வழக்கறிஞர்கள்-போலிசார் மோதல் விவகாரம்

>> Friday, October 30, 2009

வழக்கறிஞர்கள்-பொலிசார் மோதல் விவகாரம்: காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க சென்னை நீதிமன்றம் உத்தரவு

சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் காவல்துறையினருக்கும் வழக்கறிஞர்களுக்கும் இடையே கடந்த பிப்ரவரி 19ஆம் நாளன்று நடந்த மோதல் சம்பவத்திற்கு நான்கு உயர் போலீஸ் அதிகாரிகளே பொறுப்பு எனக்கூறி, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் சென்னை மாநகர காவல்துறை ஆணையரும் தற்போதைய சட்டம்-ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி.யுமான ராதாகிருஷ்ணன், முன்னாள் கூடுதல் ஆணையர் விஸ்வநாதன், இணை ஆணயர் ராமசுப்பிரமணியன் மற்றும் துணை ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா ஆகியோர் மீது துறை-ரீதியிலான நடவடிக்கை எடுக்கலாம் என உத்தரவிடப்பட்டுள்ளது.

ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணியம் சாமி மீது முட்டை எறிந்து தாக்குதல் நடத்திய வழக்கறிஞர் சிலரைக் கைதுசெய்ய போலீஸார் உயர்நீதிமன்ற வளாகத்திற்குச் சென்றபோதுதான் இந்தப் பெரிய மோதல் மூண்டிருந்தது.

உச்சநீதிமன்ற உத்திரவின் பேரில் இந்தச் சம்பவம் தொடர்பான அனைத்து வழக்குக்களையும் சென்னை உயர் நீதிமன்றம் விசாரித்துவந்தது.

ஏறத்தாழ 20 நாட்கள் விசாரணைக்குப்பின் நீதிபதிகள் இப்ராகிம் கலிபுல்லா மற்றும் பானுமதி அடங்கிய டிவிஷன் பெஞ்ச் தனது தீர்ப்பினை வழங்கியுள்ளது.



--------------------------------------------------------------------------------


இந்தோனேஷியாவில் படகிலுள்ள இலங்கை அகதிகள் தொடர்பில் முடிவெடுப்பதில் சிக்கல்




இலங்கை அகதிகளை சுமந்துகொண்டு ஆஸ்திரேலியா நோக்கி சென்ற இரண்டு படகுகள் இந்தோனேஷியாவில் இருவேறு இடங்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த அகதிகளை என்ன செய்வது என்று முடிவெடுக்க முடியாமல் இந்தோனேஷிய அரசாங்கம் திணறிவருகிறது.

இந்த இரண்டு படகுகளில் உள்ள அகதிகள் அனைவருமே தாங்கள் ஆஸ்திரேலியாவுக்குத்தான் செல்ல வேண்டும் என்று கூறிக்கொண்டு படகை விட்டுக் கீழிறங்க மறுத்துவருகின்றனர்.

ஆஸ்திரேலியாவுக்கும் இந்தோனேஷியாவுக்கும் இடையிலானதொரு பிரச்சினையாக இவ்விவகாரம் உருவெடுத்துவருகிறது.

இந்த இரண்டு நாடுகளின் தலைவர்களும் இந்த அகதிகள் தொடர்பில் கொள்கை அளவில் ஒரு உடன்பாட்டுக்கு வந்தார்கள்.

அந்த உடன்பாட்டின்படி இந்தோனேஷியாவில் உள்ள தடுப்பு முகாம்களுக்கு இந்த அகதிகளில் சிலராவது செல்ல வேண்டிவரும் என்றிருந்தது.

இது குறித்த மேலதிக விபரங்களை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.



--------------------------------------------------------------------------------


இலங்கையில் போலிஸ் அத்துமீறல்கள் தொடர்பாக கவலைகள் அதிகரித்துவருகின்றன


இலங்கை பொலிஸ்துறை சின்னம்
இலங்கையில் சிலகாலமாக போலீஸ் தடுப்புக்காவலில் இருந்தவர்கள் உயிரிழக்க நேரிட்ட சம்பவங்கள் வரிசையாக நடந்துள்ள நிலையில், அந்நாட்டின் போலீஸ் அத்துமீறல்கள் மீது கவனம் குவிந்துள்ளது.

இந்த ஒரு வருடத்தில் மட்டும் தடுப்புக்காவலின்போது உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32 என அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளது.

குற்றக்கும்பல்களை ஒடுக்கும் நடவடிக்கையாக போலிசார் மேற்கொண்ட காரியங்களுக்கு எதிராக இலங்கையில் ஆர்ப்பாட்டங்கள் நடந்துள்ளன.

உள்நாட்டுப் போர் முடிந்து ஐந்து மாதங்கள் கடந்துவிட்ட நிலையில், பாதுகாப்பு படையினர் புதிய எதிரிகளை தேட ஆரம்பித்துவிட்டனர் என்றும்கூட சிலர் விமர்சித்துள்ளனர்.

இலங்கையில் பொலிசாரும் படையினரும் சட்ட நடவடிக்கைகளுக்கு அப்பாற்பட்டவர்கள் என்ற ஒரு நிலைமையே நீடித்துவருகிறது.

0 comments:

இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter