>> Friday, January 21, 2011


சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடவில்லை: காங்கிரசுக்கு எதிராக பிரச்சாரம்: சீமான்



வரும் தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி போட்டியிடாது என்றும், காங்கிரஸ் போட்டியிடும் இடங்களில் அக்கட்சிக்கு எதிராக பிரசாரம் மேற்கொள்ளப்படும் என்றும், அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.



திருப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,



கட்சியை மேலும் பலப்படுத்த வேண்டியுள்ளதால் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி போட்டியிடாது. இருப்பினும், காங்கிரஸ் கட்சி போட்டியிடும் தொகுதிகளில் அக்கட்சிக்கு எதிராக நாம் தமிழர் கட்சி பிரசாரத்தில் ஈடுபடும்.



இலங்கையில் தமிழ் இனம் அழிவுக்கு முக்கியக் காரணமாக செயல்பட்டதுடன் அதே நடவடிக்கைகளில் தொடர்ந்து காங்கிரஸ் ஈடுபடுகிறது. தவிர, இதுவரை 537 தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், நாட்டில் எல்லாத் துறைகளிலும் ஊழல், கொள்ளைகளே
அதிகரித்துள்ளன. மக்களுக்கு அத்தியாவசிய தேவையான மின்சாரம் இல்லை. அது தொடர்பான தொலைநோக்குத் திட்டமும் காங்கிரசிடம் இல்லை. அதனாலேயே நாம் தமிழர் கட்சி இம்முடிவு எடுத்துள்ளது.



காங்கிரசுக்கு எதிர்ப்பு என்பதால் அதன் எதிர்கட்சிகளுக்கு ஆதரவு என்பதில்லை. இருப்பினும், காங்கிரஸை எதிர்த்து மேற்கொள்ளும் பிரசாரத்தால் மாற்றுக் கட்சிகளுக்கு பலம் ஏற்படுமானால் அது தற்செயலானது என்றார்.

0 comments:

இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter