>> Wednesday, January 27, 2010

ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்குப் பதிவு முடிந்தது
இலங்கை ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்குப் பதிவு செவ்வாய்க்கிழமை மாலை 4 மணியோடு முடிவடைந்துள்ளது. தற்போது வாக்கு எண்ணும் பணி துவங்கியுள்ளது. முடிவுகள் புதன் மதியம் அளவில் தெரியவரும்.
விடுதலைப் புலிகள் அமைப்பு தோல்வியடைந்ததை அடுத்து இலங்கையில் 25 ஆண்டுகால உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்துள்ளதன் பின்னர் அங்கு நடக்கும் முதல் அதிபர் தேர்தலில் வாக்களிப்பதற்காக தலைநகர் கொழும்பிலும், நாட்டின் தெற்குப் பகுதிகளிலும் பெருமளவான மக்கள் திரண்டுவந்து வாக்களித்துள்ளனர்.
வாக்குப் பதிவை ஒட்டி தலைநகர் கொழும்பில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்ததாக அங்கிருக்கும் பிபிசி செய்தியாளர் அன்பரசன் தெரிவிக்கிறார்.
ரத்தினபுராவில் வாக்களிக்க வந்த மக்கள் கூட்டம் தேசிய அளவில் பார்க்கையில் 71 சதவீத வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர் என்றாலும் தமிழர்கள் அதிகம் வாழும் வட பகுதியில் வாக்களிப்பு மிகவும் குறைவாக இருந்தது என சுயாதீன கண்காணிப்புக் குழு ஒன்று பிபிசியிடம் தெரிவித்துள்ளது.
வட பகுதியில் வாக்குப் பதிவு பத்து சதவீதத்திற்கும் சற்றுக் கூடுதலாக உள்ளது. இடம்பெயர்ந்த தமிழ் மக்கள் பெரு எண்ணிக்கையானோர் போக்குவரத்து சிரமங்கள் காரணமாக வாக்களிக்க முடியாமல் போயுள்ளது .
யாழ்ப்பாணத்தில் குண்டுவெடிப்பு
யாழ்பாபாணத்தில் திங்கள் இரவும், செவ்வாய் அதிகாலையும் பல இடங்களில் குண்டு வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாகவும். இது பொதுமக்களை பெரிய அளவில் அச்சுறுத்தியதாகவும் யாழ்ப்பாணத்தில் இருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் தமிழோசையிடம் தெரிவித்தார்.
வடக்கே வாக்களிப்பு மந்தமாக இருந்ததுவட பகுதியில் வாக்குப் பதிவு பத்து சதவீதத்திற்கும் சற்றுக் கூடுதலாக உள்ளது. இடம்பெயர்ந்த தமிழ் மக்கள் பெரு எண்ணிக்கையானோர் போக்குவரத்து சிரமங்கள் காரணமாக வாக்களிக்க முடியாமல் போயுள்ளது .
யாழ்ப்பாணத்தில் இன்று குறைந்தது ஆறு வெடிச்சத்தங்கள் கேட்டுள்ளன. நாட்டின் மையப் பகுதியிலும் தெற்கிலும் சிங்கள மக்கள் அதிகம் வாழும் இடங்களிலும் சில கையெறி குண்டுத்தாக்குதல்கள் நடந்துள்ளன.
வவூனியா முகாம்களில் உள்ளவர்களில் பலர் வாக்களிக்க முடியாத நிலை இருந்ததாகவும், சரியான ஏற்பாடுகள் இல்லாததன் காரணமாக, மீள் குடியேற்றம் செய்யப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த பலரால் வாக்களிக்க முடியவில்லை என்று ஜனாதிபதித் தேர்தலில் சுயேச்சையாக போட்டியிடும் வேட்பாளரான எம் கே சிவாஜிலிங்கம் தமிழோசையிடம் தெரிவித்தார்.
அதிபர் தேர்தலில் 22 பேர் போட்டியிடுகின்றனர் என்றாலும் தற்போதைய அதிபர் மஹிந்த ராஜபக்ஷவும், விடுதலைப் புலிகளுக்கு எதிராக அரச படையினரை வெற்றிக்கு இட்டுச்சென்ற ஜெனரல் சரத் ஃபொன்சேகாவுமே முக்கியப் போட்டியாளர்களாக அமைந்துள்ளனர்.
சிறப்பு ஏற்பாடு
திருகோணமலை மாவட்டத்தில் சில வாக்குச் சாவடிகளில் இருந்து வாக்குப் பெட்டிகள் ஹெலிகாப்டர் மூலமாக கொண்டுவரப்பட்டன.

0 comments:

இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter