>> Monday, September 20, 2010

கவலையளிக்கும் காமன்வெல்த் போட்டிகள்
காமன்வெல்த் போட்டி ஏற்பாடுகள்
இந்திய தலைநகர் புது தில்லியில் காமன்வெல்த் போட்டிகள் ஆரம்பிக்க இன்னும் இரண்டே வாரங்கள் உள்ள நிலையில், போட்டியின் ஏற்பாடுகள் பற்றிய கவலைகள் இன்னும் நீடிக்கவே செய்கின்றன.
அனைத்து விளையாட்டு அரங்கங்களும் முழுமையான தயாராகாத நிலையில் உள்ளதாக விளையாட்டு மற்றும் சமூக துறை ஆர்வலர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
போட்டிகளுக்கான கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட்டுக் கொண்டிருந்த போது, திடீரென கிளம்பிய ஊழல் குற்றச்சாட்டுகளும் ஏற்பாடுகளின் தாமதத்திற்கு காரணம் எனக்கூறப்படுகின்றது.
போட்டிகளை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டுள்ள நவீனப்படுத்தல் நடவடிக்கைகளின் தரம் தொடர்பில் திருப்தி கொள்ள முடியாது எனவும் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆனால் எதிர்பாராத மழை உள்ளிட்ட இயற்கை காரணங்களே போட்டி ஏற்பாடுகளில் தாமதத்தை ஏற்படுத்தியுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
ஆனால் போட்டிகள் ஆரம்பிக்கும் அக்டோபர் 3 ஆம் தேதிக்கு முன்பதாகவே அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியடைந்துவிடும் என்றும் அதிகாரிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
0 comments:
Post a Comment