>> Monday, December 12, 2011

தில்லியில் பொதுமக்கள் முன்னிலையில் உண்ணாவிரதம் மேற்கொள்கிறார்
இந்தியாவில் ஊழல் ஒழிப்பு தொடர்பில் போராட்டங்களை நடத்திவரும் முன்னணி ஆர்வலர் அன்னா ஹஸாரே, தில்லியில் ஞாயிறன்று ஒரு-நாள் அடையாள உண்ணாவிரதம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
இந்திய அரசாங்கம் புதிதாக வரைந்து நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ள லோக்பால் சட்ட மசோதா, நாட்டில் ஊழலைக் களைய போதுமானதாக இல்லை என்று கூறி அவர் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை செய்கிறார்.
நான்கு மாதங்கள் முன்பு லோக்பால் சட்டம் கொண்டுவரப்பட வேண்டும் என வலியுறுத்தி அன்னா ஹஸாரே நடத்திய உண்ணாவிரதம்தான் தேசிய அளவிலான ஒரு போராட்டமாக உருவெடுத்து, ஊழலை ஒழிக்க நடவடிக்கை எடுத்தாக வேண்டும் என்று அரசாங்கத்தின் மீது அழுத்தம் தந்திருந்தது.
அதேநேரம், உண்ணாவிரதம் போராட்டம் என்ற பேரில் ஜனநாயக வழிமுறைகளை சிதைக்க முனைகிறார் என்று ஹஸாரே மீது குற்றச்சாட்டுகளும் எழுந்திருந்தன.

0 comments:

இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter