள்தடை நீடிப்பு பற்றி தீர்ப்பாயம்


வைகோ
இந்தியாவில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடையினை நீட்டிப்பது குறித்து விசாரணை நடத்திவரும் நீதிபதி விக்ரமஜித் தலைமையில் மத்திய தீர்ப்பாயம் புதன்கிழமை ஊட்டியில் கூடியது.
இந்த விசாரணையின் போது சாட்சியமளித்த மத்திய உள்துறை அதிகாரி பி.கே மிஸ்ராவிரிடம் வைகோ, பழ.நெடுமாறன் ஆகியோர் சார்பில் குறுக்கு விசாரணை செய்யப்பட்டது.

இதன்போது மத்திய உள்துறை அதிகாரி பி.கே. மிஸ்ரா, 'விடுதலைப் புலிகள் மீதான ஆதரவு எல்லா மாநிலங்களிலும் பரவியிருக்கிறது. நாடு கடந்த தமிழீழ அரசு அமைப்பதற்கான சாட்சியங்கள் இருக்கின்றன. இந்த அமைப்பின் மூலம் பல கிளர்ச்சிகள் நடக்கின்றன. எனவே தான் தடை விதித்திருக்கிறோம். அமெரிக்க, ஐரோப்பிய கண்டங்களில் பல நாடுகளில் இந்த இயக்கத்திற்கு தடை உள்ளது’ என்றார்.

உடனே வைகோ, ‘அதற்கு ஆதாரம் இருக்கிறதா’? என்று கேட்டபோது, ‘தடை இல்லை என்பதற்கு உங்களிடம் என்ன ஆதாரம் இருக்கிறது’ என்று கேட்டார் மிஸ்ரா.’ ஊடகங்களின் செய்திகள் தான் அதற்கு ஆதாரம்’ என்று வைகோ கூறினார்.

சிறைவாசிகளின் உரிமைகளுக்கான அமைப்பின் சார்பாகவும் விடுதலைப் புலிகளுக்கு தடைவிதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

மத்திய தீர்ப்பாயத்தின் மறு கூட்டம் சென்னையில எதிர்வரும் அக்டோபர் 28 திகதியன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

0 comments:

இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter