>> Tuesday, October 5, 2010


மருத்துவ நோபல் பரிசு அறிவிப்பு


குழந்தைகளுடன் டாக்டர் எட்வர்ட்ஸ்
மருத்துவத் துறைக்கான இந்த ஆண்டின் நோபல் பரிசு பிரிட்டிஷ் விஞ்ஞானி ராபர்ட் எட்வர்ட்ஸுக்கு வழங்கப்படுகிறது.
1988 ஆம் ஆண்டு மரணமடைந்த பாட்ரிக் ஸ்டெப்டோப்புடன் இணைந்து அவர் மேற்கொண்ட ஆராய்ச்சிகள் சோதனைக் குழாய் குழந்தைகளுக்கு வழி வகுத்தன.

இவர்களது ஆராய்ச்சியானது மனிதக் கருவை உடலுக்கு வெளியே உருவாக வைத்து அதை கருப்பைக்குள் செலுத்தும் தொழில்நுட்பத்துக்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்தது. அப்படி உருவாக்கப்பட்ட ஒரு கரு கருப்பையினுள் செலுத்தவும் பட்டது.

1950 களில் தொடங்கப்பட்ட அவரது ஆய்வுகளின் மூலம் 1978 ஆம் ஆண்டு உலகின் முதல் சோதனைக் குழாய் குழந்தை பிறக்க வழி செய்தது.

அதற்கு பிறகு சோதனை குழாய் மூலமாக நாற்பது லட்சம் குழந்தைகள் பிறந்துள்ளன.

உலகளவில் பத்து சதவீதமான மக்கள் மலட்டுத் தன்மையால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், டாக்டர் எட்வர்ட்ஸின் ஆய்வுகள் அந்தத் தன்மையிலிருந்து விடுபடுவதற்கு வழி ஏற்படுத்திக் கொடுத்தது என்று நோபல் பரிசுக் குழு தெரிவித்துள்ளது

0 comments:

இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter