
தமிழர்கள் தாயகம் திரும்ப விரும்பவில்லை - அதிகாரிகள்
பென்காசியில் கலவரம்
கலவரங்களினால் பாதிக்கப்பட்டுள்ள் லிபியாவின் பென்காசி பகுதியில் சிக்கியுள்ள தமிழகத்தைச் சேர்ந்த 22 பேர் இப்போதைக்கு தாயகம் திரும்ப விரும்பவில்லை எனக்கூறிவிட்டதாக தமிழக அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பென்காசியிலேயே தென் கொரிய நிறுவனமான ஹூண்டாயின் கீழ் நூற்றுக்கும் மேற்பட்ட இந்தியர்கள் மின் கம்பங்கள் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருப்பதாகவும், கலவரம் மூண்டவுடன் அவர்களில் பெரும்பாலானோர் வேறு இடம் சென்றுவிட்டதாகவும், மீதம் 22 பேர் மட்டும் முன்னர் வசித்த இடத்திலேயே இருப்பதாகவும், அவர்களும் தமிழ்நாடு திரும்புவது குறித்து எவ்வித முடிவும் இன்னமும் எடுக்கவில்லை என்றும் தமிழோசையிடம் பேசிய அதிகாரிக்ள் கூறுகின்றனர்.
நெல்லை மாவட்ட்த்தைச் சேர்ந்த முருகையா இறந்துவிட்டதாக செய்தி வந்தவுடன், தமிழக அரசு புதுடில்லியிலுள்ள தமிழக ஆணையர் ஆனந்த் மூலம் லிபியாவிலுள்ள தூதரகம் மூலம் விவரங்களைக் கேட்டறிந்ததாகவும், அப்போதுதான் முருகையா விபத்தில்தான் இறந்தார் என்பது உறுதி செய்ய்ப்பட்டதாகவும் தமிழக அரசு கூறுகிறது.
தமிழகத்தைச் சேர்ந்த 22 பேர் எப்போது திரும்ப விரும்பினாலும் அவர்களுக்கு போதிய உதவிகள் செய்து தருமாறும் தூதரகத்திடம் வற்புறுத்தப்பட்டிருக்கிறது.
இதனிடையே அரசுப்படையினர் சுட்டதில்தான் முருகையா உயிர் இழந்தார், அசோக்குமார் என்பவர் காயம் அடைந்தார் என்றும், இந்திய அரசு உண்மைகளை மறைக்கிறது என்றும் மதிமுக பொதுச்செயலாளர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
No comments:
Post a Comment
பின்னூட்டமிட்டு செல்க