>> Wednesday, August 4, 2010



பாகிஸ்தானில் 3 மில்லியன் பேர் பாதிப்பு


80 வருடங்களில் பெரு வெள்ளம்
கடந்த எண்பது ஆண்டு காலத்தில் ஏற்பட்டுள்ள மிக மோசமான வெள்ளத்தில் சிக்கி பாகிஸ்தானில் சுமார் மூன்று மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐநா தெரிவித்துள்ளது.
ஹெலிகொப்டர் மற்றும் விமானங்களின் நிவாரண மீட்புப் பணிகளை நிறுத்துமளவிற்கு பருவ மழை இடைவிடாது கொட்டிக் கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆயிரத்து ஐநூறுக்கும் அதிகமான மக்கள் பலியாகியுள்ளதாக பாகிஸ்தான் அரசாங்கம் கூறுகின்ற நிலையில், பல பகுதிகளை சென்றடைய முடியாத நிலையுள்ளதாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.

சுமார் 27,000 பேர் வரையில் வெளியேற முடியாதவாறு சிக்கியிருப்பதாகவும் உதவிகளுக்காக காத்திருப்பதாகவும் அரசாங்கம் தெரிவிக்கின்றது.


1.8 மில்லியன் பேருக்கு உடனடி உணவு தேவைப்படுகின்றது
சுமார் 1.8 மில்லியன் மக்களுக்கு உடனடியாக உணவு தேவைப்படுவதாக உலக உணவு செயற்றிட்டம் அறிவித்துள்ளது.

மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள சுவாட் பள்ளத்தாக்கு பிரதேசத்தில், நிவாரணங்கள் வந்தடையவில்லையென கூறி ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றுள்ளன.

இந்தப் பிரதேசங்களில் அரசாங்கத்தின் மீது அதிருப்தியும் எதிர்ப்பும் வெளிப்படுவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தப் பிரதேசங்களில் பெருமளவான வீதிகளும் பாலங்களும் நீரில் அள்ளுண்டுச் சென்றுள்ளதால் நிவாரண விநியோகம் தரை வழியிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.

Read more...




காத்தான்குடி பள்ளிவாசல் படுகொலை- 20 ஆண்டுகள்


காத்தான் குடி பள்ளிவாசல்
இலங்கையில் கிழக்கு மாகாணத்திலுள்ள காத்தான்குடி பள்ளிவாசலொன்றில் 20 வருடங்களுக்கு முன்னர் விடுதலைப் புலிகளினால் நடத்ப்பட்ட தாக்குதல் சம்பவமாம் இன்று நினைவு கூறப்பட்டுள்ளது.
1990 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 3 ம் திகதி காத்தான்குடி மஸ்ஜிதுல் ஜம்மா பள்ளிவாசலில் இரவு நேரம் இஸாத் தொழுகையில் ஈடுபட்டிருந்த முஸ்லிம்கள் மீது நடத்தப்டப்ட இந்த தாக்குதலில் முதியவர்கள் சிறுவர்கள் உட்பட 103 பேர் கொல்லப்பட்டார்கள். 140க்கும் மேற்பட்டோர் காயப்டப்டிருந்தார்கள்

இலங்கையிலுள்ள பெரும்பான்மை முஸ்லிம் மக்களிடையே இன்னமும் ஒரு கருப்பு தினமாகவே கருதப்படுகின்ற இந் நாளை காத்தான்குடி பிரதேச முஸ்லிம்கள் வருடாந்தம் சுகதாக்கள் தினமாக நினைவு கூர்ந்து அனுஷ்டித்து வருகின்றார்கள்.


துப்பாக்கி குண்டுகள் பள்ளிவாசலில் ஏற்படுத்திய தாக்கம்

சம்பவ தினம் இரவு தொழுகையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வேளை மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்தமையினால் ஜெனரேற்றர் வெளிச்சத்தில் தொழுகை நடந்ததாக சம்பவததை நினைவு படுத்திக் கூறும் 40 வயதான அப்துல் கரீம் மொகமது லாபீர்.

தாக்குதலுடன் தொடர்புடைய விடுதலைப் புலிகள் துப்பாக்கிச் சூட்டுடன் கைக்குண்டு தாக்குதலையும் நடத்தியதாகவும் இந்த தாக்குதலில் முழங்காலிலும், இரண்டு கைகளிலும் தான் காயமடைந்ததாகவும் கூறுகின்றார்

விடுதலைப் புலிகளின் காத்தான்குடி பள்ளிவாசல் மீதான தாக்குதலைத் தொடர்ந்து இக் காலப் பகுதியில் ஏறாவூர், முள்ளிப்பொத்தானை மற்றும் அழிந்தபொத்தானை உட்பட கிழக்கிலுள்ள முஸ்லிம் கிராமங்கள் மீது நடத்திய தாக்குதல்கள் தமிழ், முஸ்லிம் இனங்களுக்கு இடையேயான உறவின் ஒரு நிரந்தர பாதிப்பை ஏற்படுத்தியது.


தாக்குதலில் தப்பிய அப்துல் கரீம் மொகமது லாபீர்

அன்று ஏற்பட்ட பாதிப்பு 20 வருடம் கடந்தும் இன்னமும் பழைய நிலைக்கு திரும்பவில்லை என்கின்றார் மட்டக்களப்பு பல்சமய சமாதான ஒன்றியத்தின் துணைச் செயலாளரான ஐ.எம்.இலியாஸ் மெளலவி

முஸ்லிம்கள் மீதான இந்த தாக்குதல் சம்பவங்கள் கவலைக்குரியது எனக் கூறும் மனித உரிமைகள் சட்டத்தரணியும், சமூக ஆய்வாளருமான பேரின்பம் பிரேம்நாத் அந்த வடு அவர்கள் மத்தியில் இன்னும் மாறவில்லை என்கின்றார்

தமிழ் மற்றும் முஸ்லிம்களுக்கிடையிலான இன உறவை பழைய நிலைக்கு கொண்டு வரும் பொறுப்பு சமய மற்றும் அரசியல் தலைவர்களின் செயல்பாட்டிலேயே தங்கியிருப்பதாகவும் அவர் சுட்டிக் காட்டுகின்றார்

இந்த சம்பவங்கள் நடந்து 20 ஆண்டுகளாகியும், இலங்கையில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களிடையே இன ஐக்கியத்தையும் ஒற்றுமையையும் ஏற்படுத்த பல்தரப்பிலும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வந்தாலும், எதிர்பார்க்கப்படுகின்ற வகையில் அப்படியான நெருக்கமான உறவுகளும் பரஸ்பர நம்பிக்கையும் இன்னும் ஏற்படவில்லை என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

Read more...

>> Saturday, July 31, 2010


கடல்நீர் சுத்திகரிப்பு ஆலை


கடல்நீர் குடிநீராக மாறும் ஆலை சென்னையில்
தமிழகத்தின் தலைநகர் சென்னையில் தினந்தோரும் 100 மில்லியன் லிட்டர் கடல்நீரை குடிநீராக மாற்றக் கூடிய சுந்திகரிப்பு ஆலை சனிக்கிழமை முதல் செயல்படவுள்ளது.
இந்த ஆலையின் மூலம் ஒரு லிட்டர் கடல் நீரை குடிநீராக மாற்ற 5 பைசாவுக்கு குறைவாகவே செலவாகும் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

ஆயிரம் லிட்டர் குடிநீர் 48 ரூபாய் 66 பைசாவுக்கு வாங்கப்படும் என்று சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றல் வாரியத்தின் தலைவர் சிவதாஸ் மீனா தமிழோசையிடம் தெரிவித்தார். தற்போது நாளோன்றுக்கு 650 மில்லியன் லிட்டர் குடிநீர் நகரில் விநியோகிக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

சென்னை நகரில் பல ஆண்டுகளாக குடிநீருக்கு பெரும் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் நீர்த் தேவைகளை சமாளிக்க தெலுங்கு கங்கை திட்டம், வீராணம் திட்டம் உள்ளிட்ட பல திட்டங்கள் கடந்த காலங்களில் செயல்படுத்தப்பட்டன. ஆயினும் இத்திட்டங்களால் தேவையை முற்றாக ஈடு செய்ய முடியவில்லை. எனவே தொழில்நுட்பத்தின் துணை நாடப்பட்டுள்ளது.

இந்த ஆலை 600 கோடி ரூபாய் செலவில் தனியாரால் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் வேறு சில கடல் நீர் சுத்திகரிப்பு நிலையங்களைப் போல நீரை கொதித்து ஆவியாக்கி சுந்தம் செய்வதில்லை என்றும் அதிக அழுத்ததில் 'ஜவ்வு' வழியாக நீரை செலுத்தி சுத்திகரிப்பு செய்வதால் குறைந்த விலையிலேயே நீரைத் தர முடிகிறது என்றும் சென்னை வாட்டர் டிசாலினேஷன் நிறுவனத்தின் துணை பொது மேலாளர் என் கணேசன் தமிழோசையிடம் தெரிவித்தார்.

மத்திய அரசின் நிதி மானியத்துடன் சென்னையில் அமைக்கப்பட்டு வரும் மற்றொரு கடல் நீர் சுத்திகரிப்பு ஆலை 2012 ஆம் ஆண்டில் இயங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Read more...
இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter