>> Wednesday, July 10, 2013

இளவரசன் உடல் மீது மறு பிரேதப் பரிசோதனை: உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பு

மறுபரிசோதனை : நாளை தீர்ப்பு
தர்மபுரி இளைஞன் இளவரசனின் மரணத்தில் மர்மங்கள் இருக்கின்றன எனவே இரண்டாவது பிரேதப் பரிசோதனை வேண்டுமெனக் கோரி இளவரசனின் நண்பர் ரமேஷ் என்பவர் தாக்கல் செய்துள்ள மனு மீதான தீர்ப்பினை நாளை புதன் சென்னை உயர்நீதிமன்றம் வழங்க இருக்கிறது.
அது குறித்த அறிவிப்பு இன்று மாலை வெளியானது.
முன்னதாக நீதிபதிகள் தனபாலன் மற்றும் செல்வம் ஆகியோர் தர்மபுரி அரசு மருத்துவமனையில் நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையின் வீடியோ பதிவினை பார்த்தனர். அப்போது மாநில, மத்திய அரசுகள், மற்றும் மனுதாரர் தெரிவு செய்த மருத்துவர்களும் உடனிருந்தனர்.
சில மருத்துவர்கள் மீண்டுமொரு பரிசோதனைக்குப் பரிந்துரை செய்திருப்பதாகத் தெரிகிறது.
இதனிடையே இளவரசனின் மரணம் குறித்த புலன்விசாரணை புகழ்பெற்ற தடவியல் ஆய்வாளர் சந்திரசேகரன் தலைமையிலே நடக்கவேண்டும் எனக்கோரி மனுச் செய்திருக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் இளவரசனின் பெற்றோர்கள் விரும்பும் வண்ணம் மரணம் குறித்து விசாரிக்க தமிழக அரசு ஓய்வுபெற்ற நீதிபதி சிங்காரவேலருக்கு பதிலாக வேறு ஒருவரை நியமிக்கவேண்டுமெனவும் திருமாவளவன் கேட்டுக்கொண்டார்.

0 comments:

இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter