>> Friday, August 19, 2011

காசா மீது இஸ்ரேல் வான் தாக்குதல்; 5 பேர் பலி


காசா மீது இஸ்ரேல் 2009 இல் நடத்திய வான் தாக்குதலில் பெரும் உயிர்ச் சேதங்கள் எற்பட்டன

காசா மீது இஸ்ரேல் 2009 இல் நடத்திய வான் தாக்குதலில் பெரும் உயிர்ச் சேதங்கள் எற்பட்டன

இஸ்ரேலின் தெற்கே ஆயுததாரிகள் நடத்திய தாக்குதல்களில் 7 பேர் கொல்லப்பட்ட சில மணி நேரத்தில், இஸ்ரேலும் காசா நிலப்பரப்புக்குள் வான் தாக்குதல்களை நடத்தியுள்ளது.

இஸ்ரேலின் வான் தாக்குதல்களில் குறைந்தது 6 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக பாலஸ்தீனிய தகவல்கள் கூறுகின்றன.
தொடர்புடைய விடயங்கள்


முன்னதாக, இஸ்ரேலிய மண்ணில் எகிப்தின் எல்லையை ஒட்டி பயணித்துக் கொண்டிருந்த பஸ்ஸொன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு தமது முழுப் பலத்தையும் பிரயோகித்து ‘பதிலடி’ கொடுக்கப்படும் என்று இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் எகுட் பாரக் கூறியிருந்தார்.

இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில், ஹமாஸுடன் இணையாது காசாவில் செயற்பட்டுவரும் பீஆர்சி என்ற அமைப்பின் தலைவரும் மேலும் நான்கு உறுப்பினர்களும் கொல்லப்பட்டுள்ளதாக அந்த அமைப்பை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.

ரஃபா நகரில் வீடொன்றிலிருந்த இரண்டு பொதுமக்கள் கொல்லபட்டுள்ளதாக பாலஸ்தீன் தகவல்கள் கூறுகின்றன.

முன்னதாக, பீர்ஷெபா நகரிலிருந்து கரையோர நகரான ஈலட் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த பஸ்ஸொன்றின் மீது ஆயுததாரிகள் முதலில் தாக்குதல் நடத்தியிருந்தனர்.

அதனைத் தொடர்ந்து, வீதியோரத்து குண்டொன்றுக்கும் ரொக்கட் தாக்குதலுக்கும் மேலும் இரண்டு வாகனங்களும் சிக்கின.

சம்பவ இடத்துக்கு விரைந்த இஸ்ரேலிய படையினருக்கும் ஆயுததாரிகளுக்கும் இடையே பரஸ்பர துப்பாக்கிச் சண்டையும் இடம்பெற்றிருந்தது.
குற்றச்சாட்டை ஹமாஸ் மறுத்தது
பயணிகள் பஸ் மீது ஆயுததாரிகள் தாக்குதல் நடத்தினர்

பயணிகள் பஸ் மீது ஆயுததாரிகள் தாக்குதல் நடத்தினர்

நீண்டகாலத்துக்குப் பின்னர் எகிப்திய எல்லையை அண்டி இஸ்ரேல் மண்ணில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பிபிசி செய்தியாளர் கூறுகின்றார்.

காசா நிலப்பரப்பிலிருந்து எகிப்தின் சினாய் பாலைவனத்தினூடாக ஆயுததாரிகள் இஸ்ரேலுக்குள் ஊடுருவியிருப்பதாக இஸ்ரேலிய படைத்தரப்பு கூறுகின்றது.

காசாவே பயங்கரவாதத்தின் முக்கிய ஊற்றிடமாக இருப்பதாக இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் எகுத் பாரக் இதற்கு விளக்கம் கூறியுள்ளார்.
தெற்கு இஸ்ரேல் மற்றும் எல்லை நாடுகள்

தெற்கு இஸ்ரேல் மற்றும் எல்லை நாடுகள்

ஆனால் ஹமாஸ் எம்.பி சலாஹ் அல் பர்தாவீல், காசாவை தொடர்புபடுத்திக் கூறப்படும் குற்றச்சாட்டுக்களை நிராகரித்துவிட்டார்.

காசாவில் மேற்கொள்ளப்படும் அத்துமீறிய ஆக்கிரமிப்புக் குடியிருப்பினால் இயல்பாகவே ஏற்படக்கூடிய பதில் நடவடிக்கையாக இந்த தாக்குதலை பார்ப்பதாகவும் ஹமாஸ் எம்.பி கூறினார்.

0 comments:

இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter