The Worldwide Aeronautical Communication Frequency Directory எனும் நூலைப் பற்றி இந்த மாதம் காணலாம். ராபர்ட் ஈவம் அவர்களால் ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ள இந்த நூலைப் பற்றி அறிந்து கொள்வதற்கு முன் ஒரு சுவாரஸ்யமான விடயத்தினைத் தெரிந்து கொள்வோம். நம்மில் எத்தனைப் பேர் நமது வானொலிப் பெட்டியை உற்று கேட்டுள்ளீர்கள்?!
அறிவிப்பாளர்களின் குரல்களைத் தவிர்த்து வரும் வேறு ஒலிகளை நம்மில் பெரும்பாலோர் கண்டுகொள்வதே இல்லை. அதற்கு காரணம் அவைப் பற்றி நமக்கு ஒன்றும் தெரிவதில்லை. அப்படி உங்கள் வானொலிப் பெட்டியில் கேட்கும் ஒவ்வொரு ஒலியும் ஒரு சில அர்த்தங்களுடன் பயனிக்கிறது என்றால் உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம். அவ்வாறு பயனிக்கும் ஒலிகளுக்கு என்ன? அர்த்தம் இருக்க முடியும் என நீங்கள் எண்ணினால் உடனே நீங்கள் படிக்க வேண்டிய நூல் தான் The Worldwide Aeronautical Communication Frequency Directory.
உங்கள் வீட்டின் மேல் உள்ள வானத்தில் விமானங்கள் பறப்பதை நீங்கள் பார்த்து இருப்பீர்கள், ஆனால் செயற்கைகோள்களைப் பார்த்து இருக்கிறீர்களா?! அதனால் என்ன, அவை அனுப்பும் ஒலிகளையாவது கேட்கலாமே.. அதற்கு பயன்படுவது தான் இந்த நூல். 2350 அலைஎண் விபரங்களுடன் வெளிவந்துள்ள இந்த நூலின் துணை கொண்டு அவற்றைக் கேட்கலாம். பயணிகள் விமானம் மற்றும் இராணுவ விமானங்கள் பயன்படுத்தும் அலைவரிசைகளையும் இதில் வழங்கியுள்ளது கூடுதல் சிறப்பு. ரூ. 1115க்கு விற்பனைக்கு வந்துள்ள இந்த நூலினைப் பெற தொடர்பு கொள்ளவும் sales@universal-radio.com எனும் மின் அஞ்சல் முகவரியை.
Friday, October 30, 2009
வழக்கறிஞர்கள்-போலிசார் மோதல் விவகாரம்
வழக்கறிஞர்கள்-பொலிசார் மோதல் விவகாரம்: காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க சென்னை நீதிமன்றம் உத்தரவு
சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் காவல்துறையினருக்கும் வழக்கறிஞர்களுக்கும் இடையே கடந்த பிப்ரவரி 19ஆம் நாளன்று நடந்த மோதல் சம்பவத்திற்கு நான்கு உயர் போலீஸ் அதிகாரிகளே பொறுப்பு எனக்கூறி, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் சென்னை மாநகர காவல்துறை ஆணையரும் தற்போதைய சட்டம்-ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி.யுமான ராதாகிருஷ்ணன், முன்னாள் கூடுதல் ஆணையர் விஸ்வநாதன், இணை ஆணயர் ராமசுப்பிரமணியன் மற்றும் துணை ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா ஆகியோர் மீது துறை-ரீதியிலான நடவடிக்கை எடுக்கலாம் என உத்தரவிடப்பட்டுள்ளது.
ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணியம் சாமி மீது முட்டை எறிந்து தாக்குதல் நடத்திய வழக்கறிஞர் சிலரைக் கைதுசெய்ய போலீஸார் உயர்நீதிமன்ற வளாகத்திற்குச் சென்றபோதுதான் இந்தப் பெரிய மோதல் மூண்டிருந்தது.
உச்சநீதிமன்ற உத்திரவின் பேரில் இந்தச் சம்பவம் தொடர்பான அனைத்து வழக்குக்களையும் சென்னை உயர் நீதிமன்றம் விசாரித்துவந்தது.
ஏறத்தாழ 20 நாட்கள் விசாரணைக்குப்பின் நீதிபதிகள் இப்ராகிம் கலிபுல்லா மற்றும் பானுமதி அடங்கிய டிவிஷன் பெஞ்ச் தனது தீர்ப்பினை வழங்கியுள்ளது.
--------------------------------------------------------------------------------
இந்தோனேஷியாவில் படகிலுள்ள இலங்கை அகதிகள் தொடர்பில் முடிவெடுப்பதில் சிக்கல்
இலங்கை அகதிகளை சுமந்துகொண்டு ஆஸ்திரேலியா நோக்கி சென்ற இரண்டு படகுகள் இந்தோனேஷியாவில் இருவேறு இடங்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த அகதிகளை என்ன செய்வது என்று முடிவெடுக்க முடியாமல் இந்தோனேஷிய அரசாங்கம் திணறிவருகிறது.
இந்த இரண்டு படகுகளில் உள்ள அகதிகள் அனைவருமே தாங்கள் ஆஸ்திரேலியாவுக்குத்தான் செல்ல வேண்டும் என்று கூறிக்கொண்டு படகை விட்டுக் கீழிறங்க மறுத்துவருகின்றனர்.
ஆஸ்திரேலியாவுக்கும் இந்தோனேஷியாவுக்கும் இடையிலானதொரு பிரச்சினையாக இவ்விவகாரம் உருவெடுத்துவருகிறது.
இந்த இரண்டு நாடுகளின் தலைவர்களும் இந்த அகதிகள் தொடர்பில் கொள்கை அளவில் ஒரு உடன்பாட்டுக்கு வந்தார்கள்.
அந்த உடன்பாட்டின்படி இந்தோனேஷியாவில் உள்ள தடுப்பு முகாம்களுக்கு இந்த அகதிகளில் சிலராவது செல்ல வேண்டிவரும் என்றிருந்தது.
இது குறித்த மேலதிக விபரங்களை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.
--------------------------------------------------------------------------------
இலங்கையில் போலிஸ் அத்துமீறல்கள் தொடர்பாக கவலைகள் அதிகரித்துவருகின்றன
இலங்கை பொலிஸ்துறை சின்னம்
இலங்கையில் சிலகாலமாக போலீஸ் தடுப்புக்காவலில் இருந்தவர்கள் உயிரிழக்க நேரிட்ட சம்பவங்கள் வரிசையாக நடந்துள்ள நிலையில், அந்நாட்டின் போலீஸ் அத்துமீறல்கள் மீது கவனம் குவிந்துள்ளது.
இந்த ஒரு வருடத்தில் மட்டும் தடுப்புக்காவலின்போது உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32 என அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளது.
குற்றக்கும்பல்களை ஒடுக்கும் நடவடிக்கையாக போலிசார் மேற்கொண்ட காரியங்களுக்கு எதிராக இலங்கையில் ஆர்ப்பாட்டங்கள் நடந்துள்ளன.
உள்நாட்டுப் போர் முடிந்து ஐந்து மாதங்கள் கடந்துவிட்ட நிலையில், பாதுகாப்பு படையினர் புதிய எதிரிகளை தேட ஆரம்பித்துவிட்டனர் என்றும்கூட சிலர் விமர்சித்துள்ளனர்.
இலங்கையில் பொலிசாரும் படையினரும் சட்ட நடவடிக்கைகளுக்கு அப்பாற்பட்டவர்கள் என்ற ஒரு நிலைமையே நீடித்துவருகிறது.
சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் காவல்துறையினருக்கும் வழக்கறிஞர்களுக்கும் இடையே கடந்த பிப்ரவரி 19ஆம் நாளன்று நடந்த மோதல் சம்பவத்திற்கு நான்கு உயர் போலீஸ் அதிகாரிகளே பொறுப்பு எனக்கூறி, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் சென்னை மாநகர காவல்துறை ஆணையரும் தற்போதைய சட்டம்-ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி.யுமான ராதாகிருஷ்ணன், முன்னாள் கூடுதல் ஆணையர் விஸ்வநாதன், இணை ஆணயர் ராமசுப்பிரமணியன் மற்றும் துணை ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா ஆகியோர் மீது துறை-ரீதியிலான நடவடிக்கை எடுக்கலாம் என உத்தரவிடப்பட்டுள்ளது.
ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணியம் சாமி மீது முட்டை எறிந்து தாக்குதல் நடத்திய வழக்கறிஞர் சிலரைக் கைதுசெய்ய போலீஸார் உயர்நீதிமன்ற வளாகத்திற்குச் சென்றபோதுதான் இந்தப் பெரிய மோதல் மூண்டிருந்தது.
உச்சநீதிமன்ற உத்திரவின் பேரில் இந்தச் சம்பவம் தொடர்பான அனைத்து வழக்குக்களையும் சென்னை உயர் நீதிமன்றம் விசாரித்துவந்தது.
ஏறத்தாழ 20 நாட்கள் விசாரணைக்குப்பின் நீதிபதிகள் இப்ராகிம் கலிபுல்லா மற்றும் பானுமதி அடங்கிய டிவிஷன் பெஞ்ச் தனது தீர்ப்பினை வழங்கியுள்ளது.
--------------------------------------------------------------------------------
இந்தோனேஷியாவில் படகிலுள்ள இலங்கை அகதிகள் தொடர்பில் முடிவெடுப்பதில் சிக்கல்
இலங்கை அகதிகளை சுமந்துகொண்டு ஆஸ்திரேலியா நோக்கி சென்ற இரண்டு படகுகள் இந்தோனேஷியாவில் இருவேறு இடங்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த அகதிகளை என்ன செய்வது என்று முடிவெடுக்க முடியாமல் இந்தோனேஷிய அரசாங்கம் திணறிவருகிறது.
இந்த இரண்டு படகுகளில் உள்ள அகதிகள் அனைவருமே தாங்கள் ஆஸ்திரேலியாவுக்குத்தான் செல்ல வேண்டும் என்று கூறிக்கொண்டு படகை விட்டுக் கீழிறங்க மறுத்துவருகின்றனர்.
ஆஸ்திரேலியாவுக்கும் இந்தோனேஷியாவுக்கும் இடையிலானதொரு பிரச்சினையாக இவ்விவகாரம் உருவெடுத்துவருகிறது.
இந்த இரண்டு நாடுகளின் தலைவர்களும் இந்த அகதிகள் தொடர்பில் கொள்கை அளவில் ஒரு உடன்பாட்டுக்கு வந்தார்கள்.
அந்த உடன்பாட்டின்படி இந்தோனேஷியாவில் உள்ள தடுப்பு முகாம்களுக்கு இந்த அகதிகளில் சிலராவது செல்ல வேண்டிவரும் என்றிருந்தது.
இது குறித்த மேலதிக விபரங்களை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.
--------------------------------------------------------------------------------
இலங்கையில் போலிஸ் அத்துமீறல்கள் தொடர்பாக கவலைகள் அதிகரித்துவருகின்றன
இலங்கை பொலிஸ்துறை சின்னம்
இலங்கையில் சிலகாலமாக போலீஸ் தடுப்புக்காவலில் இருந்தவர்கள் உயிரிழக்க நேரிட்ட சம்பவங்கள் வரிசையாக நடந்துள்ள நிலையில், அந்நாட்டின் போலீஸ் அத்துமீறல்கள் மீது கவனம் குவிந்துள்ளது.
இந்த ஒரு வருடத்தில் மட்டும் தடுப்புக்காவலின்போது உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32 என அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளது.
குற்றக்கும்பல்களை ஒடுக்கும் நடவடிக்கையாக போலிசார் மேற்கொண்ட காரியங்களுக்கு எதிராக இலங்கையில் ஆர்ப்பாட்டங்கள் நடந்துள்ளன.
உள்நாட்டுப் போர் முடிந்து ஐந்து மாதங்கள் கடந்துவிட்ட நிலையில், பாதுகாப்பு படையினர் புதிய எதிரிகளை தேட ஆரம்பித்துவிட்டனர் என்றும்கூட சிலர் விமர்சித்துள்ளனர்.
இலங்கையில் பொலிசாரும் படையினரும் சட்ட நடவடிக்கைகளுக்கு அப்பாற்பட்டவர்கள் என்ற ஒரு நிலைமையே நீடித்துவருகிறது.
Wednesday, October 28, 2009
தமிழருக்கு நோபல் பரிசு
வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் வேதியல் துறையில் இந்த வருடத்துக்கான நோபெல் பரிசைப் சிதம்பரத்தில் பிறந்த தமிழரான வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் பெறுகிறார்.
வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் செவ்வி
தமிழகத்தின் சிதம்பரத்தை பிறப்பிடமாகக் கொண்ட வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன், தோமஸ் ஸ்டிட்ஸ் மற்றும் அடா யொனாத் ஆகியோர் இவ்வருடத்துக்கான வேதியலுக்கான நோபல் பரிசை பகிர்ந்துகொள்கிறார்கள்.
இவர்களில் ராமகிருஷ்ணன் அமெரிக்கக் குடியுரிமை பெற்றவரென்றாலும் இந்தியப் பூர்வீகம் கொண்டவர். ஏனைய இருவரில் ஒருவர் அமெரிக்கர், அடுத்தவர் இஸ்ரேலியர்.
டி.என்.ஏ.யின் தகவல்களை உடற்பாகங்களின் குணாதிசயங்களாக மாற்றம் செய்யும் ரைபோசோம்களின் கட்டமைப்பை கண்டறிந்தமைக்காக இவர்களுக்கு இந்த நோபல் பரிசு வழங்கப்படுகின்றது.
இவர்களது இந்த கண்டுபிடிப்பு புதிய நுண்ணுயிர்க்கொல்லிகளை தயாரிப்பதில் பெரும் உதவியாக இருக்கும் என்று நோபல் பரிசுக் குழு கூறுகின்றது.
வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் செவ்வி
தமிழகத்தின் சிதம்பரத்தை பிறப்பிடமாகக் கொண்ட வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன், தோமஸ் ஸ்டிட்ஸ் மற்றும் அடா யொனாத் ஆகியோர் இவ்வருடத்துக்கான வேதியலுக்கான நோபல் பரிசை பகிர்ந்துகொள்கிறார்கள்.
இவர்களில் ராமகிருஷ்ணன் அமெரிக்கக் குடியுரிமை பெற்றவரென்றாலும் இந்தியப் பூர்வீகம் கொண்டவர். ஏனைய இருவரில் ஒருவர் அமெரிக்கர், அடுத்தவர் இஸ்ரேலியர்.
டி.என்.ஏ.யின் தகவல்களை உடற்பாகங்களின் குணாதிசயங்களாக மாற்றம் செய்யும் ரைபோசோம்களின் கட்டமைப்பை கண்டறிந்தமைக்காக இவர்களுக்கு இந்த நோபல் பரிசு வழங்கப்படுகின்றது.
இவர்களது இந்த கண்டுபிடிப்பு புதிய நுண்ணுயிர்க்கொல்லிகளை தயாரிப்பதில் பெரும் உதவியாக இருக்கும் என்று நோபல் பரிசுக் குழு கூறுகின்றது.
ஆப்கான் நிலைமை குறித்து இந்தியா, ரஷ்யா மற்றும் சீனா கவலை
ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் பிராந்தியத்தில் நிலவும் சூழ்நிலை குறித்து, ரஷ்யா, இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகள் கவலை வெளியிட்டுள்ளன.
இன்று பெங்களூரில் நடைபெற்ற ரஷ்யா, இந்தியா மற்றும் சீன வெளியுறவு அமைச்சர்கள் மாநாட்டில் உலக அமைதிக்கு அச்சுறுத்தலாக விளங்கும் பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராட, ஒருங்கிணைந்து செயல்பட முடிவு செய்யப்பட்டுள்ளது.
ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜெய் லவ்ரோவ், இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா மற்றும் சீன வெளியுறவு அமைச்சர் யங் ஜியெசி ஆகியோர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றார்கள். இரண்டு மணி நேரம் நடைபெற்ற கூட்டத்தில், பயங்கரவாதம், பருவநிலை மாற்றம், பொருளாதார மந்த நிலை, சுகாதாரம், வேளாண்மை உள்பட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன.
அந்தக் கூட்டத்துக்குப் பிறகு வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில், சில அமைப்புக்கள் மற்றும் நபர்களுக்கு எதிராக ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் தடை விதித்துள்ள நிலையில், அந்த உத்தரவுகளை அனைத்து நாடுகளும் கண்டிப்பாகக் கடைபிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு சூழ்நிலை மோசமடைந்து வருவது குறித்து அந்த மாநாட்டில் கவலை தெரிவிக்கப்பட்டது. பயங்கரவாதத்துக்கு எதிரான சர்வதேச சமூகத்தின் ஒத்துழைப்பை வலுப்படுத்த, அனைத்து ஐ.நா உறுப்பு நாடுகளும், சர்வதேச பயங்கரவாதத்தை ஒடுக்குவது தொடர்பான நடைமுறைகளுக்கு அங்கீகாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வெளியுறவு அமைச்சர்கள் கேட்டு்க் கொண்டனர்.
இந்தோனேசியா அகதிகளை கொட்டுவதற்கான இடம் அல்ல என்கிறார் உள்ளூர் மாகாண ஆளுநர்
இந்தோனேசியாவின், இரு வேறு பகுதிகளில் இரு படகுகளில் முன்னூறுக்கும் மேற்பட்ட தஞ்சம் கோரும் இலங்கையர்கள் நிர்கதியாக நிற்கும் நிலையில், ''இந்தோனேசியா அகதிகளைக் கொண்டு கொட்டுவதற்கான இடமல்ல'' என்று அந்நாட்டில் உள்ள ஒரு மகாண ஆளுநர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு செல்ல முயன்ற இந்த இரண்டு படகுகளும் ஆஸ்திரேலிய கடற்படையால் தடுக்கப்பட்டன.
இந்தப் பிரச்சனையை தீர்ப்பது தொடர்பாக இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்திவருகின்றன.
இதில் 250 க்கும் அதிகமானோர் மேரக் துறைமுகத்தில் உள்ள ஒரு படகில் இருக்கின்றனர். இவர்கள் செவ்வாய்கிழமையன்று ஒரு போராட்டத்தை நடத்தியுள்ளனர்.
கம்யூனிஸ்ட் கட்சியின் தலித் ஆதரவுப் பேரணி
பேரணியில் கலந்து கொண்டவர்கள் தீண்டாமைக் கொடுமைகளுக்கு முடிவு கட்டப்படவேண்டும் என வலியுறுத்தி இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உருவாக்கியுள்ள தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பில் இன்று சென்னையில் பேரணி ஒன்று நடத்தப்பட்டது.
ஆலயங்களில் தலித் உரிமைகள் நிலை நாட்டப்படவேண்டும், வன்கொடுமைத் தடுப்புசட்டம் சரியாக அமல்படுத்தப்படவேண்டும், அரசு நிலங்கள் தலித் மக்களுக்கு வழங்கப்படவேண்டும், பாதாளச் சாக்கடை அடைப்புக்களை அகற்ற தலித் மக்கள் இறக்கிவிடப்படக்கூடாது, மாறாக இயந்திரங்கள் பயன்படுத்தப்படவேண்டும், தலித்துகளுக்கான இட ஒதுக்கீடு 18 இல் இருந்து 19 சதமாக உயர்த்தப்படவேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகள் பேரணியில் எழுப்பப்பட்டன.
தங்களது கோரிக்கைகள் அடங்கிய மனுவை முதலமைச்சரிடம் கையளித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய வரதராசன் கோரிக்கைகள் நியாயமானவையே என்று முதல்வர் கருணாநிதி ஒப்புக்கொண்டு, அவையெல்லாம் படிப்படியாக நிறைவேற்றப்படும் என்று உறுதியளித்ததாகத் தெரிவித்தார்.
ஆனால் தலித் நிலையில் முன்னேற்றம் ஏற்படாவிட்டால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுகள் தங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்துவர் என்றும் வரதராசன் எச்சரித்தார்.
இன்று பெங்களூரில் நடைபெற்ற ரஷ்யா, இந்தியா மற்றும் சீன வெளியுறவு அமைச்சர்கள் மாநாட்டில் உலக அமைதிக்கு அச்சுறுத்தலாக விளங்கும் பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராட, ஒருங்கிணைந்து செயல்பட முடிவு செய்யப்பட்டுள்ளது.
ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜெய் லவ்ரோவ், இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா மற்றும் சீன வெளியுறவு அமைச்சர் யங் ஜியெசி ஆகியோர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றார்கள். இரண்டு மணி நேரம் நடைபெற்ற கூட்டத்தில், பயங்கரவாதம், பருவநிலை மாற்றம், பொருளாதார மந்த நிலை, சுகாதாரம், வேளாண்மை உள்பட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன.
அந்தக் கூட்டத்துக்குப் பிறகு வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில், சில அமைப்புக்கள் மற்றும் நபர்களுக்கு எதிராக ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் தடை விதித்துள்ள நிலையில், அந்த உத்தரவுகளை அனைத்து நாடுகளும் கண்டிப்பாகக் கடைபிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு சூழ்நிலை மோசமடைந்து வருவது குறித்து அந்த மாநாட்டில் கவலை தெரிவிக்கப்பட்டது. பயங்கரவாதத்துக்கு எதிரான சர்வதேச சமூகத்தின் ஒத்துழைப்பை வலுப்படுத்த, அனைத்து ஐ.நா உறுப்பு நாடுகளும், சர்வதேச பயங்கரவாதத்தை ஒடுக்குவது தொடர்பான நடைமுறைகளுக்கு அங்கீகாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வெளியுறவு அமைச்சர்கள் கேட்டு்க் கொண்டனர்.
இந்தோனேசியா அகதிகளை கொட்டுவதற்கான இடம் அல்ல என்கிறார் உள்ளூர் மாகாண ஆளுநர்
இந்தோனேசியாவின், இரு வேறு பகுதிகளில் இரு படகுகளில் முன்னூறுக்கும் மேற்பட்ட தஞ்சம் கோரும் இலங்கையர்கள் நிர்கதியாக நிற்கும் நிலையில், ''இந்தோனேசியா அகதிகளைக் கொண்டு கொட்டுவதற்கான இடமல்ல'' என்று அந்நாட்டில் உள்ள ஒரு மகாண ஆளுநர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு செல்ல முயன்ற இந்த இரண்டு படகுகளும் ஆஸ்திரேலிய கடற்படையால் தடுக்கப்பட்டன.
இந்தப் பிரச்சனையை தீர்ப்பது தொடர்பாக இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்திவருகின்றன.
இதில் 250 க்கும் அதிகமானோர் மேரக் துறைமுகத்தில் உள்ள ஒரு படகில் இருக்கின்றனர். இவர்கள் செவ்வாய்கிழமையன்று ஒரு போராட்டத்தை நடத்தியுள்ளனர்.
கம்யூனிஸ்ட் கட்சியின் தலித் ஆதரவுப் பேரணி
பேரணியில் கலந்து கொண்டவர்கள் தீண்டாமைக் கொடுமைகளுக்கு முடிவு கட்டப்படவேண்டும் என வலியுறுத்தி இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உருவாக்கியுள்ள தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பில் இன்று சென்னையில் பேரணி ஒன்று நடத்தப்பட்டது.
ஆலயங்களில் தலித் உரிமைகள் நிலை நாட்டப்படவேண்டும், வன்கொடுமைத் தடுப்புசட்டம் சரியாக அமல்படுத்தப்படவேண்டும், அரசு நிலங்கள் தலித் மக்களுக்கு வழங்கப்படவேண்டும், பாதாளச் சாக்கடை அடைப்புக்களை அகற்ற தலித் மக்கள் இறக்கிவிடப்படக்கூடாது, மாறாக இயந்திரங்கள் பயன்படுத்தப்படவேண்டும், தலித்துகளுக்கான இட ஒதுக்கீடு 18 இல் இருந்து 19 சதமாக உயர்த்தப்படவேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகள் பேரணியில் எழுப்பப்பட்டன.
தங்களது கோரிக்கைகள் அடங்கிய மனுவை முதலமைச்சரிடம் கையளித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய வரதராசன் கோரிக்கைகள் நியாயமானவையே என்று முதல்வர் கருணாநிதி ஒப்புக்கொண்டு, அவையெல்லாம் படிப்படியாக நிறைவேற்றப்படும் என்று உறுதியளித்ததாகத் தெரிவித்தார்.
ஆனால் தலித் நிலையில் முன்னேற்றம் ஏற்படாவிட்டால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுகள் தங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்துவர் என்றும் வரதராசன் எச்சரித்தார்.
Tuesday, October 27, 2009
இலங்கை மனித உரிமை மீறல்கள் பற்றிய அமெரிக்க புகார்களை ஆராய உயர்மட்டக்குழு நியமனம்
இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கு எதிராக நடந்த சண்டைகளின் இறுதி மாதங்களில் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றதாக அமெரிக்கா கூறும் குற்றச்சாட்டு பற்றி விசாரிக்க உயர்மட்ட சுயாதீன குழு நியமிக்கப்படும் என்று இலங்கை கூறுகிறது.
இலங்கை இராணுவத்தாலும், விடுதலைப்புலிகளாலும் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் மோசமான வன்செயல்கள் குறித்து அமெரிக்க அரசுத்துறை கடந்த வாரம் அமெரிக்க காங்கிரஸ் நாடாளுமன்றத்துக்கு ஒரு அறிக்கையை சமர்ப்பித்தது.
தமது இராணுவத்தினர் தமிழ் மக்களை விடுதலைப்புலிகளிடம் இருந்து மீட்பதற்கான மனிதாபிமான நடவடிக்கையிலேயே ஈடுபட்டதாக இலங்கை அரசாங்கம் கூறுகிறது.
இது தொடர்பில் இலங்கையின் மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க அவர்கள் பிபிசிக்கு அளித்த பேட்டியை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.
யசீகரனும்,அவரது மனைவியும் பயங்கரவாத தடுப்பு சட்டத்திலிருந்து விடுதலை
இலங்கையில் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டிருந்த சஞ்சிகை வெளியீட்டாளரும் அச்சக உரிமையாளருமான யசீகரனும் அவரது மனைவியும் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டனர்.
இவர்களுக்கு எதிராக தொடரப்பட்டிருந்த பயங்கரவாத தடுப்புசட்டத்தின் கீழான வழக்குகள் இரண்டையும் இலங்கை சட்டமா அதிபர் விலக்கிக்கொண்டதை அடுத்து இவர்கள் கொழும்பு மேல் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டனர்.
இனவாத உணர்வுகளை தூண்டும் வகையிலான சஞ்சிகை யொன்றை அச்சிட்டு வெளியிட்டமை, அதற்காக சதிசெய்தமை, சஞ்சிகைக்காக வெளிநாடுகளிலிருந்து நிதியுதவி பெற்றமை போன்ற குற்றச்சாட்டுகள் யசீகரன் மீதும் அவருக்கு உடந்தையாய் இருந்ததாக யசீகரன் மனைவி மீதும் குற்றம்சாட்டப்பட்டிருந்ததது.
இதே சஞ்சிகையை பிரசுரித்தமை குறித்து மூத்த பத்திரிகையாளர் ஜே.எஸ்.திஸ்ஸநாயகத்துக்கு 20 வருட கடுழிய சிறைத்தண்டணையை கடந்த ஆகஸ்ட் 31 ஆம் திகதி கொழும்பு மேல்நீதிமன்றம் விதித்திருந்தது.
உலக தமிழ் செம்மொழி மாநாட்டில் பங்கேற்பது குறித்து முடிவெடுக்கவில்லை - சிவத்தம்பி
தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ள உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் கலந்துகொள்வதா இல்லையா என்பதை தாம் இன்னமும் இறுதியாக முடிவெடுக்கவில்லை என்று இலங்கை தமிழறிஞர் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்கள் இன்று தமிழோசையிடம் தெரிவித்தார்.
தற்போதுள்ள தமிழ் அரசியல் சூழ்நிலையில் இந்த மாநாட்டில் பங்கேற்பது பொருத்தமற்றது என சிவத்தம்பி பி.பி.சி தமிழோசைக்கு சில நாட்களுக்கு முன்பு அளித்த பேட்டியில் கூறியிருந்தார்.
இலங்கை தமிழறிஞர் கார்த்திகேசு சிவத்தம்பி
ஆனால் இது குறித்து திங்கட்கிழமை கருத்து வெளியிட்ட தமிழக முதல்வர் மு கருணாநிதி, கார்த்திகேசு சிவத்தம்பி அவர்கள் அடுத்த ஆண்டு கோவையில் நடைபெறவிருக்கும் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் கலந்துகொள்வார் என்று அறிவித்திருக்கிறார்.
ஆய்வரங்க பணிக்காக முன்னதாகவே வருவதாக சிவத்தம்பி தெரிவித்திருப்பதாகவும், மேலும் விவாதப்பொருட்களாக எடுத்துக்கொள்ள ஐந்து விடயங்களை குறிப்பிட்டிருக்கிறார் என்றும் திங்கட்கிழமை சென்னையில் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் கருணாநிதி கூறியிருக்கிறார்.
மேலும் சிவத்தம்பி அவர்களின் ஆலோசனையின்பேரில்தான் ஜனவரியில் நடக்கவிருந்த மாநாடு ஜூன் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டதாகவும் தெரிவித்திருக்கிறார்.
இந்தப் பின்னணியில் கருணாநிதியின் இன்றைய அறிவிப்பு குறித்து பிபிசி தமிழோசையிடம் கருத்து தெரிவித்த சிவத் தம்பி அவர்கள், மாநாட்டில் கலந்துகொள்வதா இல்லையா என்பது தொடர்பில் தாம் இன்னமும் இறுதி முடிவு எடுக்கவில்லை என்று தெரிவித்திருக்கிறார்.
இலங்கை இராணுவத்தாலும், விடுதலைப்புலிகளாலும் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் மோசமான வன்செயல்கள் குறித்து அமெரிக்க அரசுத்துறை கடந்த வாரம் அமெரிக்க காங்கிரஸ் நாடாளுமன்றத்துக்கு ஒரு அறிக்கையை சமர்ப்பித்தது.
தமது இராணுவத்தினர் தமிழ் மக்களை விடுதலைப்புலிகளிடம் இருந்து மீட்பதற்கான மனிதாபிமான நடவடிக்கையிலேயே ஈடுபட்டதாக இலங்கை அரசாங்கம் கூறுகிறது.
இது தொடர்பில் இலங்கையின் மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க அவர்கள் பிபிசிக்கு அளித்த பேட்டியை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.
யசீகரனும்,அவரது மனைவியும் பயங்கரவாத தடுப்பு சட்டத்திலிருந்து விடுதலை
இலங்கையில் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டிருந்த சஞ்சிகை வெளியீட்டாளரும் அச்சக உரிமையாளருமான யசீகரனும் அவரது மனைவியும் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டனர்.
இவர்களுக்கு எதிராக தொடரப்பட்டிருந்த பயங்கரவாத தடுப்புசட்டத்தின் கீழான வழக்குகள் இரண்டையும் இலங்கை சட்டமா அதிபர் விலக்கிக்கொண்டதை அடுத்து இவர்கள் கொழும்பு மேல் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டனர்.
இனவாத உணர்வுகளை தூண்டும் வகையிலான சஞ்சிகை யொன்றை அச்சிட்டு வெளியிட்டமை, அதற்காக சதிசெய்தமை, சஞ்சிகைக்காக வெளிநாடுகளிலிருந்து நிதியுதவி பெற்றமை போன்ற குற்றச்சாட்டுகள் யசீகரன் மீதும் அவருக்கு உடந்தையாய் இருந்ததாக யசீகரன் மனைவி மீதும் குற்றம்சாட்டப்பட்டிருந்ததது.
இதே சஞ்சிகையை பிரசுரித்தமை குறித்து மூத்த பத்திரிகையாளர் ஜே.எஸ்.திஸ்ஸநாயகத்துக்கு 20 வருட கடுழிய சிறைத்தண்டணையை கடந்த ஆகஸ்ட் 31 ஆம் திகதி கொழும்பு மேல்நீதிமன்றம் விதித்திருந்தது.
உலக தமிழ் செம்மொழி மாநாட்டில் பங்கேற்பது குறித்து முடிவெடுக்கவில்லை - சிவத்தம்பி
தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ள உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் கலந்துகொள்வதா இல்லையா என்பதை தாம் இன்னமும் இறுதியாக முடிவெடுக்கவில்லை என்று இலங்கை தமிழறிஞர் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்கள் இன்று தமிழோசையிடம் தெரிவித்தார்.
தற்போதுள்ள தமிழ் அரசியல் சூழ்நிலையில் இந்த மாநாட்டில் பங்கேற்பது பொருத்தமற்றது என சிவத்தம்பி பி.பி.சி தமிழோசைக்கு சில நாட்களுக்கு முன்பு அளித்த பேட்டியில் கூறியிருந்தார்.
இலங்கை தமிழறிஞர் கார்த்திகேசு சிவத்தம்பி
ஆனால் இது குறித்து திங்கட்கிழமை கருத்து வெளியிட்ட தமிழக முதல்வர் மு கருணாநிதி, கார்த்திகேசு சிவத்தம்பி அவர்கள் அடுத்த ஆண்டு கோவையில் நடைபெறவிருக்கும் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் கலந்துகொள்வார் என்று அறிவித்திருக்கிறார்.
ஆய்வரங்க பணிக்காக முன்னதாகவே வருவதாக சிவத்தம்பி தெரிவித்திருப்பதாகவும், மேலும் விவாதப்பொருட்களாக எடுத்துக்கொள்ள ஐந்து விடயங்களை குறிப்பிட்டிருக்கிறார் என்றும் திங்கட்கிழமை சென்னையில் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் கருணாநிதி கூறியிருக்கிறார்.
மேலும் சிவத்தம்பி அவர்களின் ஆலோசனையின்பேரில்தான் ஜனவரியில் நடக்கவிருந்த மாநாடு ஜூன் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டதாகவும் தெரிவித்திருக்கிறார்.
இந்தப் பின்னணியில் கருணாநிதியின் இன்றைய அறிவிப்பு குறித்து பிபிசி தமிழோசையிடம் கருத்து தெரிவித்த சிவத் தம்பி அவர்கள், மாநாட்டில் கலந்துகொள்வதா இல்லையா என்பது தொடர்பில் தாம் இன்னமும் இறுதி முடிவு எடுக்கவில்லை என்று தெரிவித்திருக்கிறார்.
Monday, October 26, 2009
மீள்குடியேற்றத்திற்கு மேலதிகமான மக்களை அனுப்ப நடவடிக்கை
அரச அதிகாரிகள் இலங்கையின் வடக்கே முல்லைத்தீவு மாவட்டம் துணுக்காய் பிரதேசத்திற்கு இரண்டாம் தொகுதியாக ஆயிரம் பேர் மீள்குடியேற்றத்திற்காக அனுப்பி வைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.
கடந்த வியாழக்கிழமை முதல் தொகுதியாக துணுக்காய் பிரதேசத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட 297 குடும்பங்களில் 75 வீதமானவர்கள் அவர்கள் தங்க வைக்கப்பட்டிருந்த பாடசாலைகளில் இருந்து தமது வீடுகள் காணிகளுக்குச் சென்று விட்டதாக முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களின் அரசாங்க அதிபர் எமில்டா சுகுமார் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.
வவுனியா மனிக்பாம் முகாம்களில் தங்கியுள்ள யாழ் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் இன்னும் பத்து நாட்களுக்குள் அவர்களது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு விடுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றார்கள்.
இதுபற்றிய மேலதிக விபரங்களை இன்றைய செய்தியரங்கத்தில் கேட்கலாம்.
திருகோணமலைக்கு அனுப்பட்டவர்களில் புலி உறுப்பினர்கள் கைது
இலங்கை இராணுவம் இராணுவத்தினர் வவுனியா முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டு திருகோணமலைக்கு அனுப்பி வைக்கப்பட்டவர்களில் பலர் இராணுவத்தினரால் கைது செய்யப்படுவதாக வெளியாகியுள்ள தகவல்கள் குறித்து இலங்கை இராணுவத்தின் பதில் பேச்சாளர் பிரிகேடியர் பிரசாத் சமரசிங்கவிடம் வினவப்பட்ட போது, அதனை உறுதிப்படுத்தும் முகமாக அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
இடம்பெயர்ந்த மக்களை மீண்டும் திருகோணமலைக்கு கொண்டு வந்ததன் பின்னர் விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்தவர்கள் அங்கு வைத்தும் அடையாளம் காணப்படுகின்றார்கள் என்றும் அவ்வாறு அடையாளம் காணப்பட்டதன் பின்னர் அவர்களை கைது செய்து வவுனியாவிலுள்ள புனர்வாழ்வு முகாம்களுக்கு அனுப்பி வைப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இது குறித்த மேலதிக செய்திகளை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.
இலங்கை அரசு மீது தடை விதிப்பது குறித்து ஆலோசிக்க வேண்டும்
ஆஸ்திரேலிய பசுமை கட்சி தஞ்சம் கோருவது அதிகரிப்பு இலங்கை தமிழர்கள் நடத்தப்படும் விதம் குறித்து கவலைகள் இருக்கும் நேரத்தில் இலங்கை மீது தடைகள் விதிப்பது குறித்து ஆஸ்திரேலிய அரசாங்கம் ஆலோசனை செய்ய வேண்டும் என்று ஆஸ்திரேலிய பசுமை கட்சியின் தலைவர் கூறியுள்ளார்.
தமிழ் மக்கள் இலங்கையை விட்டு வெளியேறி ஆஸ்திரேலியாவில் தஞ்சம் கோருவதை தடுக்க வேண்டுமானால் மேலதிகமான நடவடிக்கை தேவையாக இருப்பதாக பசுமை கட்சியின் தலைவர் பாப் பிரவுன் தெரிவித்துள்ளார்.
விடுதலைப்புலிகளுக்கு எதிரான உள்நாட்டு யுத்தத்தை இந்த ஆண்டின் முற்பகுதியில் இலங்கை அரசு முடிவுக்கு கொண்டு வந்தது. இதன் பின்னர் தஞ்சம் கோரும் தமிழர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
கடந்த வாரம் 75க்கும் மேற்பட்ட தஞ்சம் கோரும் இலங்கையர்களை ஏற்றிச் சென்ற கப்பலை ஆஸ்திரேலிய கடற்படை மீட்டு இருந்தது. இலங்கையின் கிழக்கே சந்தேக படகில் சோதனை மட்டக்களப்பில் சந்தேக படகு இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு பெரிய கல்லாறு கடலோரம் சட்ட விரோத ஆட் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் ஆழ் கடல் மீன்பிடிப் படகொன்று கைவிடப்பட்ட நிலையில் கரையொதுங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பொது மக்களிடமிருந்து கிடைத்த தகவலின் பேரில் சனிக்கிழ மை மாலை மட்டக்களப்பு பெரிய கல்லாறு கடலோரப்பகுதிக்கு சென்ற களுவாஞ்சிக்குடி காவல்துறையினர் அங்கிருந்த படகை சோதனையிட்ட போது ஒரு தொகுதி மருந்துப் பொருட் கள், தண்ணீர் போத்தல்கள், எரிபொருள் நிரப்பப்பட்ட கொள் கலன்கள், சமையல் எரிவாயு சிலிண்டர்கள், மற்றும் அரிசி, கடலை பிஸ்கட் உட்பட உணவுப் பொருட்கள் ஆகியவற்றை அந்த படகில் கண்டெடுத்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த குறிப்பிட்ட படகில் வெளிநாட்டு பயணமொன்றின் நிமித் தம் சட்ட விரோத குடியேற்றக்காரர்கள் பயணம் செய்திருக்க லாம் என பரவலாக ஊகங்கள் நிலவுகின்ற போதிலும் தமது விசாரணைகள் நிறைவடைந்த பின்னரே இது பற்றிய தகவல் களை தங்களால் உறுதியாக தெரிவிக்க முடியும் என காவல்துறையினர் குறிப்பிடுகின்றனர்.
குறிப்பிட்ட படகில் சுமார் 18 முதல் 20 பேர் வரை பயணம் செய்திருக்கலாம் என தாம் கருதுவதாகவும் குறித்த படகு தொடர்பாகவும் அதில் பயணித்தவர்கள் தொடர்பாகவும் விசாரனைகள் தொடர்வதாகவும் காவல்துறையினர் கூறுகின்றனர்.
கடந்த வியாழக்கிழமை முதல் தொகுதியாக துணுக்காய் பிரதேசத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட 297 குடும்பங்களில் 75 வீதமானவர்கள் அவர்கள் தங்க வைக்கப்பட்டிருந்த பாடசாலைகளில் இருந்து தமது வீடுகள் காணிகளுக்குச் சென்று விட்டதாக முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களின் அரசாங்க அதிபர் எமில்டா சுகுமார் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.
வவுனியா மனிக்பாம் முகாம்களில் தங்கியுள்ள யாழ் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் இன்னும் பத்து நாட்களுக்குள் அவர்களது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு விடுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றார்கள்.
இதுபற்றிய மேலதிக விபரங்களை இன்றைய செய்தியரங்கத்தில் கேட்கலாம்.
திருகோணமலைக்கு அனுப்பட்டவர்களில் புலி உறுப்பினர்கள் கைது
இலங்கை இராணுவம் இராணுவத்தினர் வவுனியா முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டு திருகோணமலைக்கு அனுப்பி வைக்கப்பட்டவர்களில் பலர் இராணுவத்தினரால் கைது செய்யப்படுவதாக வெளியாகியுள்ள தகவல்கள் குறித்து இலங்கை இராணுவத்தின் பதில் பேச்சாளர் பிரிகேடியர் பிரசாத் சமரசிங்கவிடம் வினவப்பட்ட போது, அதனை உறுதிப்படுத்தும் முகமாக அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
இடம்பெயர்ந்த மக்களை மீண்டும் திருகோணமலைக்கு கொண்டு வந்ததன் பின்னர் விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்தவர்கள் அங்கு வைத்தும் அடையாளம் காணப்படுகின்றார்கள் என்றும் அவ்வாறு அடையாளம் காணப்பட்டதன் பின்னர் அவர்களை கைது செய்து வவுனியாவிலுள்ள புனர்வாழ்வு முகாம்களுக்கு அனுப்பி வைப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இது குறித்த மேலதிக செய்திகளை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.
இலங்கை அரசு மீது தடை விதிப்பது குறித்து ஆலோசிக்க வேண்டும்
ஆஸ்திரேலிய பசுமை கட்சி தஞ்சம் கோருவது அதிகரிப்பு இலங்கை தமிழர்கள் நடத்தப்படும் விதம் குறித்து கவலைகள் இருக்கும் நேரத்தில் இலங்கை மீது தடைகள் விதிப்பது குறித்து ஆஸ்திரேலிய அரசாங்கம் ஆலோசனை செய்ய வேண்டும் என்று ஆஸ்திரேலிய பசுமை கட்சியின் தலைவர் கூறியுள்ளார்.
தமிழ் மக்கள் இலங்கையை விட்டு வெளியேறி ஆஸ்திரேலியாவில் தஞ்சம் கோருவதை தடுக்க வேண்டுமானால் மேலதிகமான நடவடிக்கை தேவையாக இருப்பதாக பசுமை கட்சியின் தலைவர் பாப் பிரவுன் தெரிவித்துள்ளார்.
விடுதலைப்புலிகளுக்கு எதிரான உள்நாட்டு யுத்தத்தை இந்த ஆண்டின் முற்பகுதியில் இலங்கை அரசு முடிவுக்கு கொண்டு வந்தது. இதன் பின்னர் தஞ்சம் கோரும் தமிழர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
கடந்த வாரம் 75க்கும் மேற்பட்ட தஞ்சம் கோரும் இலங்கையர்களை ஏற்றிச் சென்ற கப்பலை ஆஸ்திரேலிய கடற்படை மீட்டு இருந்தது. இலங்கையின் கிழக்கே சந்தேக படகில் சோதனை மட்டக்களப்பில் சந்தேக படகு இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு பெரிய கல்லாறு கடலோரம் சட்ட விரோத ஆட் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் ஆழ் கடல் மீன்பிடிப் படகொன்று கைவிடப்பட்ட நிலையில் கரையொதுங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பொது மக்களிடமிருந்து கிடைத்த தகவலின் பேரில் சனிக்கிழ மை மாலை மட்டக்களப்பு பெரிய கல்லாறு கடலோரப்பகுதிக்கு சென்ற களுவாஞ்சிக்குடி காவல்துறையினர் அங்கிருந்த படகை சோதனையிட்ட போது ஒரு தொகுதி மருந்துப் பொருட் கள், தண்ணீர் போத்தல்கள், எரிபொருள் நிரப்பப்பட்ட கொள் கலன்கள், சமையல் எரிவாயு சிலிண்டர்கள், மற்றும் அரிசி, கடலை பிஸ்கட் உட்பட உணவுப் பொருட்கள் ஆகியவற்றை அந்த படகில் கண்டெடுத்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த குறிப்பிட்ட படகில் வெளிநாட்டு பயணமொன்றின் நிமித் தம் சட்ட விரோத குடியேற்றக்காரர்கள் பயணம் செய்திருக்க லாம் என பரவலாக ஊகங்கள் நிலவுகின்ற போதிலும் தமது விசாரணைகள் நிறைவடைந்த பின்னரே இது பற்றிய தகவல் களை தங்களால் உறுதியாக தெரிவிக்க முடியும் என காவல்துறையினர் குறிப்பிடுகின்றனர்.
குறிப்பிட்ட படகில் சுமார் 18 முதல் 20 பேர் வரை பயணம் செய்திருக்கலாம் என தாம் கருதுவதாகவும் குறித்த படகு தொடர்பாகவும் அதில் பயணித்தவர்கள் தொடர்பாகவும் விசாரனைகள் தொடர்வதாகவும் காவல்துறையினர் கூறுகின்றனர்.
Friday, October 23, 2009
இலங்கையில் விடுதலைப் புலிகள் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளில் இடம்பெயர்ந்தோரை மீள்குடியமர்த்த நடவடிக்கை
இலங்கையில் வவுனியா இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களில் முன்பு விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த கிளிநொச்சி முல்லைத்தீவு ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த மக்களை விடுவிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இடைத்தங்கல் முகாம்களில் இருந்து ஏனைய மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் இதற்கு முன்பு விடுவிக்கப்பட்டிருந்தாலும், விடுதலைப் புலிகள் கட்டுப்பாட்டுப் பகுதிகளாக இருந்த இடங்களைச் சேர்ந்த மக்கள் விடுவிக்கப்படுவதென்பது இதுவே முதல் முறை.
முல்லைத் தீவு, கிளிநொச்சி அல்லாது வவுனியா, மன்னார் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் அடங்கலாக நாற்பதாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் ஒரு மாத காலத்தில் மீள்குடியேற்றம் செய்யப்படுவார்கள் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
இந்நடவடிக்கையின் முதற்கட்டமாக 5960 பேர் வியாழனன்று வவுனியா முகாம்களில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த மீள்குடியேற்றத்துக்கான ஆரம்ப வைபவங்கள் மன்னாரின் அடம்பன், முல்லைத் தீவு மாவட்டம் துணுக்காய் பிரதேச பாலிநகர் பாடசாலை, வவுனியா நகரம் ஆகிய இடங்களில் நடைபெற்றுள்ளன.
இலங்கையில் மோதல் காலத்தில் மனித குலத்துக்கெதிரான போர்க்குற்றங்கள்: அமெரிக்க அரசுத்துறை விடுதலைப்புலிகளுக்கு எதிரான இலங்கை அரசாங்கத்துடைய இராணுவ நடவடிக்கையின் இறுதி மாதங்களில் நடந்த சம்பவங்கள் மனித குலத்துக்கு எதிரான போர்க்குற்றங்களாக இருக்கலாம் என்று அமெரிக்க காங்கிரஸ் மன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள வெளியுறவுத்துறை அறிக்கை கூறியுள்ளது.
யுத்தத்தில் ஈடுபட்ட இருதரப்பினரின் நேரடி அனுபவங்களின் அடிப்படையில் அமைந்துள்ள இந்த அறிக்கையில், போர்க்குற்றங்கள் என்று வருணிக்கப்படுகின்ற சம்பவங்களில் பெரும்பான்மையானவை மோதலற்ற பிரதேசம் என்று அரசாங்கத்தால் குறிக்கப்பட்டிருந்த இடங்களில் நடந்திருந்தன என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஆனால் அமெரிக்காவின் இந்த அறிக்கை முகாந்திரமற்ற ஒன்றாகத் தெரிகிறது என்று கூறியுள்ள இலங்கை அரசாங்கம், பொதுமக்களைக் காப்பாற்றுவதில் ஆயுதப் படையினர் மனசாட்சியுடன் செயல்பட்டனர் என்று கூறுகிறது.
மாநிலத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சிக்கு கணிசமான வெற்றிகள்
இந்தியாவில் மூன்று மாநிலங்களில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றுள்ளது.
மகாராஷ்டிர மாநிலத்தில் தொடர்ந்து மூன்றாவது முறையாக காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சியைப் பிடிக்கின்றன.
அருணாசலப் பிரதேசத்திலும் காங்கிரஸ் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது.
ஆனால், ஹரியாணா மாநிலத்தில் காங்கிரஸ் தனிப்பெரும் கட்சியாக வந்திருந்தாலும் அதனால் பெரும்பான்மையைப் பெற முடியவில்லை.
மகாராஷ்டிர மாநிலத்தில், காங்கிரஸ் – தேசியவாத காங்கிரஸ் கூட்டணி 144 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியமைக்க அவர்களுக்கு மேலும் ஓர் இடம் தேவை.
அருணாசலப் பிரதேசத்தில், மொத்தமுள்ள 60 தொகுதிகளில் 42 தொகுதிகளைக் கைப்பற்றி காங்கிரஸ் பெரும் வெற்றி பெற்றுள்ளது.
ஹரியாணா மாநிலத்தில், காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை பலம் பெற முடியவில்லை. அதற்கு மேலும் ஐந்து இடங்கள் தேவை. ஓம்பிரகாஷ் செளதாலா தலைமையிலான இந்திய தேசிய லோக் தளக் கூட்டணி 32 இடங்களிலும், பாஜக நான்கு இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. யார் ஆட்சியமைப்பது என்பதை முடிவு செய்வதில், சுயேச்சைகள் முக்கியப் பங்கு வகிப்பார்கள் எனத் தெரிகிறது.
பிபிசி தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தீவிர வலதுசாரிக் கட்சித் தலைவருக்கு வாய்ப்பளிப்பது குறித்து சர்ச்சை எழுந்துள்ளது பி.என்.பி. தலைவர் நிக் க்ரிஃபின்பிபிசி தொலைக்காட்சியின் கேள்வி நேரம் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக லண்டனில் உள்ள பிபிசி தொலைக்காட்சி மையத்துக்கு பிரிட்டனின் தீவிர வலதுசாரிக் கட்சியான பிரிட்டிஷ் தேசியவாதக் கட்சியின் தலைவர் வருவதையிட்டு அங்கு கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பி.என்.பி. தலைவர் நிக் க்ரிஃபின் வரும்போது தொலைக்காட்சி மையத்தில் ஆர்ப்பாட்டம் செய்யப்போவதாக பாஸிஸ எதிர்ப்பு ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர்.
பொதுமக்களின் கேள்விகளுக்கு அரசியல்வாதிகளும் பிற முக்கியஸ்தர்களும் பதில் அளிக்கும் இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பி.என்.பி. தலைவர் தோன்றுவது என்பது இதுவே முதல் முறை.
வெள்ளையினத்தவருக்கே பிரிட்டன் என்ற வாதத்தை முன்வைத்து அரசியலில் ஈடுபட்டுவரும் பி.என்.பி கட்சி ஐரோப்பிய தேர்தலில் சில ஆசனங்களை வென்றுள்ள நிலையில், அக்கட்சிக்கு நிகழ்ச்சியில் இடம் அளிப்பதைத் தவிர வேறு வழியில்லை என பிபிசி நிறுவனம் வாதிட்டுள்ளது.
இந்த சர்ச்சை குறித்த மேலதிக விபரங்களை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.
இடைத்தங்கல் முகாம்களில் இருந்து ஏனைய மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் இதற்கு முன்பு விடுவிக்கப்பட்டிருந்தாலும், விடுதலைப் புலிகள் கட்டுப்பாட்டுப் பகுதிகளாக இருந்த இடங்களைச் சேர்ந்த மக்கள் விடுவிக்கப்படுவதென்பது இதுவே முதல் முறை.
முல்லைத் தீவு, கிளிநொச்சி அல்லாது வவுனியா, மன்னார் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் அடங்கலாக நாற்பதாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் ஒரு மாத காலத்தில் மீள்குடியேற்றம் செய்யப்படுவார்கள் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
இந்நடவடிக்கையின் முதற்கட்டமாக 5960 பேர் வியாழனன்று வவுனியா முகாம்களில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த மீள்குடியேற்றத்துக்கான ஆரம்ப வைபவங்கள் மன்னாரின் அடம்பன், முல்லைத் தீவு மாவட்டம் துணுக்காய் பிரதேச பாலிநகர் பாடசாலை, வவுனியா நகரம் ஆகிய இடங்களில் நடைபெற்றுள்ளன.
இலங்கையில் மோதல் காலத்தில் மனித குலத்துக்கெதிரான போர்க்குற்றங்கள்: அமெரிக்க அரசுத்துறை விடுதலைப்புலிகளுக்கு எதிரான இலங்கை அரசாங்கத்துடைய இராணுவ நடவடிக்கையின் இறுதி மாதங்களில் நடந்த சம்பவங்கள் மனித குலத்துக்கு எதிரான போர்க்குற்றங்களாக இருக்கலாம் என்று அமெரிக்க காங்கிரஸ் மன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள வெளியுறவுத்துறை அறிக்கை கூறியுள்ளது.
யுத்தத்தில் ஈடுபட்ட இருதரப்பினரின் நேரடி அனுபவங்களின் அடிப்படையில் அமைந்துள்ள இந்த அறிக்கையில், போர்க்குற்றங்கள் என்று வருணிக்கப்படுகின்ற சம்பவங்களில் பெரும்பான்மையானவை மோதலற்ற பிரதேசம் என்று அரசாங்கத்தால் குறிக்கப்பட்டிருந்த இடங்களில் நடந்திருந்தன என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஆனால் அமெரிக்காவின் இந்த அறிக்கை முகாந்திரமற்ற ஒன்றாகத் தெரிகிறது என்று கூறியுள்ள இலங்கை அரசாங்கம், பொதுமக்களைக் காப்பாற்றுவதில் ஆயுதப் படையினர் மனசாட்சியுடன் செயல்பட்டனர் என்று கூறுகிறது.
மாநிலத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சிக்கு கணிசமான வெற்றிகள்
இந்தியாவில் மூன்று மாநிலங்களில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றுள்ளது.
மகாராஷ்டிர மாநிலத்தில் தொடர்ந்து மூன்றாவது முறையாக காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சியைப் பிடிக்கின்றன.
அருணாசலப் பிரதேசத்திலும் காங்கிரஸ் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது.
ஆனால், ஹரியாணா மாநிலத்தில் காங்கிரஸ் தனிப்பெரும் கட்சியாக வந்திருந்தாலும் அதனால் பெரும்பான்மையைப் பெற முடியவில்லை.
மகாராஷ்டிர மாநிலத்தில், காங்கிரஸ் – தேசியவாத காங்கிரஸ் கூட்டணி 144 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியமைக்க அவர்களுக்கு மேலும் ஓர் இடம் தேவை.
அருணாசலப் பிரதேசத்தில், மொத்தமுள்ள 60 தொகுதிகளில் 42 தொகுதிகளைக் கைப்பற்றி காங்கிரஸ் பெரும் வெற்றி பெற்றுள்ளது.
ஹரியாணா மாநிலத்தில், காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை பலம் பெற முடியவில்லை. அதற்கு மேலும் ஐந்து இடங்கள் தேவை. ஓம்பிரகாஷ் செளதாலா தலைமையிலான இந்திய தேசிய லோக் தளக் கூட்டணி 32 இடங்களிலும், பாஜக நான்கு இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. யார் ஆட்சியமைப்பது என்பதை முடிவு செய்வதில், சுயேச்சைகள் முக்கியப் பங்கு வகிப்பார்கள் எனத் தெரிகிறது.
பிபிசி தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தீவிர வலதுசாரிக் கட்சித் தலைவருக்கு வாய்ப்பளிப்பது குறித்து சர்ச்சை எழுந்துள்ளது பி.என்.பி. தலைவர் நிக் க்ரிஃபின்பிபிசி தொலைக்காட்சியின் கேள்வி நேரம் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக லண்டனில் உள்ள பிபிசி தொலைக்காட்சி மையத்துக்கு பிரிட்டனின் தீவிர வலதுசாரிக் கட்சியான பிரிட்டிஷ் தேசியவாதக் கட்சியின் தலைவர் வருவதையிட்டு அங்கு கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பி.என்.பி. தலைவர் நிக் க்ரிஃபின் வரும்போது தொலைக்காட்சி மையத்தில் ஆர்ப்பாட்டம் செய்யப்போவதாக பாஸிஸ எதிர்ப்பு ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர்.
பொதுமக்களின் கேள்விகளுக்கு அரசியல்வாதிகளும் பிற முக்கியஸ்தர்களும் பதில் அளிக்கும் இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பி.என்.பி. தலைவர் தோன்றுவது என்பது இதுவே முதல் முறை.
வெள்ளையினத்தவருக்கே பிரிட்டன் என்ற வாதத்தை முன்வைத்து அரசியலில் ஈடுபட்டுவரும் பி.என்.பி கட்சி ஐரோப்பிய தேர்தலில் சில ஆசனங்களை வென்றுள்ள நிலையில், அக்கட்சிக்கு நிகழ்ச்சியில் இடம் அளிப்பதைத் தவிர வேறு வழியில்லை என பிபிசி நிறுவனம் வாதிட்டுள்ளது.
இந்த சர்ச்சை குறித்த மேலதிக விபரங்களை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.
Thursday, October 22, 2009
முல்லைப் பெரியாறுக்கு பதிலாக புதிய அணை கட்டப்படுவதற்கு இடைக்காலத் தடை கோரிய தமிழக அரசின் கோரிக்கை நிராகரிப்பு
முல்லைப் பெரியாறு அணைக்குப் பதிலாக புதிய அணை கட்ட கேரள அரசுக்கு மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் கொடுத்த அனுமதிக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்துவிட்டது.
பூர்வாங்க ஆய்வு நடத்த அனுமதியளிக்கப்பட்டிருந்தாலும், ஒரே இரவில் அணை கட்டிவிடப் போவதில்லை என்றும், அதனால் ஆய்வுக்குத் தடை விதிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
புதிய ஆய்வுக்குத் தடை விதிக்கக் கோரி தமிழக அரசு தாக்கல் செய்த மனு, நீதிபதி டி.கே. ஜெயின் தலைமையிலான பெஞ்ச் முன்பு புதன் கிழமை விசாரணைக்கு வந்தது.
தமிழக அரசின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பராசரன், கேரளத்தைச் சேர்ந்த அமைச்சர் ஒருவர், புதிய அணை கட்டியே தீருவோம் என்று வெளிப்படையாகக் கூறியிருப்பதாகத் தெரிவித்தார்.
ஆனால், அமைச்சர்கள் சொல்வதை வைத்து தாங்கள் முடிவெடுக்க முடியாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
கேரளம் அணை கட்ட ஆரம்பித்துவிட்டால் என்ன செய்வது என்ற அச்சம் உள்ளதாக பராசரன் தெரிவித்தார். அப்போது கேரள அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பிரகாஷ், ஆய்வுப் பணிகளை முடிக்க கேரளத்துக்கு 6 மாதங்கள் தேவைப்படும் என்று தெரிவித்தார்.
கேரள அரசு அணை கட்ட நடவடிக்கை எடுத்தால், அந்த நிலையில் தமிழகம் நீதிமன்றத்தை நாடலாம், அப்போது தமிழ்நாட்டின் நலனைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும். இப்போது அச்சப்படுவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
அதே நேரத்தில், புதிய அணை கட்ட ஆய்வு நடத்த மத்திய அரசு அனுமதியளித்திருப்பதால், ஏற்கெனவே உள்ள முல்லைப் பெரியாறு வழக்கு விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என கேரள அரசுத் தரப்பில் வைக்கப்பட்ட கோரிக்கையையும் உச்சநீதிமன்றம் ஏற்கவில்லை.
முல்லைப் பெரியாறு விவகாரத்தில் மத்திய அமைச்சரின் நடவடிக்கையை கண்டித்து மதுரையில் கூட்டம் நடத்த தி.மு.க தீர்மானம்
மு.கருணாநிதிமுல்லைப்பெரியாறு பிரச்சினையில் மத்திய அமைச்சர் ஒருவர் நடந்து கொண்ட முறையினைக் கண்டித்து திமுக சார்பாக மதுரையில் எதிர்வரும் நவம்பர் ஒன்றாம் நாள் பொதுக்கூட்டம் நடைபெறவிருப்பதாகவும், அக்கூட்டத்தில் திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு கருணாநிதி கலந்துகொள்ளவிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
அந்த ஆற்றின் குறுக்கே புதியதோர் அணைகட்டுவதற்கான ஆய்வுப்பணிகள் நடத்த கேரளாவிற்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சு அனுமதி அளித்ததற்காக அமைச்சர் ஜெயராம் ரமேஷ், தமிழக முதல்வர் உட்பட பல்வேறு தரப்பினரின் கண்டனங்களுக்குள்ளாயிருக்கிறார் என்பதும், தமிழகத்தின் ஆட்சேபணைகளை மீறி கேரளா ஆய்வுப்பணிகளைத் துவங்கியிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
"இந்திய அதிகார வர்க்கத்தில் கேரள மாநிலத்தவரின் ஆதிக்கம்"- என்கிறார் ராமதாஸ், மறுக்கிறார் முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி
முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி எஸ்.ரகுநாதன்இதனிடையே இந்திய அரசு நிர்வாகத்தில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த பலர் முக்கிய பொறுப்பு வகிப்பதால்தான் தமிழகத்திற்கு நீதி மறுக்கப்படுவதாக பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இங்கு வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் கூறியிருக்கிறார்.
இந்தியாவின் மத்திய ஆட்சிப்பணியில் ( ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.எப்.எஸ் போன்ற துறைகளில்) , கேரள மாநிலத்தவரின் ஆதிக்கம் அதிகமாக இருக்கிறது என்ற பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசின் கருத்து சரியானதல்ல என்று டில்லி நிர்வாகத்தில் தலைமைச்செயலராக இருந்து ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரியான எஸ்.ரெகுநாதன் குறிப்பிட்டுள்ளார் .
ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் தேர்வு முறை மற்றும் பயிற்சி முறை, அவர்களை தேசிய கண்ணோட்டத்தையே ஊட்டியிருக்கிறது என்றும், அதிகாரிகள் எந்த ஒரு பிரச்சினையையும் நாட்டின் நலன் என்ற கண்ணோட்டத்திலேயே அணுகுவதாகவும், பிராந்திய கண்ணோட்டத்துடன் பார்ப்பதில்லை என்றும், நடுநிலையாகவே செயல்படுகிறார்கள் என்றும் அவர் கூறுகிறார்.
அதிகாரிகள் நடுநிலை தவறி செயல்படவிடாமல் தடுக்கும் அமைப்பு ரீதியான பாதுகாப்புகள் இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
மத்திய நீர்வளத்துறை செயலராக இருந்து ஓய்வு பெற்ற ஒரு தமிழ் ஐ.ஏ.எஸ் அதிகாரியின் நடத்தை நடுநிலையாக இருந்ததால், காவிரி நீர்ப்பிரச்சினை இருந்தபோதுகூட அவர் மீது கர்நாடக , கேரள அரசுகள் குறை கூறவில்லை என்று அவர் கூறினார்.
ரெகுநாதனின் பேட்டியை இன்றைய தமிழோசையில் நேயர்கள் கேட்கலாம்
உளவு பார்த்த குற்றச்சாட்டில் கைதான அமெரிக்க விஞ்ஞானியால் இந்தியாவுக்கு பாதிப்பில்லை - இஸ்ரோ தகவல்
சந்திரயான் விண்கலம்சந்திரனை ஆராய இந்தியா அனுப்பிய விண்வெளிக் கலமான சந்திரயானில் சென்ற அமெரிக்க உபகரணங்களைக் கொண்டு ஆய்வு நடத்திய அமெரிக்க விஞ்ஞானி ஸ்டீவர்ட் டேவிட் நோசட் இஸ்ரேலுக்கு உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்டுள்ளார்.
இருந்தும் இதனால் இந்தியாவின் பாதுகாப்புக்கு எவ்வித அச்சுருத்தலும் ஏற்படாது என்று இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ தெரிவித்துள்ளது.
இது பற்றி தமிழோசையிடம் பேசிய, இஸ்ரோவின் செய்தித் தொடர்பாளர் சதிஷ், ஏற்கனவே பல பாதுகாப்பு நடைமுறைகள் இஸ்ரோவில் அமலில் இருப்பதாகவும் ரகசிய விடயங்கள் தொடர்பான ஆவணங்கள் ஏதும் இவருக்கு கிடைக்க வாய்பில்லை என்றும் தெரிவித்தார்.
டேவில் நோசட் மேற்கொண்ட ஆய்வு குறித்த முழு விபரங்கள் இஸ்ரோவுக்குத் தெரியும் என்றும், ஆனால் அவர் கைது செய்யப்பட்டுள்ளது சந்திரயான் தொடர்பான திட்டங்களுக்காக அல்ல என்றும் அவர் மேலும் கூறினார்.
வட இந்தியாவில் ரயில் விபத்து - 22 பேர் பலி
இந்திய மீட்புப் பணியாளர்கள் ( ஆவணப்படம்)வட இந்தியாவில் நடைபெற்ற ரயில் விபத்தொன்றில் குறைந்தது 22 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதே எண்ணிக்கையிலானோர் காயமடைந்துள்ளனர்.
மதுரா நகர் அருகே நின்று கொண்டிருந்த பயணிகள் ரயில் மீது கோவா எக்ஸ்பிரஸ் மோதியதாக அதிகாரிகள் கூறுகின்றனர். இரண்டு ரயில்களும் டில்லியை நோக்கி சென்று கொண்டிருந்தன.
மோதமாக உடைந்து நொறுங்கிப் போயுள்ள ரயில் பெட்டிகளை உடைத்து அதில் சிக்குண்டுள்ள மக்களை மீட்க, மீட்புப் பணியினர் திணறிவருகின்றனர்.
இவற்றையும் காண்க
செய்தியறிக்கை
செய்தியரங்கம்
நெஞ்சம் மறப்பதில்லை
தமிழிசை - ஓர் வரலாற்றுப் பார்வை
மின்அஞ்சலாக அனுப்புக
அச்சு வடிவம்
^^ மேலே செல்க
முகப்பு நினைவில் நின்றவை எம்மைப்பற்றி வானிலை
BBC News >> BBC Sport >> BBC Weather >> BBC World Service >> BBC Languages >>
உதவி தகவல் பாதுகாப்பு எம்மைத் தொடர்புகொள்ள
//-1?'https:':'http:';
var _rsRP=escape(document.referrer);
var _rsND=_rsLP+'//secure-uk.imrworldwide.com/';
if (parseInt(navigator.appVersion)>=4)
{
var _rsRD=(new Date()).getTime();
var _rsSE=1;
var _rsSV="";
var _rsSM=0.1;
_rsCL='';
}
else
{
_rsCL='';
}
document.write(_rsCL);
//]]>
முல்லைப் பெரியாறு அணைக்குப் பதிலாக புதிய அணை கட்ட கேரள அரசுக்கு மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் கொடுத்த அனுமதிக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்துவிட்டது.
பூர்வாங்க ஆய்வு நடத்த அனுமதியளிக்கப்பட்டிருந்தாலும், ஒரே இரவில் அணை கட்டிவிடப் போவதில்லை என்றும், அதனால் ஆய்வுக்குத் தடை விதிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
புதிய ஆய்வுக்குத் தடை விதிக்கக் கோரி தமிழக அரசு தாக்கல் செய்த மனு, நீதிபதி டி.கே. ஜெயின் தலைமையிலான பெஞ்ச் முன்பு புதன் கிழமை விசாரணைக்கு வந்தது.
தமிழக அரசின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பராசரன், கேரளத்தைச் சேர்ந்த அமைச்சர் ஒருவர், புதிய அணை கட்டியே தீருவோம் என்று வெளிப்படையாகக் கூறியிருப்பதாகத் தெரிவித்தார்.
ஆனால், அமைச்சர்கள் சொல்வதை வைத்து தாங்கள் முடிவெடுக்க முடியாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
கேரளம் அணை கட்ட ஆரம்பித்துவிட்டால் என்ன செய்வது என்ற அச்சம் உள்ளதாக பராசரன் தெரிவித்தார். அப்போது கேரள அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பிரகாஷ், ஆய்வுப் பணிகளை முடிக்க கேரளத்துக்கு 6 மாதங்கள் தேவைப்படும் என்று தெரிவித்தார்.
கேரள அரசு அணை கட்ட நடவடிக்கை எடுத்தால், அந்த நிலையில் தமிழகம் நீதிமன்றத்தை நாடலாம், அப்போது தமிழ்நாட்டின் நலனைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும். இப்போது அச்சப்படுவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
அதே நேரத்தில், புதிய அணை கட்ட ஆய்வு நடத்த மத்திய அரசு அனுமதியளித்திருப்பதால், ஏற்கெனவே உள்ள முல்லைப் பெரியாறு வழக்கு விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என கேரள அரசுத் தரப்பில் வைக்கப்பட்ட கோரிக்கையையும் உச்சநீதிமன்றம் ஏற்கவில்லை.
முல்லைப் பெரியாறு விவகாரத்தில் மத்திய அமைச்சரின் நடவடிக்கையை கண்டித்து மதுரையில் கூட்டம் நடத்த தி.மு.க தீர்மானம்
மு.கருணாநிதிமுல்லைப்பெரியாறு பிரச்சினையில் மத்திய அமைச்சர் ஒருவர் நடந்து கொண்ட முறையினைக் கண்டித்து திமுக சார்பாக மதுரையில் எதிர்வரும் நவம்பர் ஒன்றாம் நாள் பொதுக்கூட்டம் நடைபெறவிருப்பதாகவும், அக்கூட்டத்தில் திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு கருணாநிதி கலந்துகொள்ளவிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
அந்த ஆற்றின் குறுக்கே புதியதோர் அணைகட்டுவதற்கான ஆய்வுப்பணிகள் நடத்த கேரளாவிற்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சு அனுமதி அளித்ததற்காக அமைச்சர் ஜெயராம் ரமேஷ், தமிழக முதல்வர் உட்பட பல்வேறு தரப்பினரின் கண்டனங்களுக்குள்ளாயிருக்கிறார் என்பதும், தமிழகத்தின் ஆட்சேபணைகளை மீறி கேரளா ஆய்வுப்பணிகளைத் துவங்கியிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
"இந்திய அதிகார வர்க்கத்தில் கேரள மாநிலத்தவரின் ஆதிக்கம்"- என்கிறார் ராமதாஸ், மறுக்கிறார் முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி
முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி எஸ்.ரகுநாதன்இதனிடையே இந்திய அரசு நிர்வாகத்தில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த பலர் முக்கிய பொறுப்பு வகிப்பதால்தான் தமிழகத்திற்கு நீதி மறுக்கப்படுவதாக பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இங்கு வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் கூறியிருக்கிறார்.
இந்தியாவின் மத்திய ஆட்சிப்பணியில் ( ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.எப்.எஸ் போன்ற துறைகளில்) , கேரள மாநிலத்தவரின் ஆதிக்கம் அதிகமாக இருக்கிறது என்ற பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசின் கருத்து சரியானதல்ல என்று டில்லி நிர்வாகத்தில் தலைமைச்செயலராக இருந்து ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரியான எஸ்.ரெகுநாதன் குறிப்பிட்டுள்ளார் .
ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் தேர்வு முறை மற்றும் பயிற்சி முறை, அவர்களை தேசிய கண்ணோட்டத்தையே ஊட்டியிருக்கிறது என்றும், அதிகாரிகள் எந்த ஒரு பிரச்சினையையும் நாட்டின் நலன் என்ற கண்ணோட்டத்திலேயே அணுகுவதாகவும், பிராந்திய கண்ணோட்டத்துடன் பார்ப்பதில்லை என்றும், நடுநிலையாகவே செயல்படுகிறார்கள் என்றும் அவர் கூறுகிறார்.
அதிகாரிகள் நடுநிலை தவறி செயல்படவிடாமல் தடுக்கும் அமைப்பு ரீதியான பாதுகாப்புகள் இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
மத்திய நீர்வளத்துறை செயலராக இருந்து ஓய்வு பெற்ற ஒரு தமிழ் ஐ.ஏ.எஸ் அதிகாரியின் நடத்தை நடுநிலையாக இருந்ததால், காவிரி நீர்ப்பிரச்சினை இருந்தபோதுகூட அவர் மீது கர்நாடக , கேரள அரசுகள் குறை கூறவில்லை என்று அவர் கூறினார்.
ரெகுநாதனின் பேட்டியை இன்றைய தமிழோசையில் நேயர்கள் கேட்கலாம்
உளவு பார்த்த குற்றச்சாட்டில் கைதான அமெரிக்க விஞ்ஞானியால் இந்தியாவுக்கு பாதிப்பில்லை - இஸ்ரோ தகவல்
சந்திரயான் விண்கலம்சந்திரனை ஆராய இந்தியா அனுப்பிய விண்வெளிக் கலமான சந்திரயானில் சென்ற அமெரிக்க உபகரணங்களைக் கொண்டு ஆய்வு நடத்திய அமெரிக்க விஞ்ஞானி ஸ்டீவர்ட் டேவிட் நோசட் இஸ்ரேலுக்கு உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்டுள்ளார்.
இருந்தும் இதனால் இந்தியாவின் பாதுகாப்புக்கு எவ்வித அச்சுருத்தலும் ஏற்படாது என்று இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ தெரிவித்துள்ளது.
இது பற்றி தமிழோசையிடம் பேசிய, இஸ்ரோவின் செய்தித் தொடர்பாளர் சதிஷ், ஏற்கனவே பல பாதுகாப்பு நடைமுறைகள் இஸ்ரோவில் அமலில் இருப்பதாகவும் ரகசிய விடயங்கள் தொடர்பான ஆவணங்கள் ஏதும் இவருக்கு கிடைக்க வாய்பில்லை என்றும் தெரிவித்தார்.
டேவில் நோசட் மேற்கொண்ட ஆய்வு குறித்த முழு விபரங்கள் இஸ்ரோவுக்குத் தெரியும் என்றும், ஆனால் அவர் கைது செய்யப்பட்டுள்ளது சந்திரயான் தொடர்பான திட்டங்களுக்காக அல்ல என்றும் அவர் மேலும் கூறினார்.
வட இந்தியாவில் ரயில் விபத்து - 22 பேர் பலி
இந்திய மீட்புப் பணியாளர்கள் ( ஆவணப்படம்)வட இந்தியாவில் நடைபெற்ற ரயில் விபத்தொன்றில் குறைந்தது 22 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதே எண்ணிக்கையிலானோர் காயமடைந்துள்ளனர்.
மதுரா நகர் அருகே நின்று கொண்டிருந்த பயணிகள் ரயில் மீது கோவா எக்ஸ்பிரஸ் மோதியதாக அதிகாரிகள் கூறுகின்றனர். இரண்டு ரயில்களும் டில்லியை நோக்கி சென்று கொண்டிருந்தன.
மோதமாக உடைந்து நொறுங்கிப் போயுள்ள ரயில் பெட்டிகளை உடைத்து அதில் சிக்குண்டுள்ள மக்களை மீட்க, மீட்புப் பணியினர் திணறிவருகின்றனர்.
இவற்றையும் காண்க
செய்தியறிக்கை
செய்தியரங்கம்
நெஞ்சம் மறப்பதில்லை
தமிழிசை - ஓர் வரலாற்றுப் பார்வை
மின்அஞ்சலாக அனுப்புக
அச்சு வடிவம்
^^ மேலே செல்க
முகப்பு நினைவில் நின்றவை எம்மைப்பற்றி வானிலை
BBC News >> BBC Sport >> BBC Weather >> BBC World Service >> BBC Languages >>
உதவி தகவல் பாதுகாப்பு எம்மைத் தொடர்புகொள்ள
//-1?'https:':'http:';
var _rsRP=escape(document.referrer);
var _rsND=_rsLP+'//secure-uk.imrworldwide.com/';
if (parseInt(navigator.appVersion)>=4)
{
var _rsRD=(new Date()).getTime();
var _rsSE=1;
var _rsSV="";
var _rsSM=0.1;
_rsCL='';
}
else
{
_rsCL='';
}
document.write(_rsCL);
//]]>
Wednesday, October 21, 2009
ஜசிதரனையும் அவரது மனைவியையும் விடுதலை செய்ய தயார்"- இலங்கை அரசு
அரசாங்கத்தின் மீது அபகீர்த்தி ஏற்படுத்தும் நோக்கோடு சதித் திட்டம் தீட்டியதாக குற்றஞ்சாட்டப்பட்டு வழக்கு தொடரப்பட்டுள்ள, நோர்த் ஈஸ்டன் என்ற சஞ்சிகையின் அச்சீட்டாளரான வெற்றிவேல் ஜசீதரனையும் அவரது மனைவியையும் நிபந்தனையின் பேரில் விடுதலை செய்ய தயாராகுமாறு இலங்கையின் சட்டமா அதிபர் கொழும்பு மேல் நீதிமன்றத்திற்கு அறிவுறுத்தியுள்ளார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்காக அழைக்கப்பட்டபோது, பயங்கரவாத புலனாய்வு பணியகத்திற்கு எதிராக, பிரதிவாதிகளால் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மனுவினை அவர்கள் விலக்கிக் கொண்டால் பிரதிவாதிகளுக்கு எதிரான குற்றப்பத்திரத்தை விலக்கிக் கொள்ள சட்டமாதிபர் தயாராகவுள்ளதாக அரச தரப்பு சட்டத்தரணி குறிப்பிட்டுள்ளார்.
இந்த சந்தர்ப்பத்தில் நீதிமன்றத்துக்கு பதிலளித்த பிரதிவாதிகள் தரப்பு சட்டத்தரணி, முதலில் சட்டமா அதிபர் குற்றப்பத்திரத்தை விலக்கிக்கொண்டு குற்றம் சுமத்தப்பட்டுள்ளவர்களை விடுதலை செய்ததன் பின்னர் தமது அடிப்படை உரிமை மனுவை விலக்கிக்கொள்வதாகக் கூறினார்.
இதன்போது, குறிக்கிட்ட நீதிபதி இரண்டு தரப்பினரும் இணக்கங்கண்டு வழக்கினை விலக்கிக் கொள்ள முன்வரவேண்டும் எனவும் எதிர்வரும் 26ம் திகதி அவர்கள் தமது தீர்மானத்தை அறிவித்ததன் பின்னர் பிரதிவாதிகளை விடுவிப்பது குறித்த தமது முடிவை அறிவிப்பதாகக் குறிப்பிட்டார்.
இதே நோர்த் ஈஸ்டன் சஞ்சிகையின் ஆசிரியர் ஜே.எஸ் திஸ்ஸநாயகத்திற்கு கொழும்பு மேல்நீதிமன்றம் அண்மையில் 20 வருடகால கடூழிய சிறைத்தண்டனை விதித்தமை குறிப்பிடத்தக்கது.
டெல்லி அருகே தொழிலாளி கொலை விவகாரம் - கார் உதிரிப்பாக தொழிற்சாலைகளில் பணிகள் முடக்கம்
இந்தியாவில் தயாராகும் சுசுக்கி வகை கார் டெல்லியை ஒட்டியுள்ள ஹரியாணா மாநிலத்தின் குர்காவ்ன் – மனேசர் – பவல் பகுதியில், தொழிலாளி ஒருவர் கொல்லப்பட்டதை எதிர்த்து நடந்த வேலைநிறுத்தப் போராட்டத்தால், அந்தப் பகுதியில் தொழில் நடவடிக்கைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன.
வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள், ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவரை கடுமையாகத் தாக்கினார்கள். போலீஸ் பாதுகாப்புடன் ஆலைக்குள் வந்த நிலையிலும் அவர் தாக்குதலுக்கு உள்ளானார். அந்த நிறுவனத்தின் ஊழியர்தான் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த தாக்குதலில் கொல்லப்பட்டார்.
தொழிலாளர்களில் இரு பிரிவினருக்கு இடையே நடந்த மோதலில் அந்தத் தொழிலாளி கொல்லப்பட்டதாக நிர்வாகம் கூறுகிறது. ஆனால், ஊதிய ஊயர்வு கோரிப் போராட்டம் நடத்தி வரும் தொழிலாளர்கள் தொழிற்சங்கம் துவக்க முற்பட்டதால், நிர்வாகம் குண்டர்களை வைத்து தங்களைத் தாக்கியதாக தொழிலாளர் தரப்பில் புகார் கூறப்படுகிறது.
தொழிலாளியின் மரணத்துக்கு நிர்வாகம் தான் காரணம் என்று கூறி, அந்த நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கக் கோரி, இன்று ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டார்கள்.
அந்தப் பிராந்தியத்தில் உள்ள பல்வேறு தொழிற்சாலைகளின் ஊழியர்களும் அதில் கலந்துகொண்டார்கள். அதில், ஹோண்டா மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் நிறுவன ஊழியர்களும் பங்கேற்றார்கள். அதனால் பல்வேறு தொழிற்சாலைகளில் உற்பத்தி பாதிக்கப்பட்டது.
"ஆப்கனில் அதிபர் தேர்தலுக்கான மறு வாக்குப்பதிவு நவம்பர் 7 இல்" - ஆப்கன் தேர்தல் ஆணையம் அறிவிப்பு
ஆப்கன் அதிபர் ஹமீட் கர்சாய், ஐ.நா தூதுவருடன்ஆப்கானிய அதிபர் தேர்தலுக்கான மறு வாக்குப் பதிவு வரும் நவம்பர் மாதம் 7 ஆம் தேதி நடைபெறும் என்று ஆப்கன் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் பல முறைகேடுகள் நடைபெற்றதாக ஐ.நாவின் அங்கீகாரம் பெற்ற குழு தெரிவித்திருந்ததை அடுத்து இந்த அறிவிப்பு வந்துள்ளது.
ஆகஸ்ட் தேர்தல் குறித்து வெளி வந்த ஆரம்ப கட்ட முடிவுகளில் கர்சாய்க்கு 55 வீத வாக்குகள் கிடைத்ததாகவும், அவரின் பிரதான எதிர் வேட்பாளரான அப்துல்லா அப்துல்லாவுக்கு 28 சதவீத வாக்குகள் கிடைத்ததாகவும் கூறப்பட்டது.
ஆனால் 210 ஒட்டுச் சாவடிகளில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை கணக்கில் எடுக்கப்படக் கூடாது என்று ஐ நா அங்கீகாரம் கொண்ட தேர்தல் புகார் அமைப்பு உத்திரவிட்டதன் பிறகு நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் கர்சாய் பெற்ற மொத்த வாக்குகளில் எண்ணிக்கை 50 வீதத்தை விட குறைவாகவே இருந்தது. இதனால் மறு வாக்கு எண்ணிக்கைகு உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆப்கான் தேர்தல் எந்த அளவுக்கு நியாயமாகவும் நேர்மையாகவும் நடைபெற்றது என்பது தொடர்பாக சர்வதேச சந்தேகங்களும் அழுத்தங்களும் அதிகமான நிலையில் இன்றைய அறிவிப்பு வந்துள்ளது. முதலில் தேர்தல் வாக்குப் பதிவுகளில் நடைபெற்றதாக்க கூறப்படும் மோசடிகளைப் புறம் தள்ளிய அதிபர் ஹமிட் கார்சாய் இந்த அறிவிப்பை வரவேற்றுள்ளார்.
உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டை புறக்கணிப்பதாக அ.இ.அதிமுகவும் மதிமுகவும் அறிவிப்பு
வைகோவுடன் ஜெயலலிதாகோவையில் அடுத்த ஆண்டு ஜூன் மாதத்தில் நடைபெறவிருக்கிற உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டைப் புறக்கணிக்கபோவதாக அ.இ.அதிமுகவும் அதன் கூட்டணிக்கட்சியான மதிமுகவும் அறிவித்திருக்கின்றன.
இலங்கை மற்றும் மலேசியாவில் தமிழர்களின் அவல நிலையில் வாடும்போது உலகத்தமிழ் மாநாட்டிற்கு அவசியமென்ன என்று வினவும்அ.இ. அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா, சர்வதேச தமிழ் ஆராய்ச்சி சங்கம் உலகத்தமிழ் மாநாடு நடத்த அனுமதி மறுத்ததாலேயே கருணாநிதி செம்மொழி மாநாடு நடத்துகிறார், 2011ல் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை மனதில் கொண்டே தன்னை விளம்பரப்படுத்திக்கொள்ளவே அவர் இப்படி மாநாடு நடத்துகிறார், எனவே தனது கட்சி அதனைப் புறக்கணிப்பதாகக் கூறியிருக்கிறார்.
அதைப்போன்ற காரணங்களை சுட்டிக்காட்டி மதிமுக பொதுச்செயலாளர் வைகோவும் தனது கட்சியும் மாநாட்டைப் புறக்கணிக்கவிருப்பதாக தெரிவித்திருக்கிறார்.
இரண்டுநாட்களுக்கு முன்புதான் அனைத்து சட்டமன்றக் கட்சித்தலைவர்களுக்கும் மாநாட்டில் பங்கேற்குமாறு முதல்வர் கருணாநிதி அழைப்பு விடுத்திருந்தார்.
உலகத்தமிழ் மாநாடு ஒரு கட்சி சார்பான நிகழ்வாக இல்லாவிட்டாலும், கடந்த காலங்களிலும், எம்.ஜீ.ஆர். மற்றும் ஜெயலலிதா முதல்வர்களாக இருந்தபோது நடத்தப்பட்ட மாநாடுகளில் எதிர்க் கட்சித்தலைவராக இருந்தும் உரிய அழைப்பில்லை எனக்கூறி கருணாநிதி கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இவற்றையும் காண்க
செய்தியறிக்கை
செய்தியரங்கம்
நெஞ்சம் மறப்பதில்லை
தமிழிசை - ஓர் வரலாற்றுப் பார்வை
மின்அஞ்சலாக அனுப்புக
அச்சு வடிவம்
^^ மேலே செல்க
முகப்பு நினைவில் நின்றவை எம்மைப்பற்றி வானிலை
BBC News >> BBC Sport >> BBC Weather >> BBC World Service >> BBC Languages >>
உதவி தகவல் பாதுகாப்பு எம்மைத் தொடர்புகொள்ள
//-1?'https:':'http:';
var _rsRP=escape(document.referrer);
var _rsND=_rsLP+'//secure-uk.imrworldwide.com/';
if (parseInt(navigator.appVersion)>=4)
{
var _rsRD=(new Date()).getTime();
var _rsSE=1;
var _rsSV="";
var _rsSM=0.1;
_rsCL='';
}
else
{
_rsCL='';
}
document.write(_rsCL);
//]]>
அரசாங்கத்தின் மீது அபகீர்த்தி ஏற்படுத்தும் நோக்கோடு சதித் திட்டம் தீட்டியதாக குற்றஞ்சாட்டப்பட்டு வழக்கு தொடரப்பட்டுள்ள, நோர்த் ஈஸ்டன் என்ற சஞ்சிகையின் அச்சீட்டாளரான வெற்றிவேல் ஜசீதரனையும் அவரது மனைவியையும் நிபந்தனையின் பேரில் விடுதலை செய்ய தயாராகுமாறு இலங்கையின் சட்டமா அதிபர் கொழும்பு மேல் நீதிமன்றத்திற்கு அறிவுறுத்தியுள்ளார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்காக அழைக்கப்பட்டபோது, பயங்கரவாத புலனாய்வு பணியகத்திற்கு எதிராக, பிரதிவாதிகளால் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மனுவினை அவர்கள் விலக்கிக் கொண்டால் பிரதிவாதிகளுக்கு எதிரான குற்றப்பத்திரத்தை விலக்கிக் கொள்ள சட்டமாதிபர் தயாராகவுள்ளதாக அரச தரப்பு சட்டத்தரணி குறிப்பிட்டுள்ளார்.
இந்த சந்தர்ப்பத்தில் நீதிமன்றத்துக்கு பதிலளித்த பிரதிவாதிகள் தரப்பு சட்டத்தரணி, முதலில் சட்டமா அதிபர் குற்றப்பத்திரத்தை விலக்கிக்கொண்டு குற்றம் சுமத்தப்பட்டுள்ளவர்களை விடுதலை செய்ததன் பின்னர் தமது அடிப்படை உரிமை மனுவை விலக்கிக்கொள்வதாகக் கூறினார்.
இதன்போது, குறிக்கிட்ட நீதிபதி இரண்டு தரப்பினரும் இணக்கங்கண்டு வழக்கினை விலக்கிக் கொள்ள முன்வரவேண்டும் எனவும் எதிர்வரும் 26ம் திகதி அவர்கள் தமது தீர்மானத்தை அறிவித்ததன் பின்னர் பிரதிவாதிகளை விடுவிப்பது குறித்த தமது முடிவை அறிவிப்பதாகக் குறிப்பிட்டார்.
இதே நோர்த் ஈஸ்டன் சஞ்சிகையின் ஆசிரியர் ஜே.எஸ் திஸ்ஸநாயகத்திற்கு கொழும்பு மேல்நீதிமன்றம் அண்மையில் 20 வருடகால கடூழிய சிறைத்தண்டனை விதித்தமை குறிப்பிடத்தக்கது.
டெல்லி அருகே தொழிலாளி கொலை விவகாரம் - கார் உதிரிப்பாக தொழிற்சாலைகளில் பணிகள் முடக்கம்
இந்தியாவில் தயாராகும் சுசுக்கி வகை கார் டெல்லியை ஒட்டியுள்ள ஹரியாணா மாநிலத்தின் குர்காவ்ன் – மனேசர் – பவல் பகுதியில், தொழிலாளி ஒருவர் கொல்லப்பட்டதை எதிர்த்து நடந்த வேலைநிறுத்தப் போராட்டத்தால், அந்தப் பகுதியில் தொழில் நடவடிக்கைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன.
வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள், ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவரை கடுமையாகத் தாக்கினார்கள். போலீஸ் பாதுகாப்புடன் ஆலைக்குள் வந்த நிலையிலும் அவர் தாக்குதலுக்கு உள்ளானார். அந்த நிறுவனத்தின் ஊழியர்தான் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த தாக்குதலில் கொல்லப்பட்டார்.
தொழிலாளர்களில் இரு பிரிவினருக்கு இடையே நடந்த மோதலில் அந்தத் தொழிலாளி கொல்லப்பட்டதாக நிர்வாகம் கூறுகிறது. ஆனால், ஊதிய ஊயர்வு கோரிப் போராட்டம் நடத்தி வரும் தொழிலாளர்கள் தொழிற்சங்கம் துவக்க முற்பட்டதால், நிர்வாகம் குண்டர்களை வைத்து தங்களைத் தாக்கியதாக தொழிலாளர் தரப்பில் புகார் கூறப்படுகிறது.
தொழிலாளியின் மரணத்துக்கு நிர்வாகம் தான் காரணம் என்று கூறி, அந்த நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கக் கோரி, இன்று ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டார்கள்.
அந்தப் பிராந்தியத்தில் உள்ள பல்வேறு தொழிற்சாலைகளின் ஊழியர்களும் அதில் கலந்துகொண்டார்கள். அதில், ஹோண்டா மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் நிறுவன ஊழியர்களும் பங்கேற்றார்கள். அதனால் பல்வேறு தொழிற்சாலைகளில் உற்பத்தி பாதிக்கப்பட்டது.
"ஆப்கனில் அதிபர் தேர்தலுக்கான மறு வாக்குப்பதிவு நவம்பர் 7 இல்" - ஆப்கன் தேர்தல் ஆணையம் அறிவிப்பு
ஆப்கன் அதிபர் ஹமீட் கர்சாய், ஐ.நா தூதுவருடன்ஆப்கானிய அதிபர் தேர்தலுக்கான மறு வாக்குப் பதிவு வரும் நவம்பர் மாதம் 7 ஆம் தேதி நடைபெறும் என்று ஆப்கன் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் பல முறைகேடுகள் நடைபெற்றதாக ஐ.நாவின் அங்கீகாரம் பெற்ற குழு தெரிவித்திருந்ததை அடுத்து இந்த அறிவிப்பு வந்துள்ளது.
ஆகஸ்ட் தேர்தல் குறித்து வெளி வந்த ஆரம்ப கட்ட முடிவுகளில் கர்சாய்க்கு 55 வீத வாக்குகள் கிடைத்ததாகவும், அவரின் பிரதான எதிர் வேட்பாளரான அப்துல்லா அப்துல்லாவுக்கு 28 சதவீத வாக்குகள் கிடைத்ததாகவும் கூறப்பட்டது.
ஆனால் 210 ஒட்டுச் சாவடிகளில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை கணக்கில் எடுக்கப்படக் கூடாது என்று ஐ நா அங்கீகாரம் கொண்ட தேர்தல் புகார் அமைப்பு உத்திரவிட்டதன் பிறகு நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் கர்சாய் பெற்ற மொத்த வாக்குகளில் எண்ணிக்கை 50 வீதத்தை விட குறைவாகவே இருந்தது. இதனால் மறு வாக்கு எண்ணிக்கைகு உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆப்கான் தேர்தல் எந்த அளவுக்கு நியாயமாகவும் நேர்மையாகவும் நடைபெற்றது என்பது தொடர்பாக சர்வதேச சந்தேகங்களும் அழுத்தங்களும் அதிகமான நிலையில் இன்றைய அறிவிப்பு வந்துள்ளது. முதலில் தேர்தல் வாக்குப் பதிவுகளில் நடைபெற்றதாக்க கூறப்படும் மோசடிகளைப் புறம் தள்ளிய அதிபர் ஹமிட் கார்சாய் இந்த அறிவிப்பை வரவேற்றுள்ளார்.
உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டை புறக்கணிப்பதாக அ.இ.அதிமுகவும் மதிமுகவும் அறிவிப்பு
வைகோவுடன் ஜெயலலிதாகோவையில் அடுத்த ஆண்டு ஜூன் மாதத்தில் நடைபெறவிருக்கிற உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டைப் புறக்கணிக்கபோவதாக அ.இ.அதிமுகவும் அதன் கூட்டணிக்கட்சியான மதிமுகவும் அறிவித்திருக்கின்றன.
இலங்கை மற்றும் மலேசியாவில் தமிழர்களின் அவல நிலையில் வாடும்போது உலகத்தமிழ் மாநாட்டிற்கு அவசியமென்ன என்று வினவும்அ.இ. அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா, சர்வதேச தமிழ் ஆராய்ச்சி சங்கம் உலகத்தமிழ் மாநாடு நடத்த அனுமதி மறுத்ததாலேயே கருணாநிதி செம்மொழி மாநாடு நடத்துகிறார், 2011ல் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை மனதில் கொண்டே தன்னை விளம்பரப்படுத்திக்கொள்ளவே அவர் இப்படி மாநாடு நடத்துகிறார், எனவே தனது கட்சி அதனைப் புறக்கணிப்பதாகக் கூறியிருக்கிறார்.
அதைப்போன்ற காரணங்களை சுட்டிக்காட்டி மதிமுக பொதுச்செயலாளர் வைகோவும் தனது கட்சியும் மாநாட்டைப் புறக்கணிக்கவிருப்பதாக தெரிவித்திருக்கிறார்.
இரண்டுநாட்களுக்கு முன்புதான் அனைத்து சட்டமன்றக் கட்சித்தலைவர்களுக்கும் மாநாட்டில் பங்கேற்குமாறு முதல்வர் கருணாநிதி அழைப்பு விடுத்திருந்தார்.
உலகத்தமிழ் மாநாடு ஒரு கட்சி சார்பான நிகழ்வாக இல்லாவிட்டாலும், கடந்த காலங்களிலும், எம்.ஜீ.ஆர். மற்றும் ஜெயலலிதா முதல்வர்களாக இருந்தபோது நடத்தப்பட்ட மாநாடுகளில் எதிர்க் கட்சித்தலைவராக இருந்தும் உரிய அழைப்பில்லை எனக்கூறி கருணாநிதி கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இவற்றையும் காண்க
செய்தியறிக்கை
செய்தியரங்கம்
நெஞ்சம் மறப்பதில்லை
தமிழிசை - ஓர் வரலாற்றுப் பார்வை
மின்அஞ்சலாக அனுப்புக
அச்சு வடிவம்
^^ மேலே செல்க
முகப்பு நினைவில் நின்றவை எம்மைப்பற்றி வானிலை
BBC News >> BBC Sport >> BBC Weather >> BBC World Service >> BBC Languages >>
உதவி தகவல் பாதுகாப்பு எம்மைத் தொடர்புகொள்ள
//-1?'https:':'http:';
var _rsRP=escape(document.referrer);
var _rsND=_rsLP+'//secure-uk.imrworldwide.com/';
if (parseInt(navigator.appVersion)>=4)
{
var _rsRD=(new Date()).getTime();
var _rsSE=1;
var _rsSV="";
var _rsSM=0.1;
_rsCL='';
}
else
{
_rsCL='';
}
document.write(_rsCL);
//]]>
Tuesday, October 20, 2009
இலங்கைக்கு ஐரோப்பிய ஒன்றிய வர்த்தக சலுகை நீட்டிப்பில் சிக்கல்
ஐரோப்பிய ஆணையம், இலங்கை ஐரோப்பிய ஒன்றியத்துடன் வர்த்தகம் செய்ய ஏற்றுமதித் தீர்வையிலிருந்து விலக்கு அளிப்பது போன்ற சலுகைகளைத் தரும் ஜி.எஸ்.பி ப்ளஸ் என்ற திட்டத்தின் கீழ் தொடர்ந்து சலுகைகளைப் பெற தகுதி பெற்றிருக்கிறதா என்பதை ஆராய நியமித்த விசாரணைக்குழு, அதன் விசாரணையை நிறைவு செய்து அறிக்கை ஒன்றை சமர்ப்பித்திருக்கிறது.
இந்த அறிக்கையில், இலங்கை இந்த ஜி.எஸ்.பி. ப்ளஸ் திட்டத்தின் கீழ் அளித்த உறுதிப்பாடுகளை மீறியிருப்பதாகவும், சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் குறித்த சர்வதேச உடன்பாடு, சித்ரவதைக்கெதிரான உடன்பாடு, குழந்தைகளின் உரிமைகளுக்கான உடன்பாடு ஆகிய மூன்று ஐ.நா. மன்ற மனித உரிமைகள் உடன்பாடுகள் விஷயத்தில் இலங்கையின் செயற்பாடுகளில் குறைகள் காணப்படுவதாகவும் கூறப்பட்டிருக்கிறது.
இந்த அறிக்கையை அடுத்து இலங்கைக்கு ஜி.எஸ்.பி. ப்ளஸ் திட்டத்தின் கீழ் தொடர்ந்து வர்த்தக சலுகைகளை வழங்குவதா அல்லது இந்த திட்டத்திலிருந்து இலங்கை பயன் பெறுவதை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதா என்பது குறித்து ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளுடன் ஆணையம் ஆராயும் என்று ஆணையத்தின் வர்த்தகத்துக்காக பேசவல்ல லூட்ஸ் கூல்னர் ஒரு அறிக்கையில் கூறியிருக்கிறார்.
இது குறித்து பிபிசியிடம் பேசிய கூல்னர் என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பது குறித்து சரியாக சொல்ல முடியாது என்றார்.
"ஆனால் இந்த கணிப்பு அறிக்கையின் விளைவாக வந்த ஆதாரம் மிகவும் தெளிவாக இருக்கிறது. அதாவது இலங்கை அரசு நிறைவேற்ற வேண்டிய நிபந்தனைகள் நிறைவேற்றப்படவில்லை என்பதுதான் அது. எனவே வர்த்தக சலுகைகளை தற்காலிகமாக நிறுத்திவைக்க ஒரு பிரேரணையை, ஆலோசனையை நாங்கள் தயாரித்து சமர்பிப்போம்" என்றார் லூட்ஸ்
இலங்கை இந்த திட்டத்தின் கீழ், ஐரோப்பாவுக்கு ஆயத்த ஆடைகள், மீன் போன்றவற்றை சலுகை அடிப்படையில் ஏற்றுமதி செய்கிறது. இதன் மூலம் கடந்த ஆண்டு மட்டும், சுமார் 1.24 பில்லியன் யூரோக்கள் பெறுமான பொருட்கள் இலங்கையிலிருந்து ஐராப்பிய ஒன்றியத்துக்குள் இறக்குமதி செய்யப்பட்டன. இதன் மீது இறக்குமதி தீர்வை விதித்திருந்தால் அதன் மூலமாக 78 மில்லியன் யூரோக்கள் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு கிடைத்திருக்கும் என்று சுட்டிக்காட்டப்படுகிறது.
இந்த திட்டம் வளர்முக நாடுகளில் நீடிக்கத்தக்க வளர்ச்சி மற்றும் நல்லாட்சியை ஊக்குவிக்க ஐரோப்பிய ஒன்றியத்தால் உருவாக்கப்பட்ட ஒன்று.
இந்தோனிஷியாவில் தடுத்து வைக்கப்பட்ட கப்பலில் நன்கு அறியப்பட்ட மனித கடத்தல்காரர் உள்ளதாக கூறுகிறது ஆஸ்திரேலியா
தடுத்து வைக்கப்பட்ட கப்பலில் உள்ளவர்கள்
ஆஸ்திரேலியாவுக்கு செல்ல முயன்று, இந்தோனேஷிய கடற்பரப்பில் தடுக்கப்பட்ட சுமார் இருநூற்றி ஐம்பதுக்கும் அதிகமான இலங்கையைச்சேர்ந்த தஞ்சம் கோருவோர் இருக்கும் படகில் மிகவும் நன்கு அறியப்பட்ட மனித கடத்தல்காரர் ஒருவர் இருந்ததாக ஆஸ்திரேலியாவின் வெளியுறவு அமைச்சர் ஸ்டீபன் ஸ்மித் அவர்கள் தெரிவித்துள்ளார்.
கேப்டன் பிராம் என்று அறியப்படும் அந்த நபர், மனித கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்ட குற்றங்கள் தொடர்பில் இந்தோனேஷியாவில் தண்டிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
இந்த தஞ்சம் கோருவோரின் கப்பல் தற்போது இந்தோனேஷியாவின் துறைமுகம் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது. அதில் இருப்பவர்கள் அந்த படகை விட்டு இறங்க மறுத்து வருகிறார்கள். ஆஸ்திரேலிய கடற்பரப்பிற்கு வரும் அகதி தஞ்சம் கோருவோரின் எண்ணிக்கை இந்த ஆண்டு மிகப்பெரிய அளவு உயர்ந்திருக்கிறது.
காலநிலை மாற்றம் தொடர்பான இந்தியக் கொள்கை மாற்றம் பெறுமா?
கரியமில வாயுவை வெளியிடும் அனல் மின் நிலையம்
புவியின் காலநிலை மாற்றம் தொடர்பில் இந்தியா இதுவரை கடைபிடித்து வரும் கொள்கையை மாற்றிக்கொள்ளவேண்டும் என்பதை வலியுறுத்தி இந்தியாவின் சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் அவர்கள் பிரதமர் மன்மோகன்சிங் அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதியதாக டைம்ஸ் ஆப் இந்தியா என்கிற இந்திய தினசரி செய்தி வெளியிட்டுள்ளது.
அதாவது காலநிலை பாதிப்புக்கள் தொடர்பில், உலக அளவில் இதுவரை காலமும் வளர்ந்து வரும் நாடுகளின் பக்கம் இருக்கும் இந்தியா, இனிமேல் வளர்ந்துவிட்ட நாடுகள் பக்கம் மாறவேண்டும் என்றும், அது தான் இந்தியாவுக்கு நன்மை பயக்கும் என்றும் இந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாக அந்த நாளிதழின் செய்தி கூறுகிறது.
காலநிலை மாற்றம் தொடர்பில் ஐ.நா.வால் கூட்டப்பட்டிருக்கும் சர்வதேச மாநாடு கோபன்ஹேகனில் டிசம்பர் மாதம் நடக்க இருக்கும் பின்னணியில் இவரது இந்த கடிதம் பெரும் சர்ச்சைக்குரிய விடயமாக மாறியிருக்கிறது. இந்த கடிதம் குறித்து காலநிலை மாற்றம் தொடர்பிலான செயற்பாட்டாளர் கருணாகரன் அவர்கள் தமிழோசைக்கு அளித்த செவ்வியை நேயர்கள் இன்றைய நிகழ்சியில் கேட்கலாம்.
விளையாட்டரங்கம்
ஜென்சன் பட்டன்
பார்முலா 1 அதிவேகக் கார் பந்தய விளையாட்டில் உலக சாம்பியனாக பிரிட்டனின் ஜென்சன் பட்டன் வந்திருக்கிறார். பிரசிலில் நடந்த கிராண்ட் பிரி பந்தயத்தில் பட்டன் இப்பட்டத்தைத் தட்டிச் சென்றார்.
கனடாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 7 ஆட்டங்கள் கொண்ட தொடரை விளையாடிவரும் இந்திய ஹாக்கி அணி, ஐந்தாவது ஆட்டத்தின் முடிவில் 4-0 என்ற முன்னிலைக்கு சென்றிருப்பதன் மூலம் தொடரை வென்றுள்ளது.
சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் கொழும்பில் நடத்திய ஜூனியர் டென்னிஸ் போட்டியில் மட்டக்களப்பைச் சேர்ந்த தினேஷ்கந்தன் தங்கராஜா வெற்றிபெற்றுள்ளார்.
இவற்றையும் காண்க
செய்தியறிக்கை
செய்தியரங்கம்
நெஞ்சம் மறப்பதில்லை
தமிழிசை - ஓர் வரலாற்றுப் பார்வை
மின்அஞ்சலாக அனுப்புக
அச்சு வடிவம்
^^ மேலே செல்க
முகப்பு நினைவில் நின்றவை எம்மைப்பற்றி வானிலை
BBC News >> BBC Sport >> BBC Weather >>
ஐரோப்பிய ஆணையம், இலங்கை ஐரோப்பிய ஒன்றியத்துடன் வர்த்தகம் செய்ய ஏற்றுமதித் தீர்வையிலிருந்து விலக்கு அளிப்பது போன்ற சலுகைகளைத் தரும் ஜி.எஸ்.பி ப்ளஸ் என்ற திட்டத்தின் கீழ் தொடர்ந்து சலுகைகளைப் பெற தகுதி பெற்றிருக்கிறதா என்பதை ஆராய நியமித்த விசாரணைக்குழு, அதன் விசாரணையை நிறைவு செய்து அறிக்கை ஒன்றை சமர்ப்பித்திருக்கிறது.
இந்த அறிக்கையில், இலங்கை இந்த ஜி.எஸ்.பி. ப்ளஸ் திட்டத்தின் கீழ் அளித்த உறுதிப்பாடுகளை மீறியிருப்பதாகவும், சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் குறித்த சர்வதேச உடன்பாடு, சித்ரவதைக்கெதிரான உடன்பாடு, குழந்தைகளின் உரிமைகளுக்கான உடன்பாடு ஆகிய மூன்று ஐ.நா. மன்ற மனித உரிமைகள் உடன்பாடுகள் விஷயத்தில் இலங்கையின் செயற்பாடுகளில் குறைகள் காணப்படுவதாகவும் கூறப்பட்டிருக்கிறது.
இந்த அறிக்கையை அடுத்து இலங்கைக்கு ஜி.எஸ்.பி. ப்ளஸ் திட்டத்தின் கீழ் தொடர்ந்து வர்த்தக சலுகைகளை வழங்குவதா அல்லது இந்த திட்டத்திலிருந்து இலங்கை பயன் பெறுவதை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதா என்பது குறித்து ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளுடன் ஆணையம் ஆராயும் என்று ஆணையத்தின் வர்த்தகத்துக்காக பேசவல்ல லூட்ஸ் கூல்னர் ஒரு அறிக்கையில் கூறியிருக்கிறார்.
இது குறித்து பிபிசியிடம் பேசிய கூல்னர் என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பது குறித்து சரியாக சொல்ல முடியாது என்றார்.
"ஆனால் இந்த கணிப்பு அறிக்கையின் விளைவாக வந்த ஆதாரம் மிகவும் தெளிவாக இருக்கிறது. அதாவது இலங்கை அரசு நிறைவேற்ற வேண்டிய நிபந்தனைகள் நிறைவேற்றப்படவில்லை என்பதுதான் அது. எனவே வர்த்தக சலுகைகளை தற்காலிகமாக நிறுத்திவைக்க ஒரு பிரேரணையை, ஆலோசனையை நாங்கள் தயாரித்து சமர்பிப்போம்" என்றார் லூட்ஸ்
இலங்கை இந்த திட்டத்தின் கீழ், ஐரோப்பாவுக்கு ஆயத்த ஆடைகள், மீன் போன்றவற்றை சலுகை அடிப்படையில் ஏற்றுமதி செய்கிறது. இதன் மூலம் கடந்த ஆண்டு மட்டும், சுமார் 1.24 பில்லியன் யூரோக்கள் பெறுமான பொருட்கள் இலங்கையிலிருந்து ஐராப்பிய ஒன்றியத்துக்குள் இறக்குமதி செய்யப்பட்டன. இதன் மீது இறக்குமதி தீர்வை விதித்திருந்தால் அதன் மூலமாக 78 மில்லியன் யூரோக்கள் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு கிடைத்திருக்கும் என்று சுட்டிக்காட்டப்படுகிறது.
இந்த திட்டம் வளர்முக நாடுகளில் நீடிக்கத்தக்க வளர்ச்சி மற்றும் நல்லாட்சியை ஊக்குவிக்க ஐரோப்பிய ஒன்றியத்தால் உருவாக்கப்பட்ட ஒன்று.
இந்தோனிஷியாவில் தடுத்து வைக்கப்பட்ட கப்பலில் நன்கு அறியப்பட்ட மனித கடத்தல்காரர் உள்ளதாக கூறுகிறது ஆஸ்திரேலியா
தடுத்து வைக்கப்பட்ட கப்பலில் உள்ளவர்கள்
ஆஸ்திரேலியாவுக்கு செல்ல முயன்று, இந்தோனேஷிய கடற்பரப்பில் தடுக்கப்பட்ட சுமார் இருநூற்றி ஐம்பதுக்கும் அதிகமான இலங்கையைச்சேர்ந்த தஞ்சம் கோருவோர் இருக்கும் படகில் மிகவும் நன்கு அறியப்பட்ட மனித கடத்தல்காரர் ஒருவர் இருந்ததாக ஆஸ்திரேலியாவின் வெளியுறவு அமைச்சர் ஸ்டீபன் ஸ்மித் அவர்கள் தெரிவித்துள்ளார்.
கேப்டன் பிராம் என்று அறியப்படும் அந்த நபர், மனித கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்ட குற்றங்கள் தொடர்பில் இந்தோனேஷியாவில் தண்டிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
இந்த தஞ்சம் கோருவோரின் கப்பல் தற்போது இந்தோனேஷியாவின் துறைமுகம் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது. அதில் இருப்பவர்கள் அந்த படகை விட்டு இறங்க மறுத்து வருகிறார்கள். ஆஸ்திரேலிய கடற்பரப்பிற்கு வரும் அகதி தஞ்சம் கோருவோரின் எண்ணிக்கை இந்த ஆண்டு மிகப்பெரிய அளவு உயர்ந்திருக்கிறது.
காலநிலை மாற்றம் தொடர்பான இந்தியக் கொள்கை மாற்றம் பெறுமா?
கரியமில வாயுவை வெளியிடும் அனல் மின் நிலையம்
புவியின் காலநிலை மாற்றம் தொடர்பில் இந்தியா இதுவரை கடைபிடித்து வரும் கொள்கையை மாற்றிக்கொள்ளவேண்டும் என்பதை வலியுறுத்தி இந்தியாவின் சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் அவர்கள் பிரதமர் மன்மோகன்சிங் அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதியதாக டைம்ஸ் ஆப் இந்தியா என்கிற இந்திய தினசரி செய்தி வெளியிட்டுள்ளது.
அதாவது காலநிலை பாதிப்புக்கள் தொடர்பில், உலக அளவில் இதுவரை காலமும் வளர்ந்து வரும் நாடுகளின் பக்கம் இருக்கும் இந்தியா, இனிமேல் வளர்ந்துவிட்ட நாடுகள் பக்கம் மாறவேண்டும் என்றும், அது தான் இந்தியாவுக்கு நன்மை பயக்கும் என்றும் இந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாக அந்த நாளிதழின் செய்தி கூறுகிறது.
காலநிலை மாற்றம் தொடர்பில் ஐ.நா.வால் கூட்டப்பட்டிருக்கும் சர்வதேச மாநாடு கோபன்ஹேகனில் டிசம்பர் மாதம் நடக்க இருக்கும் பின்னணியில் இவரது இந்த கடிதம் பெரும் சர்ச்சைக்குரிய விடயமாக மாறியிருக்கிறது. இந்த கடிதம் குறித்து காலநிலை மாற்றம் தொடர்பிலான செயற்பாட்டாளர் கருணாகரன் அவர்கள் தமிழோசைக்கு அளித்த செவ்வியை நேயர்கள் இன்றைய நிகழ்சியில் கேட்கலாம்.
விளையாட்டரங்கம்
ஜென்சன் பட்டன்
பார்முலா 1 அதிவேகக் கார் பந்தய விளையாட்டில் உலக சாம்பியனாக பிரிட்டனின் ஜென்சன் பட்டன் வந்திருக்கிறார். பிரசிலில் நடந்த கிராண்ட் பிரி பந்தயத்தில் பட்டன் இப்பட்டத்தைத் தட்டிச் சென்றார்.
கனடாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 7 ஆட்டங்கள் கொண்ட தொடரை விளையாடிவரும் இந்திய ஹாக்கி அணி, ஐந்தாவது ஆட்டத்தின் முடிவில் 4-0 என்ற முன்னிலைக்கு சென்றிருப்பதன் மூலம் தொடரை வென்றுள்ளது.
சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் கொழும்பில் நடத்திய ஜூனியர் டென்னிஸ் போட்டியில் மட்டக்களப்பைச் சேர்ந்த தினேஷ்கந்தன் தங்கராஜா வெற்றிபெற்றுள்ளார்.
இவற்றையும் காண்க
செய்தியறிக்கை
செய்தியரங்கம்
நெஞ்சம் மறப்பதில்லை
தமிழிசை - ஓர் வரலாற்றுப் பார்வை
மின்அஞ்சலாக அனுப்புக
அச்சு வடிவம்
^^ மேலே செல்க
முகப்பு நினைவில் நின்றவை எம்மைப்பற்றி வானிலை
BBC News >> BBC Sport >> BBC Weather >>
Tuesday, October 13, 2009
இந்தியாவில் மாவோயியவாதிகள் அழைப்பின் பேரில் வேலைநிறுத்தம்
இந்தியாவின் ஜார்கண்ட் மற்றும் பிஹார் மாநிலங்களில் மாவோயியக் கிளர்ச்சியாளர்கள் 48 மணி நேர வேலை நிறுத்தத்துக்கு அழைப்புவிடுத்துள்ள நிலையில் அம்மாநிலங்களில் பரவலான வன்முறை சம்பவங்கள் நடந்தாகச் செய்திகள் கூறுகின்றன.
இந்நிலையில் டில்லியில் பிரதமர் மன்மோஹன் சிங்கை சந்தித்த மேற்கு வங்க மாநில முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா, மாவோயியத் தீவிரவாதிகளை ஒடுக்க மத்திய அரசு தொடர்ந்து இணை ராணுவத்தினரை அண்டை மாநிலமான ஜார்க்கண்டிற்கு அனுப்பவேண்டும் என்று கோரியிருக்கிறார்.
இந்தியா மாவோயிய தீவிரவாதிகளை ஒடுக்க பாரிய போலிஸ் நடவடிக்கை ஒன்றை எடுக்க தயார் நிலையில் இருப்பதாக செய்திகள் வரும் நிலையில், இந்த பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணவேண்டுமே தவிர ராணுவ ரீதியான தீர்வுக்கு முயலக்கூடாது என்று அருந்ததி ராய் போன்ற பல சிந்தனையாளர்கள் கோரியிருக்கிறார்கள்.
மாவோயியவாதிகளை கட்டுப்படுத்துவதற்கான அரசாங்க நடவடிக்கை குறித்த மார்க்ஸிஸ்ட் கட்சியின் நிலைப்பாடு பற்றி அக்கட்சியின் தேசிய மத்தியக்குழு உறுப்பினர் உ.ரா.வரதராஜன் தெரிவிக்கும் கருத்துகளை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.
--------------------------------------------------------------------------------
மருத்துவக் கல்வி ஆராய்ச்சிக்கு சடலங்கள் தானம் வழங்கப்படுவதை ஊக்குவிக்க சென்னையில் புதிய திட்டம்
மருத்துவ கல்லூரி மாணவர்களின் கல்விக்கு சடலங்கள் தேவைப்படுகின்றன
மனிதர்கள் இறந்த பிறகு அவர்களின் உடல்களை மருத்துவமனைகளுக்கு தானமாக வழங்குவதை ஊக்குவிக்கும் வகையிலான திட்டம் ஒன்று சென்னை மருத்துவ கல்லூரியில் துவங்கப்பட்டிருக்கிறது.
தமிழ்நாட்டில் மருத்துவம் பயிலும் மாணவர்கள், அறுவை சிகிச்சை செய்து பழகுவதற்கு இந்த சடலங்கள் பெரிதும் பயன்படும் என்று அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்.
ஒருவர் இறந்து குறிப்பிட்ட நேரத்திற்குள் வழங்கப்பட்டால்தான் அச்சடலம் ஆராய்ச்சிகளுக்குப் பயன்படும். ஆனால் இந்தியாவில் இறுதிச் சடங்குகள் ஒருவர் இறந்த பின்னர் நாட்கணக்கில் நடப்பதால், சடலங்கள் ஆராய்ச்சிக்குப் பயன்படாமல் போய்விடுகின்றன என்று தெரிவிக்கப்படுகிறது.
மேலும் ஆராய்ச்சிகளுக்கு கொடுக்கப்பட்ட சடலங்கள் துண்டுகளாக்கப்படும் என்று நினைத்து உறவினர்கள் அவற்றை கொடுக்க முன்வருவதில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த திட்டம் குறித்து சென்னை மருத்துவ கல்லூரியின் முதல்வர் மருத்துவர் மோஹனசுந்தரம் தமிழோசையிடம் தெரிவித்த கருத்துகளை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.
--------------------------------------------------------------------------------
பதினாறு வயது பள்ளித் தலைமை ஆசிரியர்
பாபர் அலியின் பள்ளியில் 800 மாணவர்கள் வரை படிக்கின்றனர்
இந்தியாவின் மேற்குவங்கத்தில் பாபர் அலி என்னும் 16 வயது பள்ளி மாணவர் தனது பகுதியில் பள்ளிசெல்ல வழியில்லாத நூற்றுக்கணக்கான சிறார்களுக்கு கல்வி வழங்குவதற்கான முயற்சியை மேற்கொண்டு வருகிறார்.
முர்ஷிதாபாத்தில் தான் பள்ளிக்கூடம் சென்று கற்றுக்கொண்ட விஷயங்களை மாலை நேரங்களில் தனது வீட்டின் பின்புறத்தில் பள்ளி செல்லாத ஏழை மாணவர்களுக்கு அவர் சொல்லித்தருகிறார்.
இந்த முறைசாரா பள்ளிக்கூடத்தின் தலைமை ஆசிரியரும் பாபர் அலிதான்.
கல்விப் பசி குறித்த பிபிசியின் தொடரில் முதலாவதாக ஒலிபரப்பாகும் பாபர் அலி பற்றிய விபரங்களை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.
இவற்றையும் காண்க
செய்தியறிக்கை
செய்தியரங்கம்
நெஞ்சம் மறப்பதில்லை
தமிழிசை - ஓர் வரலாற்றுப் பார்வை
மின்அஞ்சலாக அனுப்புக அச்சு வடிவம்
^^ மேலே செல்க
முகப்பு நினைவில் நின்றவை எம்மைப்பற்றி வானிலை
BBC News >> BBC Sport >> BBC Weather >> BBC World Service >> BBC Languages >>
உதவி தகவல் பாதுகாப்பு எம்மைத் தொடர்புகொள்ள
இந்தியாவின் ஜார்கண்ட் மற்றும் பிஹார் மாநிலங்களில் மாவோயியக் கிளர்ச்சியாளர்கள் 48 மணி நேர வேலை நிறுத்தத்துக்கு அழைப்புவிடுத்துள்ள நிலையில் அம்மாநிலங்களில் பரவலான வன்முறை சம்பவங்கள் நடந்தாகச் செய்திகள் கூறுகின்றன.
இந்நிலையில் டில்லியில் பிரதமர் மன்மோஹன் சிங்கை சந்தித்த மேற்கு வங்க மாநில முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா, மாவோயியத் தீவிரவாதிகளை ஒடுக்க மத்திய அரசு தொடர்ந்து இணை ராணுவத்தினரை அண்டை மாநிலமான ஜார்க்கண்டிற்கு அனுப்பவேண்டும் என்று கோரியிருக்கிறார்.
இந்தியா மாவோயிய தீவிரவாதிகளை ஒடுக்க பாரிய போலிஸ் நடவடிக்கை ஒன்றை எடுக்க தயார் நிலையில் இருப்பதாக செய்திகள் வரும் நிலையில், இந்த பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணவேண்டுமே தவிர ராணுவ ரீதியான தீர்வுக்கு முயலக்கூடாது என்று அருந்ததி ராய் போன்ற பல சிந்தனையாளர்கள் கோரியிருக்கிறார்கள்.
மாவோயியவாதிகளை கட்டுப்படுத்துவதற்கான அரசாங்க நடவடிக்கை குறித்த மார்க்ஸிஸ்ட் கட்சியின் நிலைப்பாடு பற்றி அக்கட்சியின் தேசிய மத்தியக்குழு உறுப்பினர் உ.ரா.வரதராஜன் தெரிவிக்கும் கருத்துகளை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.
--------------------------------------------------------------------------------
மருத்துவக் கல்வி ஆராய்ச்சிக்கு சடலங்கள் தானம் வழங்கப்படுவதை ஊக்குவிக்க சென்னையில் புதிய திட்டம்
மருத்துவ கல்லூரி மாணவர்களின் கல்விக்கு சடலங்கள் தேவைப்படுகின்றன
மனிதர்கள் இறந்த பிறகு அவர்களின் உடல்களை மருத்துவமனைகளுக்கு தானமாக வழங்குவதை ஊக்குவிக்கும் வகையிலான திட்டம் ஒன்று சென்னை மருத்துவ கல்லூரியில் துவங்கப்பட்டிருக்கிறது.
தமிழ்நாட்டில் மருத்துவம் பயிலும் மாணவர்கள், அறுவை சிகிச்சை செய்து பழகுவதற்கு இந்த சடலங்கள் பெரிதும் பயன்படும் என்று அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்.
ஒருவர் இறந்து குறிப்பிட்ட நேரத்திற்குள் வழங்கப்பட்டால்தான் அச்சடலம் ஆராய்ச்சிகளுக்குப் பயன்படும். ஆனால் இந்தியாவில் இறுதிச் சடங்குகள் ஒருவர் இறந்த பின்னர் நாட்கணக்கில் நடப்பதால், சடலங்கள் ஆராய்ச்சிக்குப் பயன்படாமல் போய்விடுகின்றன என்று தெரிவிக்கப்படுகிறது.
மேலும் ஆராய்ச்சிகளுக்கு கொடுக்கப்பட்ட சடலங்கள் துண்டுகளாக்கப்படும் என்று நினைத்து உறவினர்கள் அவற்றை கொடுக்க முன்வருவதில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த திட்டம் குறித்து சென்னை மருத்துவ கல்லூரியின் முதல்வர் மருத்துவர் மோஹனசுந்தரம் தமிழோசையிடம் தெரிவித்த கருத்துகளை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.
--------------------------------------------------------------------------------
பதினாறு வயது பள்ளித் தலைமை ஆசிரியர்
பாபர் அலியின் பள்ளியில் 800 மாணவர்கள் வரை படிக்கின்றனர்
இந்தியாவின் மேற்குவங்கத்தில் பாபர் அலி என்னும் 16 வயது பள்ளி மாணவர் தனது பகுதியில் பள்ளிசெல்ல வழியில்லாத நூற்றுக்கணக்கான சிறார்களுக்கு கல்வி வழங்குவதற்கான முயற்சியை மேற்கொண்டு வருகிறார்.
முர்ஷிதாபாத்தில் தான் பள்ளிக்கூடம் சென்று கற்றுக்கொண்ட விஷயங்களை மாலை நேரங்களில் தனது வீட்டின் பின்புறத்தில் பள்ளி செல்லாத ஏழை மாணவர்களுக்கு அவர் சொல்லித்தருகிறார்.
இந்த முறைசாரா பள்ளிக்கூடத்தின் தலைமை ஆசிரியரும் பாபர் அலிதான்.
கல்விப் பசி குறித்த பிபிசியின் தொடரில் முதலாவதாக ஒலிபரப்பாகும் பாபர் அலி பற்றிய விபரங்களை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.
இவற்றையும் காண்க
செய்தியறிக்கை
செய்தியரங்கம்
நெஞ்சம் மறப்பதில்லை
தமிழிசை - ஓர் வரலாற்றுப் பார்வை
மின்அஞ்சலாக அனுப்புக அச்சு வடிவம்
^^ மேலே செல்க
முகப்பு நினைவில் நின்றவை எம்மைப்பற்றி வானிலை
BBC News >> BBC Sport >> BBC Weather >> BBC World Service >> BBC Languages >>
உதவி தகவல் பாதுகாப்பு எம்மைத் தொடர்புகொள்ள
Monday, October 12, 2009
தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாழ்ப்பாணம் விஜயம்
இலங்கை வந்துள்ள தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று ஞாயிற்றுகிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்து அங்கு சமூகசேவைகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உட்பட அரச அதிகாரிகள் யாழ் மாநகரசபை உறுப்பினர்கள், மதத்தலைவர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், யாழ் பல்கலைக்கழக மாணவர் பிரதிநிதிகள் ஆகியோரைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்கள்.
இந்தச் சந்திப்பில் கலந்து கொண்ட அனைவருமே இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கியுள்ள மக்களை அங்கிருந்து விடுவித்து, அவர்களை மீளக்குடியமர்த்த வேண்டும் என ஒரு முகமாக வலியுறுத்தியுள்ளார்கள்.
இலங்கையின் வடகடலில் இந்திய மீனவர்களும் இலங்கை மீனவர்களும் தொழில் செய்வதில் ஏற்பட்டுள்ள நீண்டகால பிரச்சினை குறித்தும் இந்தச் சந்திப்பின்போது மீனவர் சங்க பிரதிநிதிகள் சார்பில் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
இடம்பெயர்ந்தோருக்கான முகாம்களில் இருந்து விடுவிக்கப்பட்டு யாழ் பல்லைக்கழகத்தில் இணைந்துள்ள மாணவர்களும் தமது பிரச்சினைகள் குறி்த்து தமிழக தூதுக்குழுவினரிடம் தெரிவித்துள்ளார்கள்.
இதுபற்றிய மேலதிக தகவல்களை இன்றைய செய்தியரங்கத்தில் கேட்கலாம்.
--------------------------------------------------------------------------------
இலங்கை தென் மாகாண சபைத் தேர்தலில் ஆளும் கூட்டணி அமோக வெற்றி
இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ
இலங்கையில் மாகாண சபைத் தேர்தலொன்றில் ஆளும் அரசாங்க கூட்டணி பெற்றுள்ள மாபெரும் வெற்றி, அங்கு விரைவில் நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படும் ஜனாதிபதி தேர்தலின் வெற்றி வாய்ப்பை உறுதி செய்ய அரசுக்கு சிறந்த முன்னோடி நடவடிக்கை என பெரும்பாலான அரசியல் அவதானிகள் கருதுகின்றனர்.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் சொந்த பிரதேசமான தென் மாகாணசபைக்கான தேர்தலில் அவரது தலைமையிலான கூட்டணி மூன்றிலிரண்டு பெரும்பான்மைக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றுள்ளது.
நாட்டில் தனது அரசியல் பலத்தை கட்டியெழுப்பும் வெளிப்படையான உத்தியாக, பல ஆண்டுகளாக உள்நாட்டு யுத்தத்தில் சிக்கியிருந்த வடக்கு மாகாண சபை தவிர்ந்த ஏனைய எட்டு மாகாண சபைகளுக்கான தேர்தலையும் அரசாங்கம் கட்டங்கட்டமாக நடத்திமுடித்துள்ளது.
விடுதலைப்புலிகளை இராணுவ ரீதியில் வெற்றி கொண்டதன் பின்னணியில் தென்னிலங்கையில் மகிந்த ராஜபக்ஸவுக்கு அதிகரித்துள்ள பிரபலத்தைப் பயன்படுத்தி அரசாங்கம் மற்றுமொரு பெரும் தேர்தல் வெற்றியை தனதாக்கிக் கொண்டுள்ளது.
அவரது கூட்டணி 68 வீதமான வாக்குகளைப் பெற்றுள்ள நிலையில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி இன்னும் பின்னால் தள்ளப்பட்டு 25 வீதமான வாக்குகளையும் தென் மாகாணத்தை கோட்டையாக கருதும் தீவிர தேசியவாத இடதுசாரி்யான மக்கள் விடுதலை முன்னணி 6 வீதமான வாக்குகளையும் மட்டுமே பெற்றுள்ளன.
நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கான அமைப்பு என்ற சுயாதீன தேர்தல் கண்காணிப்பு குழுவொன்று, வன்முறைகள் மற்றும் தேர்தல் சட்ட விதி மீறல்கள் தொடர்பான நூற்றுக்கணக்கான சம்பவங்களை ஆதாரங்காட்டி இந்த தேர்தலை முன்னெப்போதுமில்லாதளவுக்கு மிக மோசமானது என்று வர்ணித்துள்ளது.
இந்த தேர்தல் வெற்றியையடுத்து, மகிந்த ராஜபக்ஸ ஜனாதிபதி தேர்தலுக்கான அறிவிப்பை இனி அவசரமாக விடுக்கலாம் என பலரும் நம்புகின்றனர். இந்த அறிவிப்பு அடுத்த மாதத்திலிருந்து எவ்வேளையிலும் வெளியாகலாம் என எதிர்பார்க்கபடுகிறது.
ஆனால் தேர்தல் நாளன்று கருத்து தெரிவித்த அவர் ‘எனது பதவிக் காலத்தில் இன்னும் இரண்டு வருடங்கள் எஞ்சியுள்ளன என்று குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறெனினும் அடுத்த ஏப்ரல் மாதமளவில் பாராளுமன்றத் தேர்தல் ஒன்று நடத்தப்பட்டே ஆக வேண்டியுள்ளது.
--------------------------------------------------------------------------------
ஆஸ்திரேலியாவுக்குள் அத்துமீறி நுழைய முயன்ற இலங்கையர்கள் கைது
இந்தோனேசியா
ஆஸ்திரேலியாவுக்குள் கப்பல் மூலம் சட்டவிரோதமாக நுழைய முயற்சித்ததாக சந்தேகிக்கப்படும் இருநூற்று அறுபது இலங்கையர்களை தடுத்துவைத்துள்ளதாக இந்தோனேசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குடியேறிகள் போன்று தென்படுபவர்களை ஏற்றிச் சென்ற சரக்கு கப்பல் ஒன்று ஜாவா மற்றும் சுமாத்ரா தீவுகளுக்கு இடைப்பட்ட பிரதேசத்தில் இடைமறிக்கப்பட்டதாக இந்தோனீசிய கடற்படைப் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார்.
தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்கள் குடியேற்றத்துறை அலுவலகத்தினால் விசாரணைக்கு உட்படுத்தப்படுவார்கள் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இலங்கையில் கடந்த மூன்று தசாப்தங்களாக
இலங்கை வந்துள்ள தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று ஞாயிற்றுகிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்து அங்கு சமூகசேவைகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உட்பட அரச அதிகாரிகள் யாழ் மாநகரசபை உறுப்பினர்கள், மதத்தலைவர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், யாழ் பல்கலைக்கழக மாணவர் பிரதிநிதிகள் ஆகியோரைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்கள்.
இந்தச் சந்திப்பில் கலந்து கொண்ட அனைவருமே இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கியுள்ள மக்களை அங்கிருந்து விடுவித்து, அவர்களை மீளக்குடியமர்த்த வேண்டும் என ஒரு முகமாக வலியுறுத்தியுள்ளார்கள்.
இலங்கையின் வடகடலில் இந்திய மீனவர்களும் இலங்கை மீனவர்களும் தொழில் செய்வதில் ஏற்பட்டுள்ள நீண்டகால பிரச்சினை குறித்தும் இந்தச் சந்திப்பின்போது மீனவர் சங்க பிரதிநிதிகள் சார்பில் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
இடம்பெயர்ந்தோருக்கான முகாம்களில் இருந்து விடுவிக்கப்பட்டு யாழ் பல்லைக்கழகத்தில் இணைந்துள்ள மாணவர்களும் தமது பிரச்சினைகள் குறி்த்து தமிழக தூதுக்குழுவினரிடம் தெரிவித்துள்ளார்கள்.
இதுபற்றிய மேலதிக தகவல்களை இன்றைய செய்தியரங்கத்தில் கேட்கலாம்.
--------------------------------------------------------------------------------
இலங்கை தென் மாகாண சபைத் தேர்தலில் ஆளும் கூட்டணி அமோக வெற்றி
இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ
இலங்கையில் மாகாண சபைத் தேர்தலொன்றில் ஆளும் அரசாங்க கூட்டணி பெற்றுள்ள மாபெரும் வெற்றி, அங்கு விரைவில் நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படும் ஜனாதிபதி தேர்தலின் வெற்றி வாய்ப்பை உறுதி செய்ய அரசுக்கு சிறந்த முன்னோடி நடவடிக்கை என பெரும்பாலான அரசியல் அவதானிகள் கருதுகின்றனர்.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் சொந்த பிரதேசமான தென் மாகாணசபைக்கான தேர்தலில் அவரது தலைமையிலான கூட்டணி மூன்றிலிரண்டு பெரும்பான்மைக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றுள்ளது.
நாட்டில் தனது அரசியல் பலத்தை கட்டியெழுப்பும் வெளிப்படையான உத்தியாக, பல ஆண்டுகளாக உள்நாட்டு யுத்தத்தில் சிக்கியிருந்த வடக்கு மாகாண சபை தவிர்ந்த ஏனைய எட்டு மாகாண சபைகளுக்கான தேர்தலையும் அரசாங்கம் கட்டங்கட்டமாக நடத்திமுடித்துள்ளது.
விடுதலைப்புலிகளை இராணுவ ரீதியில் வெற்றி கொண்டதன் பின்னணியில் தென்னிலங்கையில் மகிந்த ராஜபக்ஸவுக்கு அதிகரித்துள்ள பிரபலத்தைப் பயன்படுத்தி அரசாங்கம் மற்றுமொரு பெரும் தேர்தல் வெற்றியை தனதாக்கிக் கொண்டுள்ளது.
அவரது கூட்டணி 68 வீதமான வாக்குகளைப் பெற்றுள்ள நிலையில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி இன்னும் பின்னால் தள்ளப்பட்டு 25 வீதமான வாக்குகளையும் தென் மாகாணத்தை கோட்டையாக கருதும் தீவிர தேசியவாத இடதுசாரி்யான மக்கள் விடுதலை முன்னணி 6 வீதமான வாக்குகளையும் மட்டுமே பெற்றுள்ளன.
நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கான அமைப்பு என்ற சுயாதீன தேர்தல் கண்காணிப்பு குழுவொன்று, வன்முறைகள் மற்றும் தேர்தல் சட்ட விதி மீறல்கள் தொடர்பான நூற்றுக்கணக்கான சம்பவங்களை ஆதாரங்காட்டி இந்த தேர்தலை முன்னெப்போதுமில்லாதளவுக்கு மிக மோசமானது என்று வர்ணித்துள்ளது.
இந்த தேர்தல் வெற்றியையடுத்து, மகிந்த ராஜபக்ஸ ஜனாதிபதி தேர்தலுக்கான அறிவிப்பை இனி அவசரமாக விடுக்கலாம் என பலரும் நம்புகின்றனர். இந்த அறிவிப்பு அடுத்த மாதத்திலிருந்து எவ்வேளையிலும் வெளியாகலாம் என எதிர்பார்க்கபடுகிறது.
ஆனால் தேர்தல் நாளன்று கருத்து தெரிவித்த அவர் ‘எனது பதவிக் காலத்தில் இன்னும் இரண்டு வருடங்கள் எஞ்சியுள்ளன என்று குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறெனினும் அடுத்த ஏப்ரல் மாதமளவில் பாராளுமன்றத் தேர்தல் ஒன்று நடத்தப்பட்டே ஆக வேண்டியுள்ளது.
--------------------------------------------------------------------------------
ஆஸ்திரேலியாவுக்குள் அத்துமீறி நுழைய முயன்ற இலங்கையர்கள் கைது
இந்தோனேசியா
ஆஸ்திரேலியாவுக்குள் கப்பல் மூலம் சட்டவிரோதமாக நுழைய முயற்சித்ததாக சந்தேகிக்கப்படும் இருநூற்று அறுபது இலங்கையர்களை தடுத்துவைத்துள்ளதாக இந்தோனேசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குடியேறிகள் போன்று தென்படுபவர்களை ஏற்றிச் சென்ற சரக்கு கப்பல் ஒன்று ஜாவா மற்றும் சுமாத்ரா தீவுகளுக்கு இடைப்பட்ட பிரதேசத்தில் இடைமறிக்கப்பட்டதாக இந்தோனீசிய கடற்படைப் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார்.
தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்கள் குடியேற்றத்துறை அலுவலகத்தினால் விசாரணைக்கு உட்படுத்தப்படுவார்கள் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இலங்கையில் கடந்த மூன்று தசாப்தங்களாக
Friday, October 9, 2009
நடிகைகள் பற்றிய அவதூறு செய்தி: தினமலர் செய்தி ஆசிரியர் கைது
தினமலர் பத்திரிகையின் சென்னைப் பதிப்பு செய்தி ஆசிரியர் லெனின் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் லெனின் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாலியல் தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் கைதான துணை நடிகை புவனேஸ்வரி தொடர்பான செய்திகளில், மேலும் சில முன்னணி நடிகைகள் குறித்து தவறான மற்றும் அவதூறான செய்திகளை தினமலர் வெளியிட்டதாக தென்னிந்திய நடிகர் சங்கம் கொடுத்த புகாரின் அடிப்படையில் லெனின் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
லெனின் கைதுசெய்யப்பட்டிருப்பதற்கு பத்திரிகையாளர் சங்கங்கள் கண்டனம் தெரிவித்துள்ளன.
--------------------------------------------------------------------------------
முல்லைப் பெரியாறு: கேரள அரசுக்கு வழங்கப்பட்ட அனுமதியை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்கிறார் தமிழக முதல்வர்
முதல்வர் கருணாநிதி
முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டுவது பற்றி ஆய்வு நடத்த கேரள அரசுக்கு மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் கொடுத்த அனுமதியை திரும்பப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு முதல்வர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
முல்லைப் பெரியாறு அணை பிரச்சனை தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளபோது, வனவிலங்குகளுக்கான தேசிய வாரியத்தின் நிலைக்குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில், முல்லைப் பெரியாறில் கேரள அரசு புதிய அணை கட்ட அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் அனுமதி அளித்திருக்கக்கூடாது என்று அக்கடிதத்தில் முதல்வர் கருணாநிதி குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே தமிழக அரசு அணைக்கான ஆய்வு நடத்த மத்திய அரசு அனுமதி அளித்ததற்கு தடை விதிக்க கோரியும் மற்றும் கேரள அரசு ஆய்வு மற்றும் சர்வே பணிகளை மேற்கொள்வதை தடுத்து நிறுத்த கோரியும் மனு ஒன்றினை வியாழக்கிழமை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.
--------------------------------------------------------------------------------
யுத்தப் பிரதேசங்களில் பணியாற்றிருந்த தமிழ் மருத்துவருகளுக்கு மீண்டும் அரசு பணி
டாக்டர் சத்யமூர்த்தி
இலங்கையில் அண்மையப் போரின்போது விடுதலைப் புலிகள் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் பணியாற்றி பிறகு அரசால் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டிருந்த அரசு மருத்துவர்கள் மூன்று பேர் மீண்டும் அரசுப் பணிகளில் நியமிக்கப்பட்டுள்ளனர்.
நான்காவது மருத்துவர் உயர் படிப்பு படிக்க சென்றுள்ளார்.
வட மாகாண கூடுதல் சுகாதார சேவைகள் பணிப்பாளராக பொறுப்பேற்றுள்ள டாக்டர் சத்யமூர்த்தி, தான் மீண்டும் பணியமர்த்தப்பட்டது குறித்து தமிழோசையில் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளார்.
வட மாகாண திட்டமிடல் அதிகாரியாக டாக்டர் வரதராஜா பணியேற்றுள்ளார்.
வவுனியாவில் தற்காலிகமாக இயங்கும் முல்லைத்தீவு மாவட்ட சுகாதார திணைக்களனில் டாக்டர் ஷண்முகராஜா பணியமர்த்தப்பட்டுள்ளார்.
கொழும்பு பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பு படிக்க டாக்டர். இளஞ்செழியன் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த மருத்துவர்கள் அரசுப் பணிகளில் நியமிக்கப்பட்டிருந்தாலும் இவர்கள் மீதான சட்ட நடைமுறைகள் இன்னமும் கைவிடப்படவில்லை.
--------------------------------------------------------------------------------
கிழக்கு இலங்கையில் புடவை விற்பனையில் ஈடுபட்ட மேலும் சில இந்தியர்கள் கைது
மட்டக்களப்பு வாகரைப் பிரதேசத்தில் தங்கியிருந்து சட்ட விரோதமான முறையில் துணி வியாபாரத்தில் ஈடுபட்டார்கள் என்ற குற்றத்தின் பேரில் ஐந்து இந்திய வியாபாரிகள் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் பேரில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
தினமலர் பத்திரிகையின் சென்னைப் பதிப்பு செய்தி ஆசிரியர் லெனின் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் லெனின் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாலியல் தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் கைதான துணை நடிகை புவனேஸ்வரி தொடர்பான செய்திகளில், மேலும் சில முன்னணி நடிகைகள் குறித்து தவறான மற்றும் அவதூறான செய்திகளை தினமலர் வெளியிட்டதாக தென்னிந்திய நடிகர் சங்கம் கொடுத்த புகாரின் அடிப்படையில் லெனின் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
லெனின் கைதுசெய்யப்பட்டிருப்பதற்கு பத்திரிகையாளர் சங்கங்கள் கண்டனம் தெரிவித்துள்ளன.
--------------------------------------------------------------------------------
முல்லைப் பெரியாறு: கேரள அரசுக்கு வழங்கப்பட்ட அனுமதியை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்கிறார் தமிழக முதல்வர்
முதல்வர் கருணாநிதி
முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டுவது பற்றி ஆய்வு நடத்த கேரள அரசுக்கு மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் கொடுத்த அனுமதியை திரும்பப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு முதல்வர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
முல்லைப் பெரியாறு அணை பிரச்சனை தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளபோது, வனவிலங்குகளுக்கான தேசிய வாரியத்தின் நிலைக்குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில், முல்லைப் பெரியாறில் கேரள அரசு புதிய அணை கட்ட அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் அனுமதி அளித்திருக்கக்கூடாது என்று அக்கடிதத்தில் முதல்வர் கருணாநிதி குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே தமிழக அரசு அணைக்கான ஆய்வு நடத்த மத்திய அரசு அனுமதி அளித்ததற்கு தடை விதிக்க கோரியும் மற்றும் கேரள அரசு ஆய்வு மற்றும் சர்வே பணிகளை மேற்கொள்வதை தடுத்து நிறுத்த கோரியும் மனு ஒன்றினை வியாழக்கிழமை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.
--------------------------------------------------------------------------------
யுத்தப் பிரதேசங்களில் பணியாற்றிருந்த தமிழ் மருத்துவருகளுக்கு மீண்டும் அரசு பணி
டாக்டர் சத்யமூர்த்தி
இலங்கையில் அண்மையப் போரின்போது விடுதலைப் புலிகள் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் பணியாற்றி பிறகு அரசால் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டிருந்த அரசு மருத்துவர்கள் மூன்று பேர் மீண்டும் அரசுப் பணிகளில் நியமிக்கப்பட்டுள்ளனர்.
நான்காவது மருத்துவர் உயர் படிப்பு படிக்க சென்றுள்ளார்.
வட மாகாண கூடுதல் சுகாதார சேவைகள் பணிப்பாளராக பொறுப்பேற்றுள்ள டாக்டர் சத்யமூர்த்தி, தான் மீண்டும் பணியமர்த்தப்பட்டது குறித்து தமிழோசையில் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளார்.
வட மாகாண திட்டமிடல் அதிகாரியாக டாக்டர் வரதராஜா பணியேற்றுள்ளார்.
வவுனியாவில் தற்காலிகமாக இயங்கும் முல்லைத்தீவு மாவட்ட சுகாதார திணைக்களனில் டாக்டர் ஷண்முகராஜா பணியமர்த்தப்பட்டுள்ளார்.
கொழும்பு பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பு படிக்க டாக்டர். இளஞ்செழியன் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த மருத்துவர்கள் அரசுப் பணிகளில் நியமிக்கப்பட்டிருந்தாலும் இவர்கள் மீதான சட்ட நடைமுறைகள் இன்னமும் கைவிடப்படவில்லை.
--------------------------------------------------------------------------------
கிழக்கு இலங்கையில் புடவை விற்பனையில் ஈடுபட்ட மேலும் சில இந்தியர்கள் கைது
மட்டக்களப்பு வாகரைப் பிரதேசத்தில் தங்கியிருந்து சட்ட விரோதமான முறையில் துணி வியாபாரத்தில் ஈடுபட்டார்கள் என்ற குற்றத்தின் பேரில் ஐந்து இந்திய வியாபாரிகள் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் பேரில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
Wednesday, October 7, 2009
இலங்கை முகாம்களுக்கான உதவி நிறுத்தப்படும் - பிரிட்டன் அறிவிப்பு
இலங்கையின் வடபகுதியில், சுமார் இரண்டரை லட்சம் இடம்பெயர்ந்த தமிழ் மக்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ள முகாம்களுக்கு அவசர உதவிகளை தவிர ஏனைய அனைத்து உதவிகளையும் நிறுத்தப் போவதாக பிரிட்டிஷ் அரசாங்கம் கூறியுள்ளது.
அங்கிருக்கின்ற மிகப்பெரிய முகாமுக்கு பிரிட்டிஷ் அமைச்சர் மைக் ஃபொஸ்டர் அவர்கள் விஜயம் செய்து திரும்பியதை அடுத்து இந்த அறிவிப்பு வந்துள்ளது.
அதே நேரம் பருவ மழைக்காலத்தில் அங்கு ஏற்படக் கூடிய எந்தவிதமான வெள்ளமும் வடிந்தோடும் வகையில் தேவையான வடிகால் வசதிகளை தாம் முகாம்களில் அமைப்பதாக இலங்கை அரசாங்கம் கூறுகின்றது.
ஆனால், அதனுடன் பிரிட்டனும், ஐநாவும் உடன்படவில்லை.
மனிக்ஃபார்ம் முகாமுக்கு விஜயம் செய்த பிரிட்டிஷ் அமைச்சர் மைக் ஃபொஸ்டர், அங்கு கடுமையான மழை பெய்தால், பெரும் அழிவும், தொற்றுநோய் பரவலும் ஏற்படும் என்று அச்சம் வெளியிட்டுள்ளார்.
முகாமில் உள்ளவர்களில் சுமார் 70 வீதமானவர்கள் அங்கிருந்து வெளியேறும் பட்சத்தில், அவர்களுக்கு ஆதரவு வழங்கக்கூடிய குடும்பங்களுடன் சென்று தங்குவதற்கான வசதியுடையவர்கள் என்றும் அவர் கூறுகிறார்.
அந்த முகாம்களில் தமது நிலலைமை குறித்து பேசுவதற்கு ஆர்வத்துடன் இருந்த மக்களுடன் பிபிசிக்கு பேசும் வாய்ப்பு கிடைத்தது.
அங்கு நிலைமைகள் மிகவும் மோசம் என்றும், நல்ல குடிநீர் கிடையாது என்றும், போதுமான வடிகால் வசதி கிடையாது என்றும், அதிக வெப்பம் காரணமாக மக்கள் பலர் நோயில் வீழ்வதாகவும், அங்கிருந்த பெண்கள் மாறி மாறி கூறினார்கள்.
முடிந்தவரை விரைவாக எங்களை எங்கள் வீடுகளுக்கு அனுப்புங்கள் என்று ஒருவர் கூறினார்.
மனிக்பார்ம் முகாமில் இரண்டு லட்சத்து நாற்பதினாயிரம் பேர் இன்னமும் இருப்பதாக கூறுகின்ற அரசாங்கம், இதுவரை இருபதினாயிரம் பேர் மீள்குடியேற்றப்பட்டு விட்டதாக, அல்லது விடுவிக்கப்பட்டு விட்டதாக கூறுகிறது.
கவலைப்படவில்லை
வவுனியா இடைத்தங்கல் முகாம்களில் உள்ளவர்களுக்கான உதவியை ஐக்கிய ராஜ்ஜியம் நிறுத்தினாலும், வேறு பல நாடுகள் இலங்கைக்கு தொடர்ந்து உதவ தயாராக இருப்பதாகவும் இந்த முடிவால் தாம் கவலைப்படவில்லை என்றும் இலங்கை சமாதானச் செயலகத்தின் பணிப்பாளர் ராஜீவ விஜயசிங்க பி பி சியின் சிங்கள சேவையான சந்தேஷியாவிடம் தெரிவித்தார்.
மனித மேம்பாட்டு பட்டியலில் இந்தியாவுக்கு இடம் 134
பொருளாதார வளர்சியின் பயன்கள் இந்தியாவில் பலரை எட்டவில்லை
கல்வி, உள்ளூர் வாங்குதிறன் மூலம் கணக்கிடப்படும் தனி நபர் வருமானம் மற்றும் சராசரி ஆயுட் காலம் ஆகிய மூன்று காரணிகளை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்படும் மனித மேம்பாட்டு குறியீட்டில் இந்தியா 134 ஆவது இடத்தில் உள்ளதாக ஐக்கிய நாடுகளின் வளர்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த 2006 ஆம் ஆண்டிலும் இந்தியா இதே நிலையில் தான் இருந்தது. இலங்கை இந்தப் பட்டியலில் 102 ஆவது இடத்தைப் பெற்றுள்ளது.
சில ஆண்டுகளாக உலகின் இரண்டாவது வேகமான பொருளாதார வளர்சியைப் பெற்று வரும் இந்தியா ஏன் மனித வள மேம்பாட்டில் பின்தங்கியுள்ளது என்று சென்னை பல்கலைக் கழக பேராசிரியர் சீனிவாசன் அவர்கள் தெரிவித்த கருத்துக்களை இன்றைய நிகழ்சியில் நேயர்கள் கேட்கலாம்.
முல்லை பெரியாறு விவகாரம் -மத்திய அரசு விளக்கம்
மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ்முல்லைப் பெரியாறு அணைக்குப் பதிலாக புதிய அணை கட்டுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து, வனப்பகுதியில் ஆய்வு நடத்துவதற்கு மத்திய அரசு அனுமதியளித்திருப்பதன் மூலம், சட்ட நடைமுறைகளில் தலையிடவில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சகத்துக்கு தனிப்பொறுப்பு வகிக்கும் இணை அமைச்சர் ஜெயராம் ரமேஷ் சார்பில், இன்று வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக, தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலங்களுக்கு இடையிலான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், புதிய அணை தொடர்பான ஆய்வுக்கு அனுமதியளித்ததை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப் போவதாக தமிழக அரசு நேற்று அறிவித்தது. அந்த நிலையில், அமைச்சர் ஜெயராம் ரமேஷ் சார்பில் இன்று அறிக்கை வெளியாகியுள்ளது.
பெரியார் புலிகள் சரணாலயம் அமைந்துள்ள வனப்பகுதியில், முல்லைப்பெரியாறு அணை தொடர்பான ஆய்வு நடத்த, வனப்பாதுகாப்புச் சட்டப்படி கேரள அரசு அனுமதி கோரியிருந்தது. அமைச்சர் ஜெயராம் ரமேஷ் தலைமையிலான தேசிய வனவிலங்கு வாரிய நிலைக்குழு, அந்தக் கோரிக்கை குறித்து கடந்த செப்டம்பர் 16-ம் தேதி ஆய்வு நடத்தியதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலைக்குழுவின் பரிந்துரைப்படி, சட்டரீதியான ஆய்வுக்குப் பிறகு, கேரள அரசு ஆய்வு நடத்த அனுமதியளிக்கப்பட்டுள்ளது. அந்த அனுமதி, ஆய்வு நடத்துவதற்காக மட்டுமே தவிர, சட்டம் மற்றும் நிர்வாக ரீதியாகப் பின்பற்ற வேண்டிய நடைமுறைகளைப் பாதிக்கும் வகையில் அந்த அனுமதி வழங்கப்படவில்லை என்று அமைச்சர் ஜெயராம் ரமேஷ் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், அமைச்சரின் அந்தக் கூற்றை நிராகரித்துள்ளார், திமுகவின் நாடாளுமன்றக் கட்சித் தலைவரும், ஏற்கெனவே, மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சராகப் பதவி வகித்தவருமான டி.ஆர். பாலு.
இவற்றையும் காண்க
செய்தியறிக்கை
செய்தியரங்கம்
நெஞ்சம் மறப்பதில்லை
தமிழிசை - ஓர் வரலாற்றுப் பார்வை
மின்அஞ்சலாக அனுப்புக
அச்சு வடிவம்
^^ மேலே செல்க
முகப்பு நினைவில் நின்றவை எம்மைப்பற்றி வானிலை
BBC News >> BBC Sport >> BBC Weather >> BBC World Service >> BBC Languages >>
உதவி தகவல் பாதுகாப்பு எம்மைத் தொடர்புகொள்ள
//-1?'https:':'http:';
var _rsRP=escape(document.referrer);
var _rsND=_rsLP+'//secure-uk.imrworldwide.com/';
if (parseInt(navigator.appVersion)>=4)
{
var _rsRD=(new Date()).getTime();
var _rsSE=1;
var _rsSV="";
var _rsSM=0.1;
_rsCL='';
}
else
{
_rsCL='';
}
document.write(_rsCL);
//]]>
இலங்கையின் வடபகுதியில், சுமார் இரண்டரை லட்சம் இடம்பெயர்ந்த தமிழ் மக்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ள முகாம்களுக்கு அவசர உதவிகளை தவிர ஏனைய அனைத்து உதவிகளையும் நிறுத்தப் போவதாக பிரிட்டிஷ் அரசாங்கம் கூறியுள்ளது.
அங்கிருக்கின்ற மிகப்பெரிய முகாமுக்கு பிரிட்டிஷ் அமைச்சர் மைக் ஃபொஸ்டர் அவர்கள் விஜயம் செய்து திரும்பியதை அடுத்து இந்த அறிவிப்பு வந்துள்ளது.
அதே நேரம் பருவ மழைக்காலத்தில் அங்கு ஏற்படக் கூடிய எந்தவிதமான வெள்ளமும் வடிந்தோடும் வகையில் தேவையான வடிகால் வசதிகளை தாம் முகாம்களில் அமைப்பதாக இலங்கை அரசாங்கம் கூறுகின்றது.
ஆனால், அதனுடன் பிரிட்டனும், ஐநாவும் உடன்படவில்லை.
மனிக்ஃபார்ம் முகாமுக்கு விஜயம் செய்த பிரிட்டிஷ் அமைச்சர் மைக் ஃபொஸ்டர், அங்கு கடுமையான மழை பெய்தால், பெரும் அழிவும், தொற்றுநோய் பரவலும் ஏற்படும் என்று அச்சம் வெளியிட்டுள்ளார்.
முகாமில் உள்ளவர்களில் சுமார் 70 வீதமானவர்கள் அங்கிருந்து வெளியேறும் பட்சத்தில், அவர்களுக்கு ஆதரவு வழங்கக்கூடிய குடும்பங்களுடன் சென்று தங்குவதற்கான வசதியுடையவர்கள் என்றும் அவர் கூறுகிறார்.
அந்த முகாம்களில் தமது நிலலைமை குறித்து பேசுவதற்கு ஆர்வத்துடன் இருந்த மக்களுடன் பிபிசிக்கு பேசும் வாய்ப்பு கிடைத்தது.
அங்கு நிலைமைகள் மிகவும் மோசம் என்றும், நல்ல குடிநீர் கிடையாது என்றும், போதுமான வடிகால் வசதி கிடையாது என்றும், அதிக வெப்பம் காரணமாக மக்கள் பலர் நோயில் வீழ்வதாகவும், அங்கிருந்த பெண்கள் மாறி மாறி கூறினார்கள்.
முடிந்தவரை விரைவாக எங்களை எங்கள் வீடுகளுக்கு அனுப்புங்கள் என்று ஒருவர் கூறினார்.
மனிக்பார்ம் முகாமில் இரண்டு லட்சத்து நாற்பதினாயிரம் பேர் இன்னமும் இருப்பதாக கூறுகின்ற அரசாங்கம், இதுவரை இருபதினாயிரம் பேர் மீள்குடியேற்றப்பட்டு விட்டதாக, அல்லது விடுவிக்கப்பட்டு விட்டதாக கூறுகிறது.
கவலைப்படவில்லை
வவுனியா இடைத்தங்கல் முகாம்களில் உள்ளவர்களுக்கான உதவியை ஐக்கிய ராஜ்ஜியம் நிறுத்தினாலும், வேறு பல நாடுகள் இலங்கைக்கு தொடர்ந்து உதவ தயாராக இருப்பதாகவும் இந்த முடிவால் தாம் கவலைப்படவில்லை என்றும் இலங்கை சமாதானச் செயலகத்தின் பணிப்பாளர் ராஜீவ விஜயசிங்க பி பி சியின் சிங்கள சேவையான சந்தேஷியாவிடம் தெரிவித்தார்.
மனித மேம்பாட்டு பட்டியலில் இந்தியாவுக்கு இடம் 134
பொருளாதார வளர்சியின் பயன்கள் இந்தியாவில் பலரை எட்டவில்லை
கல்வி, உள்ளூர் வாங்குதிறன் மூலம் கணக்கிடப்படும் தனி நபர் வருமானம் மற்றும் சராசரி ஆயுட் காலம் ஆகிய மூன்று காரணிகளை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்படும் மனித மேம்பாட்டு குறியீட்டில் இந்தியா 134 ஆவது இடத்தில் உள்ளதாக ஐக்கிய நாடுகளின் வளர்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த 2006 ஆம் ஆண்டிலும் இந்தியா இதே நிலையில் தான் இருந்தது. இலங்கை இந்தப் பட்டியலில் 102 ஆவது இடத்தைப் பெற்றுள்ளது.
சில ஆண்டுகளாக உலகின் இரண்டாவது வேகமான பொருளாதார வளர்சியைப் பெற்று வரும் இந்தியா ஏன் மனித வள மேம்பாட்டில் பின்தங்கியுள்ளது என்று சென்னை பல்கலைக் கழக பேராசிரியர் சீனிவாசன் அவர்கள் தெரிவித்த கருத்துக்களை இன்றைய நிகழ்சியில் நேயர்கள் கேட்கலாம்.
முல்லை பெரியாறு விவகாரம் -மத்திய அரசு விளக்கம்
மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ்முல்லைப் பெரியாறு அணைக்குப் பதிலாக புதிய அணை கட்டுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து, வனப்பகுதியில் ஆய்வு நடத்துவதற்கு மத்திய அரசு அனுமதியளித்திருப்பதன் மூலம், சட்ட நடைமுறைகளில் தலையிடவில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சகத்துக்கு தனிப்பொறுப்பு வகிக்கும் இணை அமைச்சர் ஜெயராம் ரமேஷ் சார்பில், இன்று வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக, தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலங்களுக்கு இடையிலான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், புதிய அணை தொடர்பான ஆய்வுக்கு அனுமதியளித்ததை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப் போவதாக தமிழக அரசு நேற்று அறிவித்தது. அந்த நிலையில், அமைச்சர் ஜெயராம் ரமேஷ் சார்பில் இன்று அறிக்கை வெளியாகியுள்ளது.
பெரியார் புலிகள் சரணாலயம் அமைந்துள்ள வனப்பகுதியில், முல்லைப்பெரியாறு அணை தொடர்பான ஆய்வு நடத்த, வனப்பாதுகாப்புச் சட்டப்படி கேரள அரசு அனுமதி கோரியிருந்தது. அமைச்சர் ஜெயராம் ரமேஷ் தலைமையிலான தேசிய வனவிலங்கு வாரிய நிலைக்குழு, அந்தக் கோரிக்கை குறித்து கடந்த செப்டம்பர் 16-ம் தேதி ஆய்வு நடத்தியதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலைக்குழுவின் பரிந்துரைப்படி, சட்டரீதியான ஆய்வுக்குப் பிறகு, கேரள அரசு ஆய்வு நடத்த அனுமதியளிக்கப்பட்டுள்ளது. அந்த அனுமதி, ஆய்வு நடத்துவதற்காக மட்டுமே தவிர, சட்டம் மற்றும் நிர்வாக ரீதியாகப் பின்பற்ற வேண்டிய நடைமுறைகளைப் பாதிக்கும் வகையில் அந்த அனுமதி வழங்கப்படவில்லை என்று அமைச்சர் ஜெயராம் ரமேஷ் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், அமைச்சரின் அந்தக் கூற்றை நிராகரித்துள்ளார், திமுகவின் நாடாளுமன்றக் கட்சித் தலைவரும், ஏற்கெனவே, மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சராகப் பதவி வகித்தவருமான டி.ஆர். பாலு.
இவற்றையும் காண்க
செய்தியறிக்கை
செய்தியரங்கம்
நெஞ்சம் மறப்பதில்லை
தமிழிசை - ஓர் வரலாற்றுப் பார்வை
மின்அஞ்சலாக அனுப்புக
அச்சு வடிவம்
^^ மேலே செல்க
முகப்பு நினைவில் நின்றவை எம்மைப்பற்றி வானிலை
BBC News >> BBC Sport >> BBC Weather >> BBC World Service >> BBC Languages >>
உதவி தகவல் பாதுகாப்பு எம்மைத் தொடர்புகொள்ள
//-1?'https:':'http:';
var _rsRP=escape(document.referrer);
var _rsND=_rsLP+'//secure-uk.imrworldwide.com/';
if (parseInt(navigator.appVersion)>=4)
{
var _rsRD=(new Date()).getTime();
var _rsSE=1;
var _rsSV="";
var _rsSM=0.1;
_rsCL='';
}
else
{
_rsCL='';
}
document.write(_rsCL);
//]]>
Tuesday, October 6, 2009
குழந்தைகளின் இறப்பு வீதத்தை பெருமளவில் குறைக்க குறைந்த பணமே போதும் என்கிறது சேவ் த சில்ட்ரன் அமைப்பு
உலக மட்டத்தில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் குணப்படுத்தப்படக் கூடிய நோய்களாலேயே அநாவசியமாக இறப்பதை, ஒப்பீட்டளவில் சிறிய தொகை பணத்தின் மூலமே, பெருமளவில் குறைக்க முடியும் என்று பொதுமக்களை உணரச்செய்யும் தமது மிகப்பெரிய பிரச்சாரத்தை, சர்வதேச உதவி நிறுவனமான ''சேவ் த சில்ட்ரன்'' அமைப்பு ஆரம்பிக்கிறது.
நாலாயிரம் கோடி டாலர்கள் கூடுதல் நிதி இதனை எட்டப் போதுமானது என்று அது கூறுகிறது.
இந்தியாவில் சிறப்பான பொருளாதார வளர்ச்சி காணப்படுகின்ற போதிலும், அங்கு சிறார் இறப்பு வீதம் மற்றும் சிறார் போஷாக்கின்மை ஆகியன அதிர்ச்சி தரக்ககூடிய அளவில் இருப்பதாக அது குறிப்பிடுகிறது.
இந்தியாவில் பிறக்கின்ற குழந்தைகளில், பிறந்த முதல் நாளிலேயே இறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை வருடத்துக்கு 4 லட்சம் என்பதுடன், உலகில் குழந்தைகளின் இறப்பு வீதத்தில் 20 வீதத்தை இந்தியா கொண்டிருக்கிறது.
இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை வழங்க பாஜக தேமுதிக எதிர்ப்பு
இந்தியாவில் உள்ள சில இலங்கை அகதிகள்தமிழகத்தில் உள்ள ஒரு லட்சத்திற்கும் மேலான இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை வழங்க வேண்டுமென்ற தமிழக முதல்வர் கருணாநிதியின் கோரிக்கைக்கு பாரதீய ஜனதாவும், தேசிய முற்போக்கு திராவிடர் கழகமும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இலங்கை இனப்பிரச்சினையின் விளைவாக இந்தியாவில் தஞ்சம் புகுந்து, தமிழகத்தில் பத்துப் பதினைந்து ஆண்டுகளாக அரசு நடத்திவரும் முகாம்களிலும் வெளியேயும் வாழ்ந்து வரும் அகதிகள் அனைத்து உரிமைகளும் பெற்று இந்தியாவிலேயே தொடர்ந்து வாழ வழிவகை செய்ய வேண்டும் என்று கடந்த சில நாட்களாக திமுக வற்புறுத்தி வருகிறது. இது தொடர்பாக முதல்வர் கருணாநிதியும் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருக்கிறார்.
பொதுவாக இக்கோரிக்கைக்கு தமிழகக் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. மத்திய உள்துறை அமைச்சரும் கோரிக்கை பரிசீலிக்கப்படுவதாகக் கூறியிருக்கிறார்.
அவ்வாறு இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு உரிமை பெற்றுத்தருவது இலங்கையில் தமிழ் இனமே இருக்கக் கூடாது என்று செயல்பட்டு வரும் அதிபர் ராஜபக்ஷவுக்கு துணைப் போவதாக அமையும் என பாரதீய ஜனதா கட்சி கூறியிருக்கிறது.
நேற்று சென்னையில் நடைபெற்ற தமிழக பா.ஜ.க.வின் செயற்குழுக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசும்போது கட்சியின் தமிழகப்பிரிவின் துணைத்தலைவர் எச். ராஜா இலங்கையின் பூர்வீக இனமான தமிழர்களை அந்த நாட்டிலேயே பாதுகாப்பாக வாழ்வதற்கான சூழ்நிலையை மத்திய, மாநில அரசுகள் அமைத்துத் தர வேண்டும் என வலியுறுத்தினார்.
சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசும்போது தேமுதிக அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியக் குடியேற்ற உரிமை வழங்குவது என்பது இலங்கையில் நடைபெறும் இனவெறி அரசின் கொள்கைகளை நாமே நிறைவேற்றி வைப்பதைப்போல் ஆகிவிடும், எனவே அத்தகைய கொள்கையினை தனது கட்சி ஒருபோதும் ஏற்காது என்றார்.
வவுனியா முகாம் மக்கள் மழைக்கு அஞ்சத் தேவையில்லை என்கிறது அரசாங்கம்
முகாம் மக்கள்வட இலங்கையில் பருவமழைக் காலம் நெருங்கிவருவதால், அங்குள்ள பெரிய இடம்பெயர்ந்தோர் முகாம்கள் நிலை தொடர்பில் அச்சம் கொள்ளத் தேவையில்லை என இலங்கை அரசாங்கம் உறுதியளித்துள்ளது.
இடம்பெயர்ந்தோர் முகாம்களில் மழைக்காலத்தை கருத்தில்கொண்டு வெள்ள வடிகால் பணிகள் வேகமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக கொழும்பில் செய்தியாளர்களைச் சந்தித்த இலங்கை மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
முகாம்களில் இருந்து மக்கள் விரைவாக விடுவிக்கப்பட வேண்டும் என ஐ.நா.வும், இலங்கையின் எதிர்க்கட்சிகளும் கோருகின்றன. முகாம்வாசிகளில் பத்து வீதத்திற்கும் குறைவானவர்களே இதுவரையில் வெளியில் விடப்பட்டுள்ளர்கள் என்பதை இலங்கை அதிகாரிகள் ஒப்புகொண்டுள்ளனர்.
இதனிடையே, இடம்பெயர்ந்தோர் முகாம்கள் நிரந்தர குடியிருப்புகளாகவோ, ஓரளவு நிரந்தர குடியிருப்புகளாகவோ மாற்றப்பட்டுவருவது கவலையளிப்பதாக மேலக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானில் அதிகரித்துவரும் வன்செயல்கள்- ஒரு ஆய்வு
இன்று தாக்குதல் நடந்த இடம்பாகிஸ்தானில் உலக உணவுத்திட்டத்தின் அலுவலகத்தில் குண்டு ஒன்று வெடித்துள்ளது. அதில் மூவர் கொல்லப்பட்டதுடன், மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.
அங்கு தலைநகரில் நடக்கும் தொடர்ச்சியான தாக்குதல்களில் தற்போது நடந்திருப்பது இது.
பெரும்பாலான இப்படியான தாக்குதல்கள் பாதுகாப்பு படைகளை இலக்கு வைத்ததாய் அல்லது மேற்குலகுடன் பலமான தொடர்புடைய வணிகங்கள் அல்லது அமைப்புக்களை இலக்கு வைத்ததாய் இருக்கும்.
கடந்த இரு வருடங்களில் தீவிரவாதிகளின் வன்செயல்கள் அதிகரித்துள்ள நிலையில், கிளர்ச்சிக்காரர்கள் நகரங்களில் உள்ள முக்கியமான இடங்களை இலக்கு வைத்து தாக்குவதில் அதிக கவனத்தைக் குவிக்கிறார்கள்.
இந்தத் தாக்குதலை யார் நடத்தினார்கள் என்பது தெரியவில்லை. ஆனால், தலிபான் ஆதரவு தலைவர் ஹக்கிமுல்லா மெஃசுட் அவர்களால் அண்மையில் விடுக்கப்பட்ட அச்சுறுத்தல்களை அடுத்து இது நடந்திருக்கிறது.
கடந்த ஆகஸ்டில் கொல்லப்பட்ட தீவிரவாதத் தலைவர், பைதுல்லா மெஃசுட் அவர்களின் மரணத்துக்கான பதிலடியாக, தாக்குதல்கள் அதிகரிக்கப்படுமென்று அவர் மிரட்டியிருந்தார்.
பழங்குடியினப் பகுதியில் நடத்தப்பட்ட வான் தாக்குதலுக்கு பதிலடி வழங்கப்படும் என்றும் அவர் கூறியிருந்தார்.
இவையனைத்தும் பாகிஸ்தான் அரசாங்கத்தின் மீதான அழுத்தங்களை அதிகரிக்கச் செய்துள்ளன.
அமெரிக்கர்களின் ஆதரவுடன் தெற்கு வசிரிஸ்தானில், பாகிஸ்தான் படைகளால் முழுமையான இராணுவ நடவடிக்கை ஒன்று நடத்தப்படும் என்ற ஊகமும் அதிகரித்து வருகின்றது.
அங்கு கடந்த பல மாதங்களாக நடத்தப்பட்ட வான் தாக்குதல்கள் மற்றும் சிறிய அளவிலான தேடுதல்களை அடுத்து களத்தில் மேலும் கடுமையான நடவடிக்கை தேவை என்று அமெரிக்கா, பாகிஸ்தானை வலியுறுத்தி வருகின்றது.
பகிஸ்தானில் உள்ள தலிபான்கள்முழு அளவிலான தாக்குதல்கள் நடத்தப்படலாம் என்ற அச்சம் காரணமாக பல பொதுமக்கள் ஏற்கனவே அங்கிருந்து இடம்பெயர்ந்துவிட்டார்கள்.
மிகவும் கரடுமுரடான மற்றும் ஒதுக்கப்புறமான இடமாக பிரபல்யமான அந்தப் பகுதியில், பனியும் கொட்ட ஆரம்பித்துவிட்டால், அங்கு எடுக்கப்படக் கூடிய நடவடிக்கை மிகவும் ஆபத்தானதாக அமையும்.
ஆகவே அமெரிக்க கூட்டணிக்கும், பாகிஸ்தானிய தலைவர்களுக்கும் இடையில் திரைமறைவில் போராட்டம் தீவிரமடைந்துவிட்டது.
தமது அரசாங்கத்துக்கு மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரம் உள்ள , பிரச்சினை மிக்க அந்தப் பிராந்தியத்தில், சக்தி மிக்க பழங்குடியினருக்கு எதிராக பெரும் போரை முன்னெடுக்க பாகிஸ்தானிய நிர்வாகம் இன்னமும் அச்சமிகு தயக்கத்துடனேயே இருக்கிறது.
பாகிஸ்தானில் உள்ள அமெரிக்க எதிர்ப்புணர்வு காரணமாகவும் இந்த பதற்றம் மேலும் அதிகரிக்கிறது.
அங்கு வளர்ந்து வருகின்ற பாதுகாப்பின்மையாலும் மற்றும் அமெரிக்கர்கள் தலையீடு செய்கிறார்கள் என்று தாம் நம்புவதாலும், பலர் மத்தியில் மன அழுத்தம் அதிகரித்து வருகிறது.
இவற்றையும் காண்க
செய்தியறிக்கை
செய்தியரங்கம்
நெஞ்சம் மறப்பதில்லை
தமிழிசை - ஓர் வரலாற்றுப் பார்வை
மின்அஞ்சலாக அனுப்புக
அச்சு வடிவம்
^^ மேலே செல்க
முகப்பு நினைவில் நின்றவை எம்மைப்பற்றி வானிலை
BBC News >> BBC Sport >> BBC Weather >> BBC World Service >> BBC Languages >>
உதவி தகவல் பாதுகாப்பு எம்மைத் தொடர்புகொள்ள
//-1?'https:':'http:';
var _rsRP=escape(document.referrer);
var _rsND=_rsLP+'//secure-uk.imrworldwide.com/';
if (parseInt(navigator.appVersion)>=4)
{
var _rsRD=(new Date()).getTime();
var _rsSE=1;
var _rsSV="";
var _rsSM=0.1;
_rsCL='';
}
else
{
_rsCL='';
}
document.write(_rsCL);
//]]>
உலக மட்டத்தில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் குணப்படுத்தப்படக் கூடிய நோய்களாலேயே அநாவசியமாக இறப்பதை, ஒப்பீட்டளவில் சிறிய தொகை பணத்தின் மூலமே, பெருமளவில் குறைக்க முடியும் என்று பொதுமக்களை உணரச்செய்யும் தமது மிகப்பெரிய பிரச்சாரத்தை, சர்வதேச உதவி நிறுவனமான ''சேவ் த சில்ட்ரன்'' அமைப்பு ஆரம்பிக்கிறது.
நாலாயிரம் கோடி டாலர்கள் கூடுதல் நிதி இதனை எட்டப் போதுமானது என்று அது கூறுகிறது.
இந்தியாவில் சிறப்பான பொருளாதார வளர்ச்சி காணப்படுகின்ற போதிலும், அங்கு சிறார் இறப்பு வீதம் மற்றும் சிறார் போஷாக்கின்மை ஆகியன அதிர்ச்சி தரக்ககூடிய அளவில் இருப்பதாக அது குறிப்பிடுகிறது.
இந்தியாவில் பிறக்கின்ற குழந்தைகளில், பிறந்த முதல் நாளிலேயே இறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை வருடத்துக்கு 4 லட்சம் என்பதுடன், உலகில் குழந்தைகளின் இறப்பு வீதத்தில் 20 வீதத்தை இந்தியா கொண்டிருக்கிறது.
இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை வழங்க பாஜக தேமுதிக எதிர்ப்பு
இந்தியாவில் உள்ள சில இலங்கை அகதிகள்தமிழகத்தில் உள்ள ஒரு லட்சத்திற்கும் மேலான இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை வழங்க வேண்டுமென்ற தமிழக முதல்வர் கருணாநிதியின் கோரிக்கைக்கு பாரதீய ஜனதாவும், தேசிய முற்போக்கு திராவிடர் கழகமும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இலங்கை இனப்பிரச்சினையின் விளைவாக இந்தியாவில் தஞ்சம் புகுந்து, தமிழகத்தில் பத்துப் பதினைந்து ஆண்டுகளாக அரசு நடத்திவரும் முகாம்களிலும் வெளியேயும் வாழ்ந்து வரும் அகதிகள் அனைத்து உரிமைகளும் பெற்று இந்தியாவிலேயே தொடர்ந்து வாழ வழிவகை செய்ய வேண்டும் என்று கடந்த சில நாட்களாக திமுக வற்புறுத்தி வருகிறது. இது தொடர்பாக முதல்வர் கருணாநிதியும் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருக்கிறார்.
பொதுவாக இக்கோரிக்கைக்கு தமிழகக் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. மத்திய உள்துறை அமைச்சரும் கோரிக்கை பரிசீலிக்கப்படுவதாகக் கூறியிருக்கிறார்.
அவ்வாறு இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு உரிமை பெற்றுத்தருவது இலங்கையில் தமிழ் இனமே இருக்கக் கூடாது என்று செயல்பட்டு வரும் அதிபர் ராஜபக்ஷவுக்கு துணைப் போவதாக அமையும் என பாரதீய ஜனதா கட்சி கூறியிருக்கிறது.
நேற்று சென்னையில் நடைபெற்ற தமிழக பா.ஜ.க.வின் செயற்குழுக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசும்போது கட்சியின் தமிழகப்பிரிவின் துணைத்தலைவர் எச். ராஜா இலங்கையின் பூர்வீக இனமான தமிழர்களை அந்த நாட்டிலேயே பாதுகாப்பாக வாழ்வதற்கான சூழ்நிலையை மத்திய, மாநில அரசுகள் அமைத்துத் தர வேண்டும் என வலியுறுத்தினார்.
சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசும்போது தேமுதிக அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியக் குடியேற்ற உரிமை வழங்குவது என்பது இலங்கையில் நடைபெறும் இனவெறி அரசின் கொள்கைகளை நாமே நிறைவேற்றி வைப்பதைப்போல் ஆகிவிடும், எனவே அத்தகைய கொள்கையினை தனது கட்சி ஒருபோதும் ஏற்காது என்றார்.
வவுனியா முகாம் மக்கள் மழைக்கு அஞ்சத் தேவையில்லை என்கிறது அரசாங்கம்
முகாம் மக்கள்வட இலங்கையில் பருவமழைக் காலம் நெருங்கிவருவதால், அங்குள்ள பெரிய இடம்பெயர்ந்தோர் முகாம்கள் நிலை தொடர்பில் அச்சம் கொள்ளத் தேவையில்லை என இலங்கை அரசாங்கம் உறுதியளித்துள்ளது.
இடம்பெயர்ந்தோர் முகாம்களில் மழைக்காலத்தை கருத்தில்கொண்டு வெள்ள வடிகால் பணிகள் வேகமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக கொழும்பில் செய்தியாளர்களைச் சந்தித்த இலங்கை மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
முகாம்களில் இருந்து மக்கள் விரைவாக விடுவிக்கப்பட வேண்டும் என ஐ.நா.வும், இலங்கையின் எதிர்க்கட்சிகளும் கோருகின்றன. முகாம்வாசிகளில் பத்து வீதத்திற்கும் குறைவானவர்களே இதுவரையில் வெளியில் விடப்பட்டுள்ளர்கள் என்பதை இலங்கை அதிகாரிகள் ஒப்புகொண்டுள்ளனர்.
இதனிடையே, இடம்பெயர்ந்தோர் முகாம்கள் நிரந்தர குடியிருப்புகளாகவோ, ஓரளவு நிரந்தர குடியிருப்புகளாகவோ மாற்றப்பட்டுவருவது கவலையளிப்பதாக மேலக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானில் அதிகரித்துவரும் வன்செயல்கள்- ஒரு ஆய்வு
இன்று தாக்குதல் நடந்த இடம்பாகிஸ்தானில் உலக உணவுத்திட்டத்தின் அலுவலகத்தில் குண்டு ஒன்று வெடித்துள்ளது. அதில் மூவர் கொல்லப்பட்டதுடன், மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.
அங்கு தலைநகரில் நடக்கும் தொடர்ச்சியான தாக்குதல்களில் தற்போது நடந்திருப்பது இது.
பெரும்பாலான இப்படியான தாக்குதல்கள் பாதுகாப்பு படைகளை இலக்கு வைத்ததாய் அல்லது மேற்குலகுடன் பலமான தொடர்புடைய வணிகங்கள் அல்லது அமைப்புக்களை இலக்கு வைத்ததாய் இருக்கும்.
கடந்த இரு வருடங்களில் தீவிரவாதிகளின் வன்செயல்கள் அதிகரித்துள்ள நிலையில், கிளர்ச்சிக்காரர்கள் நகரங்களில் உள்ள முக்கியமான இடங்களை இலக்கு வைத்து தாக்குவதில் அதிக கவனத்தைக் குவிக்கிறார்கள்.
இந்தத் தாக்குதலை யார் நடத்தினார்கள் என்பது தெரியவில்லை. ஆனால், தலிபான் ஆதரவு தலைவர் ஹக்கிமுல்லா மெஃசுட் அவர்களால் அண்மையில் விடுக்கப்பட்ட அச்சுறுத்தல்களை அடுத்து இது நடந்திருக்கிறது.
கடந்த ஆகஸ்டில் கொல்லப்பட்ட தீவிரவாதத் தலைவர், பைதுல்லா மெஃசுட் அவர்களின் மரணத்துக்கான பதிலடியாக, தாக்குதல்கள் அதிகரிக்கப்படுமென்று அவர் மிரட்டியிருந்தார்.
பழங்குடியினப் பகுதியில் நடத்தப்பட்ட வான் தாக்குதலுக்கு பதிலடி வழங்கப்படும் என்றும் அவர் கூறியிருந்தார்.
இவையனைத்தும் பாகிஸ்தான் அரசாங்கத்தின் மீதான அழுத்தங்களை அதிகரிக்கச் செய்துள்ளன.
அமெரிக்கர்களின் ஆதரவுடன் தெற்கு வசிரிஸ்தானில், பாகிஸ்தான் படைகளால் முழுமையான இராணுவ நடவடிக்கை ஒன்று நடத்தப்படும் என்ற ஊகமும் அதிகரித்து வருகின்றது.
அங்கு கடந்த பல மாதங்களாக நடத்தப்பட்ட வான் தாக்குதல்கள் மற்றும் சிறிய அளவிலான தேடுதல்களை அடுத்து களத்தில் மேலும் கடுமையான நடவடிக்கை தேவை என்று அமெரிக்கா, பாகிஸ்தானை வலியுறுத்தி வருகின்றது.
பகிஸ்தானில் உள்ள தலிபான்கள்முழு அளவிலான தாக்குதல்கள் நடத்தப்படலாம் என்ற அச்சம் காரணமாக பல பொதுமக்கள் ஏற்கனவே அங்கிருந்து இடம்பெயர்ந்துவிட்டார்கள்.
மிகவும் கரடுமுரடான மற்றும் ஒதுக்கப்புறமான இடமாக பிரபல்யமான அந்தப் பகுதியில், பனியும் கொட்ட ஆரம்பித்துவிட்டால், அங்கு எடுக்கப்படக் கூடிய நடவடிக்கை மிகவும் ஆபத்தானதாக அமையும்.
ஆகவே அமெரிக்க கூட்டணிக்கும், பாகிஸ்தானிய தலைவர்களுக்கும் இடையில் திரைமறைவில் போராட்டம் தீவிரமடைந்துவிட்டது.
தமது அரசாங்கத்துக்கு மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரம் உள்ள , பிரச்சினை மிக்க அந்தப் பிராந்தியத்தில், சக்தி மிக்க பழங்குடியினருக்கு எதிராக பெரும் போரை முன்னெடுக்க பாகிஸ்தானிய நிர்வாகம் இன்னமும் அச்சமிகு தயக்கத்துடனேயே இருக்கிறது.
பாகிஸ்தானில் உள்ள அமெரிக்க எதிர்ப்புணர்வு காரணமாகவும் இந்த பதற்றம் மேலும் அதிகரிக்கிறது.
அங்கு வளர்ந்து வருகின்ற பாதுகாப்பின்மையாலும் மற்றும் அமெரிக்கர்கள் தலையீடு செய்கிறார்கள் என்று தாம் நம்புவதாலும், பலர் மத்தியில் மன அழுத்தம் அதிகரித்து வருகிறது.
இவற்றையும் காண்க
செய்தியறிக்கை
செய்தியரங்கம்
நெஞ்சம் மறப்பதில்லை
தமிழிசை - ஓர் வரலாற்றுப் பார்வை
மின்அஞ்சலாக அனுப்புக
அச்சு வடிவம்
^^ மேலே செல்க
முகப்பு நினைவில் நின்றவை எம்மைப்பற்றி வானிலை
BBC News >> BBC Sport >> BBC Weather >> BBC World Service >> BBC Languages >>
உதவி தகவல் பாதுகாப்பு எம்மைத் தொடர்புகொள்ள
//-1?'https:':'http:';
var _rsRP=escape(document.referrer);
var _rsND=_rsLP+'//secure-uk.imrworldwide.com/';
if (parseInt(navigator.appVersion)>=4)
{
var _rsRD=(new Date()).getTime();
var _rsSE=1;
var _rsSV="";
var _rsSM=0.1;
_rsCL='';
}
else
{
_rsCL='';
}
document.write(_rsCL);
//]]>
Monday, October 5, 2009
Thursday, October 1, 2009
கேரளா தேக்கடியில் படகு விபத்து - சுற்றுலா பயணிகள் பலர் பலி
கேரள மாநிலம் தேக்கடியில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் குறைந்தது 25 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனர்.
பிரபல சுற்றுலா மையமான தேக்கடியில் உள்ள ஏரியில் தினசரி மாலை 4 மணிக்கு சுற்றுலாப் பயணிகளுக்காக படகு சவாரி நடத்தப்படும். அதன்படி, இன்று ஒரு படகில் 74 பயணிகள் ஏறினார்கள். இரண்டு அடுக்குகள் கொண்ட அந்தப் படகில் மேல் அடுக்கிலும் பயணிகள் இருந்தார்கள்.
அடர்ந்த வனப்பகுதியான அந்த இடத்தைச் சுற்றிப் பார்த்துவிட்டு, பயணிகள் படகில் திரும்பிக் கொண்டிருந்தார்கள். மணக்கப்பாரா என்ற இடத்தில், காட்டு எருமைகள் நிற்பதை சிலர் பார்த்தனர். அதைப் பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில், படகின் மேல் அடுக்கில் இருந்த பயணிகள் அனைவரும் ஒருபுறமாக சேர்ந்தபோது, நிலை தடுமாறி படகு கவிழ்ந்தது.
அதையடுத்து, படகில் இருந்த பயணிகள் தண்ணீரில் மூழ்கினார்கள். இதுவரை 25 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. உயிருடன் மீட்கப்பட்டவர்களில் 9 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. மேலும் 30 பேரைக் காணவில்லை என்று அங்குள்ள செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அந்தப்படகில் பயணம் செய்தவர்களில் பெரும்பாலானவர்கள் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரிகிறது.
அந்தப் பகுதியில் வெளிச்சம் இல்லாத காரணத்தால், மீட்புப் பணிகளில் இடையூறு ஏற்பட்டுள்ளது.
இதனிடையே, பிகார் மாநிலத்தில் கடந்த திங்கட்கிழமை நடந்த இரண்டு படகு விபத்துக்களில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 56 ஆக அதிகரித்துள்ளது.
--------------------------------------------------------------------------------
ஏர் இந்தியா விமான சேவை வழமைக்குத் திரும்பியது
ஏர் இந்தியா விமானம்
ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் செலவு வெட்டை எதிர்த்து போராட்டம் நடத்திய விமான ஓட்டிகள் அதனை கைவிட்டு பணிக்கு திரும்பியுள்ளனர்.
இந்த சர்ச்சைக்கு காரணமான விவகாரம் குறித்து மறுபரிசீலனை செய்ய அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளதாக அவர்கள் கூறுகிறார்கள்.
சுமார் 200 விமான ஓட்டிகள் சுகவீன விடுப்பு போராட்டத்தை ஆரம்பித்ததை அடுத்து சனிக்கிழமை முதல் பல விமான சேவைகள் ரத்துச் செய்யப்பட்டன.
இந்த மாத முற்பகுதியில், மற்றுமொரு விமான நிறுவனமான ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனத்தின் விமான ஓட்டிகளும் இதேபோன்ற போராட்டத்தில் ஈடுபட்டதால், 5 நாட்களுக்கு விமான சேவைகள் ரத்துச் செய்யப்பட்டன.
--------------------------------------------------------------------------------
இலங்கையின் கிழக்கில் அபிவிருத்திக்குட்படாத கிராமங்கள்
கிழக்கு கிராம வாசிகள்
இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் பரவலாக அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றபோதிலும் சில பிரதேசங்களில் மருத்துவ வசதிகள் உள்ளிட்ட அடிப்படை உட்கட்டமைப்பு தேவைகள் சரிவர பூர்த்தி செய்யப்படவில்லையென மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக கடந்த காலங்களில் மோதல்கள் நடைபெற்ற வாகரைப் பிரதேசத்திலிருந்து தொலைவாக அமைந்துள்ள கட்டுமுறிவு, ஆண்டான்குளம், மருதன்கேணிகுளம்,கிரிமிச்சை போன்ற கிராமங்களில்
எந்தவிதமான மருத்துவ வசதிகளும் இன்றி மக்கள் பெரும் சிரமப்படுவதாகக் கூறுகின்றனர்.
வாகரையிலிருந்து சுமார் 25 மைல் தூரத்திலுள்ள இந்த கிராமங்களுக்கு சீரான பேருந்து சேவையும் இல்லாதுள்ளதாகவும், மாகாண அமைச்சர்கள் அங்கு சென்று பார்ப்பது கூட இல்லையெனவும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சசிதரன் கவலை தெரிவிக்கின்றார்.
இது தொடர்பாக கிழக்குமாகாண சுகாதார அமைச்சர் ஹிஸ்புல்லாவிடம் கேட்டபோது, அதிகாரிகள் குழு ஒன்றினை சம்பந்தப்பட்ட பகுதிக்கு அனுப்பி வைத்து அங்குள்ள நிலைமையை கண்டறிந்து,
தேவையானால் அங்கு வைத்தியசாலை ஒன்றினை அமைப்பதற்கான நடவடிக்கையினை மேற்கொள்ளப்போவதாக தெரிவித்தார்.
--------------------------------------------------------------------------------
இந்தியாவில் கடும் வறட்சி
நீரின்றி வறண்ட நிலங்கள்
இந்தியாவில் இந்த ஆண்டு பருவமழை, சராசரி அளவைவிட 23 சதம் குறைவாகப் பெய்திருப்பதை அடுத்து, கடந்த 1972 ஆம் ஆண்டுக்குப் பிறகு நாடு கடும் வறட்சியைச் சந்தித்துள்ளது.
நான்கு மாத பருவமழைக் காலம் இன்றுடன் முடிவடைவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அதன்படி, இந்தக் காலகட்டத்தில் சராசரி அளவைவிட 23 சதம், மழை குறைவாகப் பெய்துள்ளது.
அதிகபட்சமாக, இந்தியாவின் வடமேற்குப் பகுதியில் 36 சதம் மழை குறைவாகப் பெய்துள்ளது. குறைந்தபட்சமாக, தென்மாநிலங்களில் ஏழு சதம் அளவுக்கு மழை பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது. ஜூன் மாதத்தில் கடும் வறட்சி ஏற்பட்ட நிலையில், ஆகஸ்ட் மாதம் நாடு முழுவதும் கணிசமாக பருவமழை பெய்தது. இருந்தபோதிலும், சராசரி அளவுக்கு மழை கிடைக்கவில்லை.
இது குறித்த மேலதிக செய்திகளை இன்றைய செய்தியரங்கத்தில் கேட்கலாம்.
இவற்றையும் காண்க
செய்தியறிக்கை
செய்தியரங்கம்
நெஞ்சம் மறப்பதில்லை
தமிழிசை - ஓர் வரலாற்றுப் பார்வை
மின்அஞ்சலாக அனுப்புக அச்சு வடிவம்
கேரள மாநிலம் தேக்கடியில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் குறைந்தது 25 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனர்.
பிரபல சுற்றுலா மையமான தேக்கடியில் உள்ள ஏரியில் தினசரி மாலை 4 மணிக்கு சுற்றுலாப் பயணிகளுக்காக படகு சவாரி நடத்தப்படும். அதன்படி, இன்று ஒரு படகில் 74 பயணிகள் ஏறினார்கள். இரண்டு அடுக்குகள் கொண்ட அந்தப் படகில் மேல் அடுக்கிலும் பயணிகள் இருந்தார்கள்.
அடர்ந்த வனப்பகுதியான அந்த இடத்தைச் சுற்றிப் பார்த்துவிட்டு, பயணிகள் படகில் திரும்பிக் கொண்டிருந்தார்கள். மணக்கப்பாரா என்ற இடத்தில், காட்டு எருமைகள் நிற்பதை சிலர் பார்த்தனர். அதைப் பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில், படகின் மேல் அடுக்கில் இருந்த பயணிகள் அனைவரும் ஒருபுறமாக சேர்ந்தபோது, நிலை தடுமாறி படகு கவிழ்ந்தது.
அதையடுத்து, படகில் இருந்த பயணிகள் தண்ணீரில் மூழ்கினார்கள். இதுவரை 25 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. உயிருடன் மீட்கப்பட்டவர்களில் 9 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. மேலும் 30 பேரைக் காணவில்லை என்று அங்குள்ள செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அந்தப்படகில் பயணம் செய்தவர்களில் பெரும்பாலானவர்கள் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரிகிறது.
அந்தப் பகுதியில் வெளிச்சம் இல்லாத காரணத்தால், மீட்புப் பணிகளில் இடையூறு ஏற்பட்டுள்ளது.
இதனிடையே, பிகார் மாநிலத்தில் கடந்த திங்கட்கிழமை நடந்த இரண்டு படகு விபத்துக்களில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 56 ஆக அதிகரித்துள்ளது.
--------------------------------------------------------------------------------
ஏர் இந்தியா விமான சேவை வழமைக்குத் திரும்பியது
ஏர் இந்தியா விமானம்
ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் செலவு வெட்டை எதிர்த்து போராட்டம் நடத்திய விமான ஓட்டிகள் அதனை கைவிட்டு பணிக்கு திரும்பியுள்ளனர்.
இந்த சர்ச்சைக்கு காரணமான விவகாரம் குறித்து மறுபரிசீலனை செய்ய அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளதாக அவர்கள் கூறுகிறார்கள்.
சுமார் 200 விமான ஓட்டிகள் சுகவீன விடுப்பு போராட்டத்தை ஆரம்பித்ததை அடுத்து சனிக்கிழமை முதல் பல விமான சேவைகள் ரத்துச் செய்யப்பட்டன.
இந்த மாத முற்பகுதியில், மற்றுமொரு விமான நிறுவனமான ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனத்தின் விமான ஓட்டிகளும் இதேபோன்ற போராட்டத்தில் ஈடுபட்டதால், 5 நாட்களுக்கு விமான சேவைகள் ரத்துச் செய்யப்பட்டன.
--------------------------------------------------------------------------------
இலங்கையின் கிழக்கில் அபிவிருத்திக்குட்படாத கிராமங்கள்
கிழக்கு கிராம வாசிகள்
இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் பரவலாக அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றபோதிலும் சில பிரதேசங்களில் மருத்துவ வசதிகள் உள்ளிட்ட அடிப்படை உட்கட்டமைப்பு தேவைகள் சரிவர பூர்த்தி செய்யப்படவில்லையென மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக கடந்த காலங்களில் மோதல்கள் நடைபெற்ற வாகரைப் பிரதேசத்திலிருந்து தொலைவாக அமைந்துள்ள கட்டுமுறிவு, ஆண்டான்குளம், மருதன்கேணிகுளம்,கிரிமிச்சை போன்ற கிராமங்களில்
எந்தவிதமான மருத்துவ வசதிகளும் இன்றி மக்கள் பெரும் சிரமப்படுவதாகக் கூறுகின்றனர்.
வாகரையிலிருந்து சுமார் 25 மைல் தூரத்திலுள்ள இந்த கிராமங்களுக்கு சீரான பேருந்து சேவையும் இல்லாதுள்ளதாகவும், மாகாண அமைச்சர்கள் அங்கு சென்று பார்ப்பது கூட இல்லையெனவும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சசிதரன் கவலை தெரிவிக்கின்றார்.
இது தொடர்பாக கிழக்குமாகாண சுகாதார அமைச்சர் ஹிஸ்புல்லாவிடம் கேட்டபோது, அதிகாரிகள் குழு ஒன்றினை சம்பந்தப்பட்ட பகுதிக்கு அனுப்பி வைத்து அங்குள்ள நிலைமையை கண்டறிந்து,
தேவையானால் அங்கு வைத்தியசாலை ஒன்றினை அமைப்பதற்கான நடவடிக்கையினை மேற்கொள்ளப்போவதாக தெரிவித்தார்.
--------------------------------------------------------------------------------
இந்தியாவில் கடும் வறட்சி
நீரின்றி வறண்ட நிலங்கள்
இந்தியாவில் இந்த ஆண்டு பருவமழை, சராசரி அளவைவிட 23 சதம் குறைவாகப் பெய்திருப்பதை அடுத்து, கடந்த 1972 ஆம் ஆண்டுக்குப் பிறகு நாடு கடும் வறட்சியைச் சந்தித்துள்ளது.
நான்கு மாத பருவமழைக் காலம் இன்றுடன் முடிவடைவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அதன்படி, இந்தக் காலகட்டத்தில் சராசரி அளவைவிட 23 சதம், மழை குறைவாகப் பெய்துள்ளது.
அதிகபட்சமாக, இந்தியாவின் வடமேற்குப் பகுதியில் 36 சதம் மழை குறைவாகப் பெய்துள்ளது. குறைந்தபட்சமாக, தென்மாநிலங்களில் ஏழு சதம் அளவுக்கு மழை பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது. ஜூன் மாதத்தில் கடும் வறட்சி ஏற்பட்ட நிலையில், ஆகஸ்ட் மாதம் நாடு முழுவதும் கணிசமாக பருவமழை பெய்தது. இருந்தபோதிலும், சராசரி அளவுக்கு மழை கிடைக்கவில்லை.
இது குறித்த மேலதிக செய்திகளை இன்றைய செய்தியரங்கத்தில் கேட்கலாம்.
இவற்றையும் காண்க
செய்தியறிக்கை
செய்தியரங்கம்
நெஞ்சம் மறப்பதில்லை
தமிழிசை - ஓர் வரலாற்றுப் பார்வை
மின்அஞ்சலாக அனுப்புக அச்சு வடிவம்