>> Wednesday, March 9, 2011


திமுக-காங்கிரஸ் உடன்பாடு


காங்கிரஸ் மற்றும் திமுக தலைவர்கள்
தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில், திமுக – காங்கிரஸ் கட்சிகளுக்கிடையில் நீடித்து வந்த தொகுதிப் பங்கீடு சிக்கலுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.
அதன்படி, காங்கிரஸ் கட்சி 63 தொகுதிகளில் போட்டியிட உள்ளது.

தமிழக காங்கிரஸ் கட்சியின் மேலிடப் பொறுப்பாளரும் மத்திய அமைச்சருமான குலாம் நபி ஆசாத், இதை செவ்வாய்க்கிழமை மாலை செய்தியாளர்களிடம் அறிவித்தார்.

இதற்கிடையே அண்ணா அறிவாலயத்தில் நடந்த ஒரு வைபவத்தில் உரையாற்றிய திமுக தலைவர் முதல் கருணாநிதி அவர்கள் இந்தக் கூட்டணி உடன்பாடு குறித்த செய்தியை உறுதிப்படுத்தியுள்ளார்.

திமுக காங்கிரஸ்சுக்கு 61 தொகுதிகளைத் தரும் என்றும், பாமக ஒரு தொகுதியையும், முஸ்லிம் லீக் ஒரு தொகுதியையும் காங்கிரஸுக்கு விட்டுத்தருவார்கள் என்றும் கருணாநிதி கூறியுள்ளார்.

காங்கிரஸ் கட்சி 60 தொகுதிகளுக்கு ஒப்புக்கொண்டு, பிறகு 63 தொகுதிகள் கேட்பது நியாயமில்லை என்று கூறிய திமுக, கூட்டணியில் நீடிக்க காங்கிரஸ் விரும்பவில்லை என்பதையே இந்த நடவடிக்கை காட்டுகிறது என்று கூறி, மத்திய அமைச்சரவையிலிருந்து வெளியேறுவதாக தீர்மானம் நிறைவேற்றியது.

அதைத் தொடர்ந்து இரு கட்சிகளுக்கும் இடையில் ஏற்பட்ட பேச்சுவார்த்தையில் இன்று செவ்வாய்க்கிழமை மாலை உடன்பாடு ஏற்பட்டது.

0 comments:

இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter