Friday, August 28, 2009

செய்தியரங்கம்

போக்ரன் அணுச்சோதனை நடத்தப்பட்ட இடம்
தமிழோசை
அணுச் சோதனை தோல்வி என்ற இந்திய விஞ்ஞானியின் கருத்தால் சர்ச்சை
இந்தியா 1998 ஆம் ஆண்டு நடத்திய அணுகுண்டு சோதனை முழு வெற்றி அடையவில்லை என்று அந்த சோதனையில் ஈடுபட்ட விஞ்ஞானிகளில் ஒருவரான கே. சந்தானம் தெரிவித்த கருத்தையடுத்து, இந்தியாவின் அணுசக்தித் திறன் தொடர்பாக புதிய சர்ச்சை எழுந்துள்ளது.
அணுசக்திப் பரவல் தடை ஒப்பந்தம் தொடர்பாக டெல்லியில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் பேசும்போது, சந்தானம் இந்தக் கருத்தை வெளியிட்டார். கடந்த 1998 ஆம் ஆண்டு வாஜபேயி பிரதமராக இருந்தபோது போக்ரானில் நடத்தப்பட்ட இரண்டாவது அணுகுண்டு சோதனையில், டிஆர்டிஓ எனப்படும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் பிரதிநிதியாக அவரும் கலந்துகொண்டார்.
அந்த அணுகுண்டு சோதனை முழு வெற்றியடையாத நிலையில், இந்தியா மேலும் அணுகுண்டு சோதனைகளை நடத்த வேண்டும் என்றும், அவசரப்பட்டு, சிடிபிடி ஒப்பந்தத்தில் கையெழுத்திடக்கூடாது என்றும் சந்தானம் வலியுறுத்தியுள்ளார்.
போக்ரன் அணுகுண்டு சோதனை நடத்தப்பட்டு 11 ஆண்டுகளுக்குப் பிறகு, இப்படிப்பட்ட சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட வேண்டிய அவசியம் என்ன என்று அவரிடம் கேட்டபோது, ``அணுப்பரவல் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் என்று இந்தியாவின் மீது நிர்ப்பந்தம் அதிகரித்து வருகிறது. அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டால், அதன்பிறகு அணுகுண்டு சோதனை நடத்துவதற்கான வாய்ப்புக்கள் முற்றிலும் அடைக்கப்படும். அதனால், தற்போதுள்ள வாய்ப்பைப் பயன்படுத்தி இந்தியா இரண்டு அல்லது மூன்று அணுகுண்டு சோதனைகளை நடத்தி, தனது அணுத்திறனை அதிகரித்துக் கொள்ள வேண்டும்’’ என்றார் விஞ்ஞானி சந்தானம்.
ஆனால், இந்திய அரசு சந்தானத்தின் கருத்தை ஏற்கவில்லை. உள்துறை அமைச்சர் சிதம்பரம் இதுபற்றிக் கருத்துத் தெரிவிக்கும்போது, சந்தானத்தின் கருத்தைக் கேட்டு தான் குழப்பமடைந்ததாகத் தெரிவித்தார்.
அணுகுண்டு சோதனை நடத்தப்பட்டபோது, டிஆர்டிஓ அமைப்பின் தலைவராக இருந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், சந்தானத்தின் கருத்தை மறுத்திருக்கிறார். போக்ரான் அணுகுண்டு சோதனையில் தேவையான முடிவு கிடைத்ததாக அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
'இலங்கை போர்க் குற்றம் குறித்து ஆராய சர்வதேச விசாரணை தேவை'- ஹியூமன் ரைட்ஸ் வாட்ச்
இலங்கை இராணுவத்தினர்இலங்கை படையினர் என்று கூறப்படுபவர்களால், தடுத்து வைக்கப்பட்டிருந்த சிலர் கொல்லப்படுவதாக குற்றஞ்சாட்டி அண்மையில் வெளியாகியிருக்கின்ற வீடியோ காட்சிகள், இலங்கையில் இடம்பெற்றிருக்கக் கூடிய போர்க்குற்றங்கள் குறித்து சர்வதேச ஆணைக்குழு ஒன்றின் விசாரணை அவசியம் என்பதை கோடி காட்டுவதாக, ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் அமைப்பு கூறியிருக்கிறது.
கடந்த பல வருடங்களாக தொடர்ந்த இரு தரப்புக்கும் இடையிலான போரின் போது இரு தரப்பினாலும், போர் சட்டங்கள் மீறப்பட்டதாக முறைப்பாடுகள் பல வந்தாலும், அங்கு சுயாதீன கண்காணிப்பாளர்கள் எவரும் செல்ல அனுமதிக்கப்படாத நிலை காரணமாக அவை குறித்த உறுதியான தகவல்களை பெறமுடியாது இருந்து வந்துள்ளது என்றும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
ஆகவே இரத்தக்களரி மிகுந்த இலங்கை போரில் இடம்பெற்ற குற்றங்கள் குறித்து ஆராய சுயாதீனமான சர்வதேச விசாரணை ஆணையம் ஒன்று தேவை என்றும் அது வலியுறுத்தியுள்ளது.
இதற்கிடையே, ஊடகங்களில் வெளியான இந்த வீடியோ ஒளிக்கீற்று போலியானது என்று மீண்டும் மறுத்திருக்கின்ற இலங்கை அரசாங்கம், இது குறித்த செய்தியை முதலில் வெளியிட்ட ''சானல் 4'' நிறுவனத்துக்கு எதிராக பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் முறைப்பாடு செய்யப்ப்போவதாக கூறியுள்ளது.
இது குறித்து இராஜதந்திர ரீதியிலான முறையான கண்டனத்தை பிரித்தானிய அரசாங்கத்திடம் தெரிவிக்கவிருப்பதாக இலங்கையின் அமைச்சரவைப் பேச்சாளரான அநுர பிரிய தர்சன யாப்பா அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
கரியமில வாயுவை அகற்றும் செயற்கை மரங்கள்
காபன் வெளியெற்றம் அதிகம் உள்ள இடங்களில் இந்த செயற்கை மரங்களை நடலாம்காற்றில் கலந்துள்ள கரியமில வாயுவைக் குறைப்பதற்கான தொழில்நுட்ப வாய்ப்பு வழிகள் குறித்து பிரிட்டனில் நடந்த ஓர் மீளாய்வில், கரியமில வாயுவை காற்றிலிருந்து உறிஞ்சி உள்வாங்கிக்கொள்ளும் செயற்கை மரங்கள் என்ற புதிய கண்டுபிடிப்பு நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
ஏனைய சில யோசனைகளைவிட செலவு குறைவானதாகவும் செயல்பாட்டுச் சாத்தியம் அதிகம் கொண்டதாகவும் இந்தத் தொழில்நுட்பம் அமைந்துள்ளது.
சூரிய ஒளியை திசை திருப்புவதற்கான பிரம்மாண்ட கண்ணாடிகளை விண்வெளியில் நிறுவுவது போன்ற யோசனைகளை யதார்த்தத்துக்கு ஒத்துவராதவை என்று கூறி பிரிட்டனின் இயந்திரப் பொறியியல் வல்லுநர்களின் அமைப்பு நிராகரித்துள்ளது.
ஆனால் இருபதாயிரம் டாலர்கள் செலவில் உருவாக்கப்படக்கூடிய இந்த செயற்கை மரம் ஒன்று, இருபது கார்கள் வெளியேற்றக்கூடிய அளவிலான கரியமிலவாயுவை காற்றுமண்டலத்தில் இருந்து அகற்றும் திறன் பெற்றிருக்கும் என்று தெரிகிறது.
இவை குறித்த மேலதிக தகவல்களை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.


இவற்றையும் காண்க
செய்தியறிக்கை
செய்தியரங்கம்
முற்றுப் பெற்றது மும்பை மோதல்
நெஞ்சம் மறப்பதில்லை

Wednesday, August 19, 2009

இலங்கை அரசின் அடுத்தகட்ட நகர்வைப் பொறுத்தே அந்நாட்டுக்கான உதவிகள் அமையும் - அமெரிக்கா அறிவிப்பு
இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் முடிவடைந்து அதில் தாங்கள் வெற்றி பெற்றுவிட்டதாக இலங்கை அரசு கூறி மூன்று மாதங்கள் ஆகியுள்ள நிலையில், அந்நாட்டுக்கான மேலும் நிதியுதவிகள், இனி அங்கு மக்களை மீளக் குடியமர்த்துவது மற்றும் அரசியில் தீர்வுகளுக்கான நகர்வை ஒட்டியே அமையும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
நாட்டில் அதிகாரப் பகிர்வு தொடர்பான திட்டங்களை ஜனாதிபதி விரைவில் அறிவிப்பார் என்று அமெரிக்கா எதிர்பார்ப்பதாக, அந்நாட்டின் தெற்காசியாவுக்கான துணை வெளியுறவுச் செயலர் ராபர்ட் பிளேக் பிபிசியிடம் தெரிவித்தார்.
அரசியல் ரீதியான தீர்வுத் திட்டங்கள் முன்வைக்கப்படுவது தாமதப்படும் பட்சத்தில் அது தமிழ் சமூகத்தை மேலும் தனிமைப்படுத்துவதுடன் விடுதலைப் புலிகள் மீண்டும் எழுச்சி பெறுவதற்கும் வாய்ப்பாக அமைந்துவிடும் எனவும் ராபர்ட் பிளேக் கருத்து வெளியிட்டார்.
விடுதலைப் புலிகளின் தலைவர்கள் வீழ்ச்சியடைந்திருந்தாலும், வெளிநாடுகளில் வாழும் தமிழர் சமூகம் இன்னமும் சக்தியுடன் இருப்பதை யாரும் மறந்துவிடக் கூடாது என்றும் அவர் பிபிசியிடம் தெரிவித்தார்.
இது தொடர்பான மேலதிகத் தகவல்களும், அமெரிக்க அரசின் கருத்துக்களுக்கு இலங்கையின் வெளியுறவுச் செயலர் பாலித கொஹன்ன தெரிவிக்கும் கருத்துக்களையும் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்
விடுதலைப் புலிகள் மீண்டும் தலைதுக்க முடியாது என்கிறார் மகிந்த ராஜபக்ஸ
மகிந்த ராஜபக்ஸவிடுதலைப் புலிகள் சர்வதேச ரீதியாகவோ உள்நாட்டிலோ மீண்டும் தலைதூக்க அனுமதிக்கப்படமாட்டார்கள் என இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
இரத்தினபுரியில் போர் வெற்றிக் கொண்டாட்ட நிகழ்வொன்றில் உரையாற்றியபோதே ராஜபக்ஸ இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
விடுதலைப் புலிகளின் தலைவர்கள் கொல்லப்பட்டதன் பின்னர் மக்களின் வாழ்த்துக்கள் தமக்கு கிடைத்த வண்ணம் இருப்பதாகக் கூறிய அவர் குறுகிய அரசியல் லாபங்களை கருத்தில் கொண்டிருந்தால் இந்த வெற்றியை அடைந்திருக்க முடியாது எனவும் தெரிவித்தார்.
இலங்கைக்கு எதிராக மேற்கொள்ளப்படும் சகல நடவடிக்கைகளையும் தோற்கடிக்கும் வல்லமை தமக்கு இருப்பதாகவும் மகிந்த ராஜபக்ஸ கூறினார்.
இலங்கை ஜனாதிபதியின் கருத்துக்களை செய்தியரங்கத்தில் கேட்கலாம்.
முகாம்களில் மக்கள் 'எலிகளைப் போல வாழ்கிறார்கள்'- ஆனந்த சங்கரி
ஆனந்தசங்கரிஇலங்கையின் வடக்கே வவுனியாப் பகுதியில் இடைத்தங்கல் முகாம்களில் உள்ள தமிழ் மக்களை தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்த சங்கரி செவ்வாய்கிழமை சென்று சந்தித்துள்ளார்.
முகாம்களில் மன்னார் பகுதியைச் சேர்ந்தவர்கள் கூட இன்னமும் தங்கியிருப்பது எதனால் என்றும், எதனால் என்று தனக்கு தெரியவில்லை என்றும் ஆனந்தசங்கரி தெரிவிக்கிறார்.
"முகாம்களில் இருக்கும் கூடாரங்களில் எலிகளே வாழ முடியும்" என்றும் அங்கு மனிதர்கள் பல மாதங்களாக வாழ்ந்து வருவதாகவும் அவர் தமிழோசையிடம் தெரிவித்தார்.
எனினும் முகாம்களில் உள்ள மக்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க அரசு முன்வந்துள்ளதையும் தாம் காணக் கூடியதாக இருந்தது என்றும் ஆனந்த சங்கரி கூறுகிறார்.
விடுதலைப் புலிகள் சிறார்களை பிடித்துச் சென்றார்கள் என்கிற குற்றச்சாட்டை கடுமையாக முன்வைத்த அரசு தற்போது முகாம்களில் சிறார்களை தொடர்ந்தும் தடுத்து வைத்திருப்பதில் நியாயம் இல்லை என்று அங்குள்ளவர்கள் தம்மிடம் தெரிவித்ததாகவும் அவர் தெரிவிக்கிறார்.
அவர் தமிழோசைக்கு வழங்கிய பேட்டியை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்
கிழக்கில் இறுதி மீள்குடியேற்றமும் பூர்த்தியடைந்ததுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
சொந்த குடிமனைகளுக்கு செல்லும் மக்கள்மட்டக்களப்பு மாவட்டத்தில் 2006 - 2007 ம் ஆண்டுகளில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கை காரணமாக இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கியிருந்த குடும்பங்களின் மீள் குடியேற்றம் செவ்வாய்க்கிழமையுடன் பூர்த்தியடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இதன்படி இறுதியாக பலாச்சோலை முகாம் மூடப்பட்டு அங்கு தங்கியிருந்த ஈரலற்குளததைச் சேர்ந்த 455 குடும்பங்கள் மீள் குடியேற்றத்திற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
2006 ம் ஆண்டு விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியாகவிருந்த பிரதேசங்களை நோக்கி கிழக்கில் மேற் கொள்ளப்பட்ட விடுதலைப் புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கை காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டும் 35,685 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் ஒன்றரை லட்சம் மக்கள் உள்ளக இடம் பெயர்விற்குள்ளாகி 91 முகாம்களிலும் உறவினர்கள், நண்பர்கள் வீடுகளிலும் தங்கியிருந்தனர்
இக்குடும்பங்களின் மீள் குடியேற்றம் பிரதேச ரீதியாக கட்டம் கட்டமாக 2007 ம் ஆண்டு முற்பகுதியில் ஆரம்பிக்கப்பட்டாலும் மிதி வெடி அகற்றும் பணிகள் பூர்த்தியடைதலைப் பொறுத்தே இம்மீள் குடியேற்றமும் இடம் பெற்று வந்தது.
இருப்பினும் திருகோணமலை மாவட்டததைச் சேர்ந்த சுமார் 500 குடும்பங்கள் தொடர்ந்தும் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 5 முகாம்களில் தங்கியிருப்பது குறிப்பிடத் தக்கது.
தடைசெய்யப்பட்ட இயக்கங்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுப்பது தண்டனைக்குரிய குற்றம் - தமிழகத்தில் அறிவிப்பு
தமிழக அரசு சின்னம்இந்தியாவில் தடைசெய்யப்பட்ட இயக்கங்களுக்கு ஆதரவாக செயற்படுவோர்மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
தடைசெய்யப்பட்ட இயக்கங்களை ஆதரித்துப் பேசுவது அவற்றின் கொடி மற்றும் சின்னங்கள், தலைவர்களின் படங்களைப் பயன்படுத்தி விளம்பரம் செய்வது போன்ற நடவடிக்கைகள் சட்டவிரோத நடவடிக்கைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கருத்தரங்குகள், மாநாடுகள் மற்றும் கூட்டங்களில் நடத்துபவர்கள் இவற்றைக் கருத்தில் கொள்ளவேண்டும் எனவும் இல்லாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அரசு குறிப்பிடப்பட்டுள்ளது.
சென்னையில் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஈழத்தமிழர் வாழ்வுரிமை பிரகடன நிகழ்வு எதிர்வரும் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்தச் செய்தி பற்றிய மேலதிக விபரங்களை செய்தியரங்கத்தில் கேட்கலாம்.


இவற்றையும் காண்க
செய்தியறிக்கை
செய்தியரங்கம்
முற்றுப் பெற்றது மும்பை மோதல்
நெஞ்சம் மறப்பதில்லை


மின்அஞ்சலாக அனுப்புக

அச்சு வடிவம்







^^ மேலே செல்க


முகப்பு நினைவில் நின்றவை எம்மைப்பற்றி வானிலை


BBC News >> BBC Sport >> BBC Weather >> BBC World Service >> BBC Languages >>


உதவி தகவல் பாதுகாப்பு எம்மைத் தொடர்புகொள்ள

//-1?'https:':'http:';
var _rsRP=escape(document.referrer);
var _rsND=_rsLP+'//secure-uk.imrworldwide.com/';
if (parseInt(navigator.appVersion)>=4)
{
var _rsRD=(new Date()).getTime();
var _rsSE=1;
var _rsSV="";
var _rsSM=0.1;
_rsCL='';
}
else
{
_rsCL='';
}
document.write(_rsCL);
//]]>

Wednesday, August 12, 2009

radio

டிஜிட்டல் பக்கம்
இந்த மாதம் நாம் பார்க்கவுள்ள டிஜிட்டல் ரேடியோ, கிரண்டிக் நிறுவனத்தின் தயாரிப்பாகும். கடந்த மாதம் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் அறிமுகப் படுத்தப்பட்ட இந்த வானொலியின் மாடல் எண் எம்400 ஆகும். இதில் மத்திய அலை (520-1410) பண்பலை (87-108) மற்றும் சிற்றலை (5..9 - 18) ஆகியவை உள்ளன.இதன் சர்கியூட் அனலாக்கில் இருந்தாலும், டிஸ்பிளே டிஜிட்டல் வடிவில் உள்ளதால் எளிதாக ஒலிபரப்புகளை கேட்க உதவுகிறது. ஒவ்வொரு கிலோ ஹெர்ஸôக நகரும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ள இந்த வானொலி, அலாரம் மற்றும் கடிகாரத்துடன் கிடைக்கிறது. அரை இஞ்ச் பருமனே கொண்ட இந்த வானொலிப் பெட்டியை எளிதாக அனைத்து இடங்களுக்கும் எடுத்துச் செல்ல முடிகிறது. இரண்டு சிறிய பேட்டரியில் இயங்கக் கூடிய இந்த வானொலிப் பெட்டியுடன் லெதர் பை மற்றும் இயர் போனும் வழங்கப்படுகிறது. இந்திய விலை ரூ. 4500. தேவைப்படுபவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரியை www.universal-radio.com எனும் இணைய முகவரியில் காணலாம்

உதவி
எழுத்து மட்டும்



தமிழோசையை எனது தொடக்கப் பக்கமாக்குக
முகப்பு
நினைவில்நின்றவை
வானிலை
------------
வானொலி
நிகழ்ச்சி நிரல்
அலைவரிசை
------------
சேவைகள்
எம்மைத் தொடர்புகொள்ள
எம்மைப் பற்றி
RSS என்றால் என்ன?
------------
பிறமொழிகள்






புதுப்பிக்கப்பட்ட நாள்: 12 ஆகஸ்ட், 2009 - பிரசுர நேரம் 13:26 ஜிஎம்டி

மின்அஞ்சலாக அனுப்புக

அச்சு வடிவம்
செய்தியரங்கம்

இந்தியாவில் பன்றிக் காய்ச்சல் பரவி வருகிறது
தமிழோசை
பன்றிக் காய்ச்சலுக்கு இந்தியாவில் மேலும் பலர் பலி
இந்தியாவில் பன்றிக் காய்ச்சல் வைரஸ் தாக்குதலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது.
செவ்வாய்கிழமை குஜராத் மாநிலம் வதோதரா நகரில் ஏழு வயதுப் பெண் குழந்தையும், மகாராஷ்டிர மாநிலத்தில் 63 வயது மூதாட்டி ஒருவரும், 13 வயதுப் பெண் குழந்தையும் உயிரிழந்ததை அடுத்து, இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது.
இதுவரை, இந்தியா முழுவதும் சுமார் ஆயிரம் பேர், பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பாதிப்பேர், புனே நகரில் உள்ளனர்.
இது தொடர்பில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத், அனைத்து மாநில முதலமைச்சர்களுடனும் பன்றிக் காய்ச்சல் பாதிப்பைக் கட்டுப்படுத்துவது தொடர்பான ஏற்பாடுகள் குறித்து தொலைபேசி மூலம் ஆலோசனை நடத்தியுள்ளார்.
அப்போது, மத்திய அரசின் அதிகாரிகள் அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பப்பட உள்ளதாகவும், அவர்களுடன் உடனடியாக ஆலோசனை நடத்துமாறும் முதலமைச்சர்களிடம் குலாம் நபி ஆசாத் கேட்டுக் கொண்டார்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் பிரச்சினையைக் கையாள்வதில் ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் அவசியம் என்பது குறித்து மத்திய அரசின் அதிகாரிகளிடம் அவர் வலியுறுத்தியுள்ளார்.
சென்னையிலும் ஆலோசனைக் கூட்டம்
இதனிடையே சென்னையில் தமிழக முதல்வர் கருணாநிதி தலைமையில், ஆலோசனைக் கூட்டம் ஒன்று நடைபெற்றது.
பரிசோதனை, சிகிச்சை, மருந்துகள் உள்பட அனைத்து ஏற்பாடுகள் தொடர்பாகவும் அப்போது விவாதிக்கப்பட்டது. தற்போது பன்றிக் காய்ச்சல் பரிசோதனை வசதி சென்னை மட்டும் வேலூரில் மட்டுமே உள்ளது. அதை, மதுரை, கோவை மற்றும் திருநெல்வேலி ஆகிய நகரங்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.
இந்த நோய் தொடர்பாக பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும், பள்ளிகளில் மாணவர்களை விழிப்புடன் கவனிக்க வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு முதலமைச்சர் உத்தரவிட்டதாக தமிழக அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் அதிகார பகிர்வு ஏற்படாவிட்டால் மீண்டும் வன்முறை தலைதூக்கும் அபாயம் உள்ளது என்று அமெரிக்க எச்சரிக்கை
ராபர்ட் ஒ பிளேக்
இலங்கையில் போர் முடிவடைந்துள்ள நிலையில், சிறுப்பான்மை இனமான தமிழர்களுடன், அதிகார பகிர்வு ஏற்படுத்த இலங்கை அரசு தவறினால், நாட்டில் வன்முறைகள் மிண்டும் புதிதாக வெடிக்கலாம் என்று அமெரிக்க அரசின் மூத்த இராஜதந்திரி ஒருவர் எச்சரித்துள்ளார்.
அரசாங்க நிர்வாகத்திலுள்ல முகாம்களில், தடுத்து வைக்கப்பட்டுள்ள மூன்று லட்சம் இடம் பெயர்ந்த தமிழ் மக்கள், மேலும் சுதந்திரமாக நடமாட அனுமதிக்கப்பட வேண்டும் என்று ஏ பி செய்தி நிறுவனத்துக்கு கருத்து வெளியிடும் போது தெற்காசியாவுக்கான துணை இராஜாங்க அமைச்சர் ராபர்ட் பிளேக் தெரிவித்துள்ளார்.
முகாம்களில் தமிழ் மக்கள் அவர்களின் விருப்பத்துக்கு எதிராக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்றும் பிளேக் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் இலங்கை அரசு கருத்து வெளியிடும் போது, தடுத்து வைக்கப்பட்டுள்ள மக்களில் விடுதலைப் புலிகள் அடையாளம் காணப்பட்ட பின்னர் பொதுமக்கள் தமது வீடுகளுக்கு திருப்பி அனுப்பபடுவார்கள் என்று குறிப்பிட்டுள்ளது.
இடைத்தங்கல் முகாம்களில் உள்ள மாணவர்கள் பரீட்சைகளை எழுதியுள்ளனர்
வவுனியா முகாம் ஒன்றுஇலங்கையின் தேசிய மட்டத்தில் மிகவும் முக்கிய பரீட்சையாகக் கருதப்படுகின்ற கல்விப் பொதுத்தராதர பத்திர உயர்தரப் பரீட்சைக்கு யாழ்ப்பாணத்திலும் வவுனியாவிலும் இடம்பெயர்ந்துள்ள 1253 மாணவர்கள் தோற்றுவதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றார்கள்.
இந்தப் பரீட்சை இன்று நாடாளவிய ரீதியில் ஆரம்பமாகியிருக்கின்றது. இராணுவத்தினரிடம் சரணடைந்துள்ள, விடுதலைப்புலிகளின் முன்னாள் போராளிகள் எனக் கூறப்படுகின்ற 166 பேர் இந்தப் பரீட்சைக்கு வவுனியாவில் அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள இடைத்தங்கல் முகாம்களிலேயே பரீட்சை எழுதுவதற்கு அனுமதிக்கப்பட்டிருக்கின்றார்கள்.
யாழ்ப்பாணத்தில் 5 இடைத்தங்கல் முகாம்களில் அமைக்கப்பட்டுள்ள நிலையங்களில் அங்குள்ள 66 இடம்பெயர்ந்த மாணவர்கள் இந்தப் பரீட்சைக்குத் தோற்றுவதாக அங்குள்ள அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றார்கள். இதேவேளை இந்தப் பரீட்சைக்கு நாடாளவிய ரீதியில் 1827 நிலையங்களில் மொத்தமாக 2 லட்சத்து 42 ஆயிரத்து 91 மாணவர்கள் தோற்றுவதாக பரீட்சைத் திணைக்களம் அறிவித்திருக்கின்றது.
வவுனியாவில் இடம்பெயர்ந்த மக்களுக்கு தமது பாடசாலைகளை இடைத்தங்கல் முகாம்கள் அமைப்பதற்காக விட்டுக்கொடுத்த பாடசாலைகள் உட்பட இந்த மாவட்டப் பாடசாலைகளைச் சேர்ந்த 1624 மாணவர்கள் இந்தப் பரீட்சையை எழுதுகின்றார்கள்.
இதுபற்றிய மேலதிக தகவல்களை இன்றைய செய்தியரங்கத்தில் கேட்கலாம்

Monday, August 10, 2009

இலங்கையில் நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள் வெளியாயின
இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாநகர சபைக்கும் ஊவா மாகாண சபைக்கும் நடைபெற்ற தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. வவுனியா நகரசபையில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.
யாழ்ப்பாண மாநகர சபையை பொறுத்த வரையில் 20 சதவீதத்துக்கும் குறைவான மக்களே வாக்களித்திருந்தனர்.
இதில் பதிவான வாக்குகளில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி 50.67 சதவீத வாக்குகளை பெற்று 13 இடங்களை வென்றுள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு 38.28 சதவீத வாக்குகள் பெற்று 8 இடங்களை வென்றுள்ளது.
இது தவிர சுயேட்சை குழுவும், தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணியும் தலா ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன.
வவுனியா நகர சபைக்கு நடைபெற்ற தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத நிலையில். அங்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு அதிக வாக்குகளை பெற்று 5 இடங்களை வென்றுள்ளது.
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி 3 இடங்களையும், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி 2 இடங்களையும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன.
ஊவா மாகாண சபை தேர்தல் முடிவுகள்
இதற்கிடையே பதுளை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய ஊவா மாகாண சபைக்கான தேர்தலிலும் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனி அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது.
34 இடங்களை கொண்ட இச்சபைக்கான தேர்தல் முடிவுகளின் படி 72 சத வீத வாக்குககளைப் பெற்றுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி சார்பில் இரண்டு போனஸ் இடங்கள் உட்பட 25 பேரும், 22 சத வீத வாக்குகளைப் பெற்றுள்ள ஐக்கிய தேசிய கட்சி சார்பில் 7 பேரும் தேர்வாகியுள்ளனர். அதே நேரம் மலையக மக்கள் முன்னனி மற்றும் ஜே.வி.பி. சார்பில் தலா ஒருவரும் தேர்வாகியுள்ளனர்.
செல்வராசா பத்மநாதனை சட்டவிரோதமாக கைது செய்திருப்பதாக குற்றச்சாட்டு
செல்வராசா பத்மநாதன்
இலங்கையில் இராணுவ ரீதியில் தோற்கடிக்கப்பட்ட விடுதலைப்புலிகள் அமைப்பு, வெளிநாட்டிலிருந்த தமது புதிய தலைவரை இலங்கை அரசு சட்டவிரோதமாக கைது செய்துள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளது.
செல்வராசா பத்மநாதனை ஆசிய நாடொன்றில் கைது செய்தள்ளதாக கடந்த வெள்ளி்க்கிழமை அறிவித்த இலங்கை அதிகாரிகள், பிரிவினைவாதிகள் எதிர்காலத்தில் தலைதூக்குவதற்கான சாத்தியத்தை இல்லாது ஒழிக்கக்கூடிய வல்லமை தமக்குள்ளதை இந்த நடவடிக்கை வெளிக்காட்டுவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
ஆனால் பத்மநாதன் மலேசியாவிலுள்ள ஹோட்டல் ஒன்றிலிருந்து கடத்தப்பட்டதாக தெரிவித்த விடுதலைப்புலிகள், அவர் சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
அவரைக் காப்பாற்றுவதற்கு சர்வதேச சமூகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்தக் கைது மலேசிய மண்ணிலா இடம்பெற்றது என்பதை அந்நாட்டு அரசு உறுதிப்படுத்தவும் இல்லை மறுக்கவுமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பெங்களூவில் திருவள்ளுவர் சிலை திறப்பு
திருவள்ளுவர்
இந்தியாவின் பெங்களூரு நகரத்தில் பல ஆண்டு கால சர்ச்சைக்கு பின்னர் திருவள்ளுவர் சிலை தமிழக முதல்வர் கருணாநிதியால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இந்த சிலை திறப்புக்கு கடந்த காலங்களில் கன்னட அமைப்புகள் சிலவற்றினால் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வந்தன.
பெங்களூருவில் திருவள்ளுவர் சிலை திறக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து எதிர்வரும் 13 ம் தேதி சென்னையில் கன்னட கவிஞர் சர்வஞ்னர் அவர்களின் சிலை திறந்து வைக்கப்படும் என தமிழக முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
இந்த சிலை திறப்பு விழாவில் பெரிய அளவில் சமூக அரசியல் முக்கியத்துவம் இருப்பதாக தாம் கருதவில்லை என்று பெங்களூரு பல்கலைக்கழகத்தின் ஒய்வுப்பெற்ற சமூகவியல் பேராரசிரியர் ஜிஎஸ்ஆர் கிருஷ்ணன் தமிழோசையிடம் தெரிவித்தார். எனினும் கடந்த காலங்களில் இரண்டு மூன்றுமுறை சிலையை நிறுவ வேண்டும் என்று விரும்பி அது நடைபெற முடியாமல் அதற்கு பெங்களூருவில் எதிர்ப்பு எழுந்ததால் தற்போதைய சிலை திறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது என்று அவர் கூறுகிறார்.
கர்நாடகத்தில் திருவள்ளுவரை தெரிந்த அளவுக்கு தமிழகத்தில் சர்வஞ்னரை பற்றி தெரிந்து இருக்காது என்று கூறும் அவர் சர்வஞ்னரும் திருவள்ளுவரை ஒத்த ஒரு சிந்தனையாளர் தான் என்றும் வாழ்க்கை நெறிகளை வள்ளுவரை போலவே இரண்டு அடிகளில் பாடியவர் என்றும் அவர் கூறுகிறார்.
இது குறித்து அவரது பேட்டியை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.


இவற்றையும் காண்க
செய்தியறிக்கை
செய்தியரங்கம்
முற்றுப் பெற்றது மும்பை மோதல்
நெஞ்சம் மறப்பதில்லை


மின்அஞ்சலாக அனுப்புக

அச்சு வடிவம்







^^ மேலே செல்க


முகப்பு நினைவில் நின்றவை எம்மைப்பற்றி வானிலை


BBC News >> BBC Sport >> BBC Weather >> BBC World Service >> BBC Languages >>


உதவி தகவல் பாதுகாப்பு எம்மைத் தொடர்புகொள்ள

//-1?'https:':'http:';
var _rsRP=escape(document.referrer);
var _rsND=_rsLP+'//secure-uk.imrworldwide.com/';
if (parseInt(navigator.appVersion)>=4)
{
var _rsRD=(new Date()).getTime();
var _rsSE=1;
var _rsSV="";
var _rsSM=0.1;
_rsCL='';
}
else
{
_rsCL='';
}
document.write(_rsCL);
//]]>

Wednesday, August 5, 2009

bbc

மூதூர் படுகொலைகளுக்கு அனைத்துலக விசாரணை தேவை - ஹ்யூமன் ரைட்ஸ் வாட்ச்இலங்கையின் வடகிழக்கு பகுதியில், பிரெஞ்சு நிவாரண உதவி அமைப்பின் ஊழியர்கள் 17 பேர் மூன்று ஆண்டுகளுக்கு முன் கொல்லப்பட்டதை தொடர்ந்து கொலையாளிகளை கண்டுபிடிக்க அரசாங்க விசாரணைகள் தவறியிருப்பதால் அனைத்துலக விசாரணை ஒன்று இது குறித்து நடத்தப்பட வேண்டும் என்று சர்வதேச மனித உரிமைகள் அமைப்பான ஹ்யூமன் ரைட்ஸ் வாட்ச் கோரியுள்ளது.
பிரான்ஸின் ஏ சி எஃப் எனப்படும் உதவி அமைப்பின் உள்ளூர் ஊழியர்கள் கொல்லப்பட்டமை பற்றிய விசாரணையை அரசாங்கம் கையாண்ட விதமே, ஒட்டுமொத்தமாக தவறானது என்று குறிப்பிட்டுள்ள அந்த மனித உரிமைகள் அமைப்பு சர்வதேச விசாரணை ஒன்று அத்தியாவசியம் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளது.
2006 ஆம் ஆண்டில் இந்த கொலைச் சம்பவங்கள் நடந்த சமயத்தில் ஐரோப்பிய நாடுகளிலிருந்து வந்திருந்த சமாதான கண்காணிப்பாளர்கள் இது தொடர்பில் கருத்து வெளியிடும் போது "இக்கொலைகளில் அரசாங்க இராணுவத்தினர் சம்பந்தப்பட்டிருந்ததாக தாம் கருதுவதாக குறிப்பிட்டார்கள்".
ஆனாலும் அரசாங்க நடத்திய விசாரனையோ இக்கொலைகளுக்கு இராணுவம் பொறுப்பல்ல என்று கூறியுள்ளது.
இலங்கையில் இடம்பெயர்ந்த தமிழர்களுக்கு மீண்டும் தமிழகத்தின் நிவாரணப் பொருட்கள்
இடம்பெயர்ந்த மக்களின் இருப்பிடங்கள்இலங்கையில் இடம் பெயர்ந்த தமிழர்களுக்கென தமிழக அரசு திரட்டியுள்ள நிவாரணப்பொருட்கள் நான்காவது தவணையாக இலங்கைக்கு அனுப்பப்படவிருக்கிறது.
சுமார் 15 கோடி மதிப்புள்ள அப்பொருட்கள் ஏற்றப்பட்ட எம்.சி.பி.ஆம்ஸ்டர்டாம் என்ற கப்பல் வியாழக்கிழமை சென்னைத்துறைமுகத்திலிருந்து புறப்படும் என தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தின் நிர்வாக இயக்குநர் வீர ஷண்முகமணி இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இப்பொருட்களை கொழும்பில் இறக்குவதற்குத் தேவையான அனுமதி இலங்கை அரசிடமிருந்து வராத சூழலில் நிவாரணப் பொருட்கள் அடங்கிய 100 சரக்குப் பெட்டகங்கள் சென்னை துறைமுகத்தில் கடந்த சில நாட்களாக சென்னைத் துறைமுகத்தில் தேங்கிக்கிடப்பதாக சில பத்திரிகைச் செய்திகள் தெரிவித்தன.
நிவாரணப்பொருட்களை விநியோகிப்பது யார் என்ற சிக்கலின் காரணமாகவே தாமதமேற்பட்டதாகவும், இப்பொறுப்பு இப்போது சர்வதேச செஞ்சிலுவை சங்கத்திடமிருந்து ஐக்கிய நாடுகள் அவையின் மேற்பார்வைக்கு மாற்றப்பட்டுவிட்டதால் அச்சிக்கலும் தீர்க்கப்பட்டுவிட்டது.எனவே கப்பலில் சரக்குக்கள் ஏற்றப்பட்டு கொழும்பிற்கு அனுப்பப்படும் என்று தமிழக அரசு அதிகாரிகள் கூறினர்.
இலங்கையில் போர் உக்கிரமடைந்த நேரத்தில் இடம் பெயர்ந்தோருக்காக நிவாரணப்பொருட்கள் திரட்டப்படும் என்று முதல்வர் கருணாநிதி அறிவித்திருந்தார்.
கடந்த ஆண்டு நவம்பர் 13 தொடங்கி இதுவரை மூன்று தவணைகளாக 23.52 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் அனுப்பிவைக்கப்பட்டன்.
இப்போது அனுப்பிவைக்கப்படும் பொருட்கள் ஆகஸ்ட் 8 ஆம் நாள் கொழும்பு சென்றடையும் என்றும், பிறகு அவற்றை அங்குள்ள இந்தியத் தூதரகம் பெற்றுக்கொண்டு ஐக்கிய நாடுகள் நிறுவனம் மூலம் பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழர்க்கு வழங்க நடவடிக்கைகள் எடுக்கும் என்றும் தமிழக அரசின் செய்திக்குறிப்பும் கூறுகிறது.
இந்தியாவிலும் பன்றிக்காய்ச்சலுக்கு ஒருவர் பலி
இந்திய விமான நிலையத்தில் பன்றிக் காய்ச்சல் முன்னெச்சரிக்கைஇந்தியாவின் மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள புனே நகரில், எச்1என்1 என்று அழைக்கப்படும் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 14 வயதுப் பள்ளி மாணவி ஒருவர் திங்கட்கிழமை உயிரிழந்தார். இந்தியாவில், பன்றிக்காய்ச்சலால் ஒருவர் உயிரிழப்பது இதுவே முதல் முறை.
இதையடுத்து, பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்படுவோரை மருத்துவமனைகள் கையாள்வது தொடர்பாக இந்தியாவின் மத்திய அரசு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்துள்ளது. அதன்படி, அவசியம் என்று கருதும் வரை, அந்த நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை தனிமைப்படுத்தி வைக்க வேண்டிய அவசியம் இல்லை.
ரீடா ஷேக் என்ற அந்த மாணவி, ஒன்பதாம் வகுப்புப் படித்து வருகிறார். ஜூலை 27-ம் தேதி, காய்ச்சல் காரணமாக ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவரது ரத்தம் பரிசோதனைக்கு எடுக்கப்பட்டு இன்னொரு தனியார் மருத்துவமனையில் பரிசோதிக்கப்பட்டதாகவும் அப்போது பன்றி்க்காய்ச்சல் கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. பிறகு, தேசிய தொற்றுநோய் மையத்தில் நடத்திய இரண்டாவது பரிசோதனையின்போதுதான் அவருக்கு பன்றிக்காய்ச்சல் உறுதிப்படுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
அதன்பிறகுதான், அதாவது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நான்கு நாட்களுக்குப் பிறகுதான், ரீடா ஷேக்கிற்கு, டாமிஃப்ளூ மருந்து கொடுக்கப்பட்டதாக அவரது குடும்பததினர் கூறுகிறார்கள். இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் நேற்று இரவு உயிரிழந்தார்.
ஆனால், மருத்துவமனையின் அலட்சிப் போக்கினால்தான் தங்கள் குழந்தையின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டதாக, ரீடா ஷேக்கின் பெற்றோர் புகார் கூறுகிறார்கள். அதற்காக, அந்த மருத்துவமனை மீது வழக்குத் தொடர இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.
குழந்தையின் ரத்தப் பரிசோதனையை ஆரம்பத்திலேயே அரசு பரிசோதனைக் கூடத்துக்கு அனுப்பாமல் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பியது ஏன் என்று அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
மேலும், குறிப்பிட்ட பரிசோதனைக்கு 24 மணி நேரம் தேவைப்படும் நிலையில், அந்த தனியார் மருத்துவமனையிலிருந்து ஒரு மணி நேரத்தில் பரிசோதனை முடிவு வெளிவந்தது எப்படி என்றும் அவர்கள் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.
ஆனால், குறிப்பிட்ட மருத்துவமனையின் மருத்துவக் கண்காணிப்பாளர் டாக்டர் பிரசாத் மொக்லிகர், ரீடா ஷேக்கின் பெற்றோர் கூறும் புகார்களை மறுத்துள்ளார்.
இந்தியச் சிறார்கள் அனைவருக்கும் இலவசக் கல்வி
இந்தியச் சிறார்கள்இந்தியாவில் 6 வயது முதல் 14 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு இலவச, கட்டாயக் கல்வி வழங்குவதற்கு வகை செய்யும் சட்ட மசோதா செவ்வாய்க் கிழமை நாடாளுமன்ற மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.
குடியரசுத் தலைவரின் ஒப்புதலு்ககுப் பிறகு இந்தச் சட்டம், நடைமுறைக்கு வரும்.
புதிய சட்டத்தின்படி, 6 முதல் 14 வயதுக்கு உள்பட்ட

Tuesday, August 4, 2009

bbc

இடம்பெயர்ந்த யாழ்குடாநாட்டு மக்களை மீளக் குடியமர்த்த முதற்கட்ட நடவடிக்கை- சமூக சேவைகள் அமைச்சு
வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து வவுனியா முகாம்களில் தங்கியுள்ள,யாழ் குடா நாட்டைச் சேர்ந்த சுமார் நாற்பதினாயிரம் மக்களில் ஒரு தொகுதியினர் முதற்கட்டமாக யாழ்ப்பாணத்திற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறுகிறார்.
வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் தற்காலிகமாகத் தங்கவைக்கப்பட்டுள்ள மக்கள் தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடி அவர்களை சொந்த இருப்பிடங்களுக்கு அனுப்பி வைப்பதற்கு ஏற்பாடுகளை செய்து வருவதாக சமூக சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன் முதற்கட்டமாக யாழ் மாவட்டத்திலுள்ள நலன்புரி நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ள யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த ஆயிரத்து 141 குடும்பங்கள் தங்களது சொந்த இருப்பிடங்களுக்கு அனுப்பப்படவுள்ளன.
இது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அளித்த செவ்வியை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.
தற்போது சவுதிப் பெண்களும் வீட்டுப் பணியாளர்களாக..
சவுதி அரேபியாவில் வீட்டுப் பணிப்பெண்ணாக பணிபுரிவது என்பது எவரும் பார்த்து பொறாமைப் படக்கூடியதொன்றல்ல.சவுதி வீசா அனுசரனை நடைமுறைகளின் படி அவர்கள் தமது கடவுச்சீட்டினை வேலை வழங்குனரிடம் ஒப்படைக்க வேண்டும்.
நாளொன்றுக்கு 20 மணித்தியாலங்கள் வரை அவர்கள் வேலைக்கு அமர்த்தப்பட முடியும்.வீட்டு உரிமையாளர்ளால் பாலியல் துஸ்பிரயோகங்களுக்கும் இந்த வீட்டுப்பணிப்பெண்கள் உள்ளாக்கப்படக்கூடும்.
அவர்களின் சம்பளங்கள் வழமையில் ஊதிய ஆவணங்களில் பதியப்படுவதுமில்லை.இவர்கள் சட்ட ரீதியாக வேலையிலிருந்து விலகிக்கொள்ள வேண்டுமானால் கூட அவர்களிடம் எந்த விதமான ஆவணங்களும் இல்லாத காரணத்தால் அதுவும் சாத்தியமில்லை.
ஆயிரக்கணக்கானோர் வீடுகளிலிருந்து தப்பியோடி தத்தமது நாட்டு தூதரகங்களில் தஞ்சமடைகின்றனர்.கடந்த வருடம் அறிக்கையொன்றை வெளியிட்ட ஹியுமன் ரைட்ஸ் வொச் அமைப்பு, சவுதி ஆரேபியாவிலுள்ள வீட்டுப் பணியாட்கள் நடத்தப்படுகின்ற விதம் அடிமைத் தனத்தை ஒத்தது என சுட்டிக்காட்டியது.
சிறந்த வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முடியும் என்ற வாக்குறுதியை நம்பி சுமார் 2 மில்லியன் பெண்கள், அனேகமாக ஆசிய நாடுகளைச் சேர்ந்த பெண்கள் பெரும் ஆபத்துகளுக்குள் தள்ளப்படுகின்றார்கள்.
ஆனாலும் சவுதியில் மக்கள் மத்தியில் தற்போது அதிகரித்துவரும் வேலைவாய்ப்பின்மை பிரச்சனை, உள்நாட்டவர்களுக்கு தொழில் வழங்குவதற்கான புதிய வழிவகைகள் குறித்து சிந்திப்பதற்கு அரசகாங்கத்தைத் தூண்டியுள்ளது.
சவுதிப் பெண்கள் வீட்டுப் பணியாளர்களாக தொழிற்புரிவதற்கு இரண்டு வருடங்களுக்கு முன்னர் அனுமதியளிக்கப்பட்டது.இவர்களில் முதலாவது குழுவினர் தற்போது தொழிலில் ஈடுபட்டுவருகின்றனர்.
இவர்கள் நாளொன்றுக்கு 8 மணிநேரம் மட்டுமே வேலையில் ஈடுபடுவார்கள்.இவர்களின் சம்பளத் தொகை ஒப்பீட்டு அளவில் உயர்வானதும் நிலையானதும் கூட. இவர்கள் வேலை முடிந்ததன் பின்னர் அங்கேயே தங்க வேண்டிய அவசியமும் இல்லை.
ஆனாலும் இந்த தொழிலை தகுதி குறைந்தது என பார்க்கும் அனேகமாக சவுதிவாசிகள் மத்தியில் இவ்வாறு உள்ளுர்ப் பெண்களை வேலைக்கு அமர்த்துவதற்கு தொடர்ந்தும் எதிர்ப்பு கிளம்பிய வண்ணமே உள்ளது..
ஊக்க மருந்து பயன்பாட்டு சோதனை தொடர்பில் இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு சில ஆட்சேபங்கள்.
இந்திய கிரிக்கெட் அணிவிளையாட்டுப் போட்டிகளில் ஊக்க மருந்தின் பயன்பாட்டை தடைசெய்ய ஊக்க மருந்துக்கு எதிரான சர்வதேச அமைப்பு தீவிரமாக முயன்று வரும் நிலையில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமும் அதன் வீரர்களும் இது குறித்து சில அம்சங்களில் மாற்று கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
உலக அளவில் விளையாட்டுப் போட்டிகளில் ஊக்க மருந்தின் பயன்பாட்டை தடுக்க அனைத்து நாடுகளும் விளையாட்டு சங்கங்களும் கடுமையான நடவடிக்கைகளை முன்னெடுத்து வரும் நிலையில், இந்தச் சட்டம் தொடர்பாக இந்திய கிரிக்கெட் அணியின் வீர்ர்கள் சில தயக்கங்களை வெளிப்படுத்தியுள்ளனர். இதற்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமும் ஆதரவு அளித்துள்ளது.
போட்டிகள் நடைபெறும் காலகட்டத்தில் எப்போது வேண்டுமானாலும் ஊக்க மருந்து பயன்பாடு தொடர்பான சோதனைகளுக்கு இந்திய வீரர்கள் தயாராக இருப்பதாகவும், ஆனால், போட்டிகள் நடைபெறாத காலகட்டத்தில் மூன்று மாதங்களுக்கு தினமும் விளையாட்டு வீரர்கள் எங்கிருக்கிறார்கள் என்பது குறித்து தகவல்கள் அளிக்கப்பட வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளதற்கே அவர்கள் ஆட்சேபிக்கின்றனர் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் செயலரான என் ஸ்ரீநிவாசன் தமிழோசையிடம் தெரிவித்தார்.
ஓய்வு நாட்களை தனிமையில் கழிக்க விரும்பும் வீரர்களின் எண்ணங்களுக்கு இது ஊறு விளைவிக்கும் என்றும் அவர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்பதையும் கருத்தில் கொண்டே இதற்கு இந்தியத் தரப்பிலிருந்து ஆட்சேபனை தெரிவிக்கப்படுகிறது என்றும் அவர் கூறுகிறார்.இந்திய கிரிக்கெட் வாரியத்தின் கருத்துக்கள் தமக்கு கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் அது குறித்து தமது நிர்வாகக் குழு கூடி பரிசீலிக்கும் என்றும் சர்வதேச கிரிகெட் சம்மேளனம் தெரிவித்துள்ளது.


இவற்றையும் காண்க
செய்தியறிக்கை
செய்தியரங்கம்
முற்றுப் பெற்றது மும்பை மோதல்
நெஞ்சம் மறப்பதில்லை


மின்அஞ்சலாக அனுப்புக

அச்சு வடிவம்







^^ மேலே செல்க


முகப்பு நினைவில் நின்றவை எம்மைப்பற்றி வானிலை


BBC News >> BBC Sport >> BBC Weather >> BBC World Service >> BBC Languages >>


உதவி தகவல் பாதுகாப்பு எம்மைத் தொடர்புகொள்ள

//-1?'https:':'http:';
var _rsRP=escape(document.referrer);
var _rsND=_rsLP+'//secure-uk.imrworldwide.com/';
if (parseInt(navigator.appVersion)>=4)
{
var _rsRD=(new Date()).getTime();
var _rsSE=1;
var _rsSV="";
var _rsSM=0.1;
_rsCL='';
}
else
{
_rsCL='';
}
document.write(_rsCL);
//]]>

Saturday, August 1, 2009

செய்தியரங்கம்

இலங்கையின் வடகடலில் மீன்பிடி தொழில் மீதான தடைகள் விலக்கிக்கொள்ளப்பட்டிருக்கின்ற போதிலும் பிரச்சினைகள் தொடர்கின்றன
தமிழோசை
வடகடலில் தொடரும் மீனவர் பிரச்சினைகள்
இலங்கையின் வடகடலில் மீன்பிடி தொழில் மீதான தடைகள் அரசாங்கத்தினால் விலக்கிக்கொள்ளப்பட்டிருக்கின்ற போதிலும் அங்குள்ள மீனவர்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க நேர்ந்துள்ளதாகத் தெரிவிக்கின்றனர்.
வெளிமாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்களின் வருகை, பிடிக்கப்படுகின்ற மீன்களைச் சந்தைப் படுத்துவதற்குரிய சீரான ஏற்பாடுகளின்மை போன்றவற்றினால் தமது மீன்பிடி தொழில் முழுமையான வருமானத்தைத் தரக்கூடியதாக இல்லை என்கிறார் வடமராட்சி வடக்கு கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத் தலைவரும் யாழ் மாவட்ட கடற்தொழிலாளர் சங்கங்களின் சம்மேளன உபதலைவருமாகிய அந்தோனிப்பிள்ளை எமிலியான்பிள்ளை அவர்கள்.
வட கடலில் மீன்பிடிப்பதற்காக வருகின்ற தென்பகுதி மீனவர்களினால் தமது பிரதேச மீனவர்கள் தாக்கப்பட்டுள்ள சம்பவங்களும் இடம்பெற்றிருப்பதாக வடமராட்சி மீனவர்கள் தெரிவிக்கின்றனர். இது தொடர்பாக பொலிசார், இராணுவத்தினர் மட்டுமல்லாமல், சமூக சேவைகள் சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் கவனத்திற்கும் கொண்டு வரப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதுபற்றிய மேலதிக தகவல்களை இன்றைய செய்தியரங்கத்தில் கேட்கலாம்.
கொழும்பில் தமிழ்க் கைதிகள் உண்ணாவிரத போராட்டம்
சிறைக்கம்பிகளுக்குப் பின் பட்டினிப்போர்
கொழும்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இருநூறுக்கும் மேற்பட்ட தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பயங்கரவாதத் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் தடுப்புக் காவல் உத்தரவில் இவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தம்மை விடுதலை செய்ய வேண்டும், அல்லது பிணையில் செல்ல அனுமதிக்க வேண்டும், வழக்கு தொடரப்பட்டால் தத்தமது பிரதேச நீதிமன்றங்களுக்கு மாற்றப்படவேண்டும் அல்லது தமக்கெதிரான குற்றச்சாட்டுக்கள் குறித்து விரைவாக விசாரணை நடத்தி நீதிமன்றத்தின் முன்னிலையில் ஆஜரபடுத்த வேண்டும் என மூன்று தினங்களாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள தமிழ்க் கைதிகள் தெரிவித்துள்ளனர்.
யானைக்குட்டிகளை தாயிடமிருந்து பிரிப்பதற்கு எதிராக இலங்கையில் வழக்கு
யானைகளின் துயரம்
மூன்று வயதான இரண்டு யானைக்குட்டிகளை தாயிடமிருந்து பிரித்து வேறிடமொன்றுக்கு கொண்டு செல்வது மிருகங்களை வதை செய்யும் நடவடிக்கையென்று கூறி அடிப்படை உரிமை மனுவொன்று கொழும்பு உயர்நீதிமன்றத்தில் தாக்குல் செய்யப்பட்டுள்ளது.
கேகாலை பின்னவலை யானைகள் காப்பகத்தில் இருந்த இந்த யானைக்குட்டிகளை கண்டி தலதா மாளிகைக்கு அன்பளிப்பு செய்வது என்ற அமைச்சரவையின் அண்மைய தீர்மானம் நாட்டின் அரசியலமைப்பு ஒழுங்கு விதிகளுக்கு முரணானது என மிருகங்களின் நலன் பேணும் அரசசார்பற்ற நிறுவனமொன்று மனுவில் சுட்டிக்காட்டியுள்ளது.
எனினும் இந்த யானைக்குட்டிகளை எந்த நிர்ப்பந்தத்திலும் மீள ஒப்படைக்க அனுமதிக்கப்பட மாட்டாது என இந்த விவகாரங்களுக்கு பொறுப்பான விளையாட்டுத் துறை அமைச்சர் காமினி லொக்குகே கண்டியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் நான்கில் ஒரு பகுதி மக்களுக்கு போதிய உணவு கிடைப்பதில்லை என்று இந்தியாவின் தன்னார்வ தொண்டு நிறுவனம் அறிக்கை
போஷாக்கின்மை பிரச்சினை
நவதானிய அறக்கட்டளை என்ற அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், இந்தியா உலகின் பட்டினி மற்றும் போஷாக்கின்மையின் மையமாக மாறி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையின்படி, ஆப்ரிக்க துணைக்கண்டத்தில் உள்ளவர்களைவிட, இந்தியாவில் பட்டினியால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதாக அந்த அறக்கட்டளையின் தலைவரும் சுற்றுச்சூழல் ஆர்வலருமான வந்தனா சிவா தெரிவித்துள்ளார்.
ஆனால், மக்கள் தொகை ஆண்டுக்கு 18 மில்லியன் அதிகரிக்கும் அதே நேரத்தில், நாட்டின் உணவுப் பாதுகாப்பை மேம்படுத்துவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காணப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பில் தொடர்ந்து தெரிவிக்கப்பட்டு வருகிறது. அனைத்து மக்களுக்கும் போதிய அளவு உணவு கிடைப்பதை சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என்றும் அரசு கூறி வருகிறது.
இந்தியாவில் 57 லட்சம் குழந்தைகள் போஷாக்கின்மை காரணமாக, சராசரி எடையை விட குறைவான எடையுடன் உள்ளதாக வந்தனா சிவா தெரிவித்துள்ளார்.
மொத்த உணவு உற்பத்தியைப் பற்றி அதிகமாகப் பேசப்படுகிறது. ஆனால், கடந்த 1991-ம் ஆண்டு தாராளமாயப் பொருளாதாரக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டபோது, இந்தியாவில் தனி நபருக்குக் கிடைத்து வந்த உணவு, 2001-ம் ஆண்டில் 150 கிலோவாகக் குறைந்துவிட்டது என்று வந்தனா சுட்டிக்காட்டினார்.
மேலும், உணவு உற்பத்தி அளவும் பெருமளவு குறைந்துவிட்டதாகவும், விவசாயிகளும் தங்கள் விளை நிலங்களை வேறுபயன்பாடுகளுக்குக் கொடுத்து வருவதும் ஒரு காரணம் என்றும் அவர் தெரிவித்தார்.
ஐ.நா. மன்றத்தின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு வெளியிட்ட ஆய்வின் அடிப்படையில் தங்கள் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக வந்தனா சிவா தெரிவித்தார். மேலும் இந்தியாவின் மத்தியப் பகுதியில் உள்ள புண்டேல்கண்ட் பிராந்தியத்தில் தங்கள் அமைப்பு நடத்திய ஆய்வில், 90 சதம் குடும்பங்களுக்கு போதிய அளவு உணவு கிடைப்பதில்லை என்று தெரியவந்துள்ளதாகக் கூறினார்.


இவற்றையும் காண்க
செய்தியறிக்கை
செய்தியரங்கம்
முற்றுப் பெற்றது மும்பை மோதல்
நெஞ்சம் மறப்பதில்லை


மின்அஞ்சலாக அனுப்புக

அச்சு வடிவம்







^^ மேலே செல்க


முகப்பு நினைவில் நின்றவை எம்மைப்பற்றி வானிலை


BBC News >> BBC Sport >> BBC Weather >> BBC World Service >> BBC Languages >>