>> Saturday, October 30, 2010




மூன்று மாதமாகத் தவிக்கும் வெள்ள அகதிகள்


பாகிஸ்தானின் ஐந்தில் ஒரு பகுதி வெள்ளத்தில்
பாகிஸ்தானில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, நாட்டின் ஐந்தில் ஒரு பங்கு அதனால் மூழ்கடிக்கப்பட்டு, 2 கோடி மக்கள் பாதிக்கப்பட்டு மூன்று மாதங்கள் ஆகிவிட்டன. ஆனாலும், சுமார் 70 லட்சம் பேர் இன்னமும் தங்க இடமில்லாமல் அவதியுறுகிறார்கள்.
வாந்திபேதியும் மற்றும் போஷாக்கின்மையும் அங்கு பரவி வருகின்றன.

குளிர்காலம் நெருங்கி வருகின்ற நிலையில் நிலைமை மேலும் மோசமான கட்டத்துக்குள் சென்று கொண்டிருப்பதாக உதவி நிறுவனங்கள் கூறுகின்றன.

உயிர்களைக் காப்பாற்றுவதற்கு கொடையாளிகளிகளின் உதவி உடனடியாகத் தேவை என்று ஐக்கிய நாடுகள் சபை கூறுகிறது.



பாகிஸ்தானின் தென்பகுதி மாகாணமான சிந்து மாகாணத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அண்மையில் சென்று வந்த எமது செய்தியாளர் ''தமக்கு எந்தவிதமான உதவியும் கிடைக்கவில்லை'' என்று மக்கள் குறை கூறுவதாகக் கூறினார்.

பலர் போஷாக்கின்மையால் பாதிக்கப்பட்ட தமது குழந்தைகளுக்கு கொடுக்க உணவின்றி தவிக்கிறார்கள்.

இன்னமும் பல இடங்களில் வெள்ள நீர் வடியவில்லை. எப்போதாவது வரும்

உதவிகள் கூட அங்கு காத்துக்கிடக்கும் மக்களுக்கு போதுமானவையாக இல்லை.

போஷாக்கின்மையால் பாதிக்கப்பட்ட குழந்தைகளைக் கூட மருத்துவமனைகளில் பார்க்க முடிகிறது.

தமது சொந்த அரசாங்கமும், சர்வதேச சமூகமும் தம்மை கைவிட்டு விட்டதாக மக்கள் புலம்புகிறார்கள்.

0 comments:

இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter