>> Friday, October 8, 2010


நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிப்பு


சரத் பொன்சேகா

இலங்கையின் முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகா தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்துவிட்டதாக இலங்கை நாடாளுமன்ற அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஜனநாயக தேசிய முன்னணியின் தலைவர் சரத் பொன்சேகா ராணுவ நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு சிறையில் தண்டனை அனுபவிக்கத் துவங்கியிருப்பதால் அவர் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்துவிட்டதாக இலங்கை நாடாளுமன்றத்தின் செயலாளர் நாயகம் இலங்கையின் தேர்தல் ஆணையருக்கு கடிதம் எழுதியிருப்பதாக, துணை தேர்தல் ஆணையர் பிபிசி சந்தேஷ்யவிடம் தெரிவித்திருக்கிறார்.

சரத் பொன்சேகாவின் பதவியிழப்பால் ஏற்பட்டிருக்கும் வெற்றிடத்திற்கு புதிய நபரை நியமிக்கும்படி தேர்தல் ஆணையர் தயானந்த திஸ்ஸநாயகவிடம், இலங்கை நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக கிதுலகொட கேட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

ஆனால் இந்த கடிதத்துக்கு ஜனநாயக தேசிய முன்னணி எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது. இந்த பதவி பறிப்பு தவறு என்று அந்த கட்சி தெரிவித்துள்ளது.

இது தொடர்பான கேள்விகளுக்கு நாடாளுமன்றத்தில் பதில் அளித்த துணை சபாநாயகர் பிரியங்கர ஜெயரட்ன, இலங்கை அரசியல் சட்டத்தின் அடிப்படையிலேயே சரத்பொன்சேகாவின் பதவி பறிக்கப்பட்டதாக தெரிவித்திருக்கிறார்.

0 comments:

இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter