
இராக் தற்கொலைத் தாக்குதல்
இராக் தாக்குதல்களில் பலர் பலி
இராக்கில் அரசாங்கத்திற்கு ஆதரவான சுனி ஆயுதக்குழுவான சாஹ்வாவின் உறுப்பினர்களை குறிவைத்து நடத்தப்பட்ட இரு தற்கொலைக்குண்டுத்தாக்குதலில் கிட்டதட்ட ஐம்பது பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
பாக்தாதில் இராணுவ முகாம் ஒன்றில் சம்பளத்தை பெறுவதற்காக குழுமியிருந்தவர்களின் மத்தியில் நடத்தப்பட்ட முதலாவது தாக்குதலில் குறைந்தப்பட்சம் 43 பேர் கொல்லப்பட்டனர்.
இரண்டாவது தாக்குதல் இராக் மற்றும் சிரியாவுக்கு இடையேயான எல்லைப்பகுதியோரம் இடம்பெற்றது. இந்த தாக்குதலில் மூன்று பேர் கொல்லப்பட்டனர்.
நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் சாஹ்வா அமைப்பினர் அல்கையிதாவுக்கு எதிராக திரும்பினர். அப்போது முதல் சாஹ்வாவின் தலைவர்களை குறிவைத்து பல தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.
No comments:
Post a Comment
பின்னூட்டமிட்டு செல்க