>> Tuesday, August 2, 2011


'அரசு பழி வாங்குகிறது'- திமுக கோஷம்


திமுக ஆர்ப்பாட்டம்
திமுக ஆர்ப்பாட்டம்
ஆளும் அதிமுக அரசு தங்களைப் பழிவாங்குவதாகக் கூறி திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் அதிகார துஷ்பிரயோகம் செய்து பெருமளவில் நில அபகரிப்பு நடந்திருப்பதாக்க் கூறி, இன்றைய அதிமுக அரசு அபகரிப்பு குறித்த புகார்கள் மீது தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், தென்சென்னை மாவட்ட செயலர் ஜெ அன்பழகன், திமுக தலைவர் கருணாநிதியின் ம்கன் அழகிரிக்கு நெருக்கமானவர்கள் என இதுவரை பலர் கைதாயிருக்கின்றனர்.

மாநில அளவில் 1500 புகார்கள் வந்திருப்பதாக அரசு கூறுகிறது.

ஆனால் தங்களைப் பழிவாங்கவே அரசு இந்த நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக திமுகவினர் வாதிடுகின்றனர்.

இந்நிலையில் பொய் வழக்குகள் போடுவதாகக் கூறி, ஜெயலலிதா அரசைக் கண்டித்து மாநில அளவில் திமுகவினர் ஆர்ப்பாட்டங்கள் நடத்தினர்.

முன்னணித் தலைவர்கள் பலரும் இந்த ஆர்ப்பட்டங்களில் கலந்துகொண்டனர்.

வடசென்னை திமுக சார்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்.

சென்ன உட்பட பல இடங்களில் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது. தடையை மீறியே முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இதன்போது திமுகவினர் பலர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் பின்னர் மாலையில் விடுதலையாயினர்.

0 comments:

இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter