
பிரதமர் பதவியிலிருந்து பிரவுன் விலகினார்
பதவி விலகினார் பிரவுன்
பிரிட்டிஷ் பிரதமர் கார்டன் பிரவுன் பதவி விலகியுள்ளார். பிரித்தானிய அரசியை சந்தித்து தனது ராஜிநாமா கடிதத்தை அவர் அளித்தார்.
புதிய அரசை அமைக்கும்படி கன்சர்வேடிவ் கட்சியின் தலைவரான கேவிட் கெமரனை அழைக்கும்படியும் அவர் அரசியிடம் வேண்டியுள்ளார்.
பதவி விலகல் செய்தியை கார்டன் பிரவுன் தனது அரசு இல்லமான 10 டவுணிங் ஸ்டிரீட்டின் முன்னர் செய்தியாளர்களிடம் அறிவித்தார்.
இதன் மூலம் பிரிட்டனில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் தனிபெரும்பான்மை கிடைக்காததால் அடுத்து யார் பிரதமராவர் என்பது தொடர்பில் இருந்து வந்த முட்டுக்கட்டை நீங்கியுள்ளது.
No comments:
Post a Comment
பின்னூட்டமிட்டு செல்க