>> Tuesday, February 8, 2011


கருணாநிதிக்கு எதிராக சுவாமி மனு


முதல்வர் கருணாநிதி
தமிழக முதல்வர் கருணாநிதிக்கு எதிராக வழக்கு தொடர அனுமதி கேட்டு ஆளுநரிடம் ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி மனு கொடுத்துள்ளார்.
தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் மூலம் நில ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு நிகழ்ந்துள்ளதாக சுட்டிக்காட்டி, அது தொடர்பான விவகாரத்தில் தமிழக முதல்வரின் மீது வழக்கு தொடர அவர் அனுமதி கோருகிறார்.

முதல்வர் கருணாநிதி தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து தகுதி இல்லாதவர்களுக்கு வீடுகளும் வீட்டுமனைகளும் ஒதுக்கியிருப்பதாக புகார் கூறி, அவர் மீது வழக்கு தொடுக்க அனுமதிவேண்டும் எனக் கோரியிருக்கிறார்.

முன்னதாக, 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பான விவகாரத்தில் முதல்வர் கருணாநிதியின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் விதத்தில் கருத்து தெரிவித்ததாகக் கூறி, சுப்பிரமணியன் சுவாமிக்கு வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.

தனிப்பட்ட அரசியல் விரோதம் காரணமாகவும், மலிவான விளம்பரம் தேடும் நோக்கிலும் நீங்கள் தெரிவித்த இந்தக் கருத்து, முதல்வர் கருணாநிதியின் புகழுக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையில் உள்ளது.

தங்களது இந்தக் கருத்தை 24 மணி நேரத்துக்குள் திரும்பப்பெற வேண்டும். இல்லையெனில் தங்கள் மீது அவதூறு வழக்குத் தொடரப்படும் என்று அந்த நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் முதல்வர் கருணாநிதியும் குற்றவாளியாக சேர்க்கப்பட வேண்டும் என்று ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சாமி நீதிமன்றத்தில் விடுத்த கோரிக்கையை முழுவதுமாக ஆதரிப்பதாக என்று அஇஅதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

0 comments:

இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter