>> Monday, August 1, 2011


எடியூரப்பா ராஜினாமா


எடியூரப்பா
எடியூரப்பா

கர்நாடக முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்த கடிதத்தை எடியூரப்பா கர்நாடக ஆளுநர் பரத்வாஜ் அவர்களிடம் சமர்ப்பித்துள்ளார்.

ஆளுநர் மாளிகைக்கு தன்னுடைய ஆதரவு சட்டசபை உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களுடன் சென்று எடியூரப்பா ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்தார்.

சட்டத்திற்கு புறம்பான சுரங்கத்தொழிலில் எடியூரப்பாவுக்கு தொடர்பு இருப்பதாக லோகயுக்தாவில் குற்றம் சுமத்தப்பட்டதை அடுத்து, பதவியை விட்டு விலகுமாறு எடியூரப்பாவுக்கு பாரதிய ஜனதா மேலிடம் அறிவுறுத்தியது.

ஆனால் அது தொடர்பில் மேலிடத்துடன் முறுகல் நிலையில் இருந்த நிலையில் தன்னுடைய ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்துள்ள எடியூரப்பா தன் மீது குற்றமில்லை என தெரிவித்துள்ளார்.

அத்தோடு சதானந்த கவுடாவை முதலமைச்சராக்கவும் அவர் வெளிப்படையாக கோரிக்கை விடுத்துள்ளார்.

0 comments:

இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter